search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜார்கண்ட் கவர்னர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
    • தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார்.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

    அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் நியமனம் செய்யும் வரை அவர் இந்த பொறுப்புகளை வகிப்பார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலகியதை தொடர்ந்து அதே பதவியை கவனிக்கும் பொறுப்பு மற்றொரு தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேண்டாத ஒரு விவாதத்தை எடுத்துக்கொண்டு அதில் அரசியல் லாபம் காண்பது தான் தி.மு.க.வின் அணுகுமுறையாக உள்ளது.
    • தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது.

    கோவை:

    ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தப்படுவதும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரவணைப்பது போல தமிழக அரசு செயல்படுவதும் கண்டனத்துக்குரியது.

    குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை தண்டனையில் இருந்து தப்ப வைப்பதும், மன்னிப்புத்தருவதும் அதற்கு அண்ணாவின் பெயரை உபயோகப்படுத்துவதும் சரியான அணுகுமுறை அல்ல.

    மக்களுக்கு நன்மை செய்வதை காட்டிலும் வேண்டாத ஒரு விவாதத்தை எடுத்துக்கொண்டு அதில் அரசியல் லாபம் காண்பது தான் தி.மு.க.வின் அணுகுமுறையாக உள்ளது. தேவையற்றதை ஒதுக்கிவிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்தில் தி.மு.க. அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது. இதில் காவல்துறையினர் கவனத்தை செலுத்தி கஞ்சாவை தமிழகத்தில் இருந்து முற்றிலும் அகற்ற வேண்டும். போதையில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும்போது தான் தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி விரைவாக பயணிக்கும். பிரதமர் நரேந்திரமோடியை தமிழர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சாதிவாரியான கணக்கெடுப்பு தேவையா, இல்லையா? என்பதை காலமும், சமூகமும் தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலம், காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வாடிக்கையாக மாறியிருக்கிறது.
    • முடியாது என்று தெரிந்தே நீங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்.

    கோவை:

    ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை ஒருபோதும் இந்து மதமோ, சனாதன தர்மமோ வலியுறுத்தவில்லை. பல்வேறு தொழில்களை செய்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து கொண்டிருக்கிறார்கள். காலம், காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வாடிக்கையாக மாறியிருக்கிறது.

    இவர்கள் இன்னும் 1952-ல் இருப்பதாகவே நான் கருதுகிறேன். காலம் மாறி வருகிறது. மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாரம்பரியமும், அதனுடைய பெருமையும் காக்கப்பட வேண்டும் என்று நினைக்கிற தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.

    தேவையில்லாதவற்றை தொடாமல் தமிழகத்தின் முன்னேற்றத்தில் தி.மு.க. அரசு கருத்தைச் செலுத்துவதும், கவனத்தை செலுத்துவதும், தி.மு.க.விற்கும், தமிழகத்திற்கும் நல்லது. ஒட்டு மொத்தத்தில் தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    அடிக்கடி தேர்தல் என்பது ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல் என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும்.

    ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன குறை கண்டு வேண்டாம் என்கிறார்கள்? ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் முடிவுகளை எடுப்பது எந்த கட்சியாக இருந்தாலும் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அது சாத்தியம்.

    தி.மு.க. பகையை வளர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு எதையும் எதிர்பார்க்காத நல்ல கவர்னர் கிடைத்திருக்கிறார். அதைவிட இவர்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியவில்லை. தமிழ் மீதும், தமிழரின் மீதும், தமிழர்களின் முன்னேற்றத்தின் மீதும், அக்கறை கொண்ட கவர்னர் கிடைத்திருக்கிறார்.

    அதை விட்டுவிட்டு இவர்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக நீட் தேர்வு ரத்து சட்ட மசோதாவை அமல்படுத்த முடியுமா?. முடியாது என்று தெரிந்தே நீங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். அதன் பழியை கவர்னர் மீது போடுகிறீர்கள்.

    ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து என்றீர்கள். நீங்கள் முதல் கையெழுத்து போட்டால் அது சட்டமாகிவிடுமா என்ன? எதுவெல்லாம் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ எதெல்லாம் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இருக்கிறதோ அதில் மட்டும்தான் கவர்னர் கையெழுத்திட முடியும்.

    ஏழை மக்களின் நிலையை கண்டு, பொருளாதார நிலையை மனதில் கொண்டு ஏழை மக்களிடம் அதன் பலனை கொண்டு செல்ல வேண்டும் என கருத்தில் கொண்டே ரூ.200 கியாஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது

    பா.ஜ.க.விற்கு எதிரான கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்கள் கருத்து. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும், ஜே.பி. நட்டாவுக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×