search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 மாநில சட்டசபை தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 28 கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
    • கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    4 மாநில தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் அந்த கட்சி ஆட்சியை இழந்தது. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

    சத்தீஸ்கரில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து வந்த காங்கிரஸ் நேரம் செல்ல செல்ல பின்தங்கியது. இதனால் அந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது.தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் இமாலய வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த நிலையில் 4 மாநில தேர்தல் முடிவு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. 28 கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

    இந்த கூட்டம் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அவரது வீட்டில் மாலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் 4 மாநில தேர்தல் முடிவு தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் கட்சிகள் தனியாக போட்டியிட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எப்படி எதிர்கொள்வது? பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு உள்பட முக்கிய முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 1961 வாக்குகள் முன்னிலை.
    • காஜ்வெல் தொகுதியில் முதல் சுற்று முடிவில் சந்திரசேகர ராவ் 7028 வாக்குகள் முன்னிலை.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னணி வகிக்கிறது. இதனால் தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சராக இருந்த சந்திரசேகர ராவின், ஹாட்ரிக் வெற்றி முடிவுக்கு வர இருக்கிறது.

    சந்திரசேகர ராவ் இந்த முறை கமாரெட்டி, காஜ்வெல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். கமாரெட்டி தொகுதியில் அவரை எதிர்த்து அனுமுலா ரேவந்த் ரெட்டி போட்டியிட்டுள்ளார். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. 7 -வது சுற்று முடிவில் ரேவந்த் ரெட்டி 22515  வாக்குகள் பெற்று 1961 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    காஜ்வெல் தொகுதியில் 5  சுற்று முடிவில் சந்திரசேகர ராவ் 23280  வாக்குகள் பெற்று7028 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கடந்த தேர்தலை விட 35 இடங்களில் பின்தங்கியுள்ளது.
    • பா.ஜனதா 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் 90 இடங்களில் 68 இடங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்த முறையும் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. இதனால் எளிதாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் இரு கட்சிகளும் தலா 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 52 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. தொடர்ந்து பா.ஜனதா முன்னிலை பெற்றதுடன், ஆட்சி அமைப்பதற்கான 46 இடங்களையும் தாண்டி முன்னணி பெற்றது. பா.ஜனதா 54 இடங்களில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் 33 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானாவில் பா.ஜனதா கூட்டணி 11 இடங்களில் முன்னிலை.
    • சத்தீஸ்கரில் பா.ஜனதா கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

    ராஜஸ்தானில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. தற்போதைய நிலையில் பா.ஜனதா 102 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பா.ஜனதா நான்கு மாநிலங்களில் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 8 இடங்கள் அதிகமாகும்.

    ராஜஸ்தானில் 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. கடந்த தேர்தலை விட 33 இடங்கள் அதிகமாகும்.

    சத்தீஸ்கரில் பா.ஜனதா கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 20 இடங்கள் அதிகமாகும்.

    தெலுங்கானாவில் பா.ஜனதா கூட்டணி 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 11 இடங்கள் அதிகமாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது.
    • தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது.

    4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதனைத்தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன

    காலை 8.40 நிலவரப்படி பா.ஜனதா 87 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்கிளிலும் முன்னிலை வகித்தன. பின்னர் நேரம் செல்ல செல்ல இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலைப் பெற்று வந்தன. இதனால் கடும் இழுபறி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், 10 மணி நிலவரப்படி பா.ஜனதா முன்னிலை பெற்றது. 199 இடங்களில் 103 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் 252 பெண்கள் உள்பட 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
    • ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு கடந்த 25-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 74.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக சட்டசபை தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது.

    இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதாவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது.

    மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணியும், சோரம் மக்களின் இயக்கமும் நேரடியாக மோதிக்கொள்ள, காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளும் சேர்ந்து களத்தை வலுப்படுத்தின.

    மத்திய பிரதேசம்

    பா.ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. மாநிலத்தில் 252 பெண்கள் உள்பட 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    அங்கு தபால் வாக்குகளையும் சேர்த்து 77.82 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் 52 மாவட்டங்களின் தலைநகரங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

    முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், பக்கன்சிங் குலாஸ்தே, பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா என ஏராளமான முக்கிய வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும்.

    மாநிலத்தில் பா.ஜனதாவே மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து இருந்தன. இது அந்த கட்சியினருக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

    அதேநேரம் இதை புறக்கணித்துள்ள காங்கிரசார், மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்தும், 2020-ம் ஆண்டு பா.ஜனதாவிடம் பறிகொடுத்ததைப்போல இந்த முறை நடக்காது என்றும் அவர்கள் உறுதிபட கூறியுள்ளனர்.

    ராஜஸ்தான்

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு கடந்த 25-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 74.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    முதல்-மந்திரி அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களும், முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சி தலைவர் ராஜேந்திர ரத்தோர் உள்ளிட்ட பா.ஜனதா வேட்பாளர்களும் தங்கள் அரசியல் எதிர்காலத்தை அறிய ஆவலுடன் உள்ளனர்.

    மாநிலத்தில் கடந்த சில தேர்தல்களாகவே ஒவ்வொரு 5 ஆண்டும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.

    தற்போது அங்கே காங்கிரஸ் ஆண்டுவரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகள் தங்களது ஆட்சி என பா.ஜனதாவினர் நம்புகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அவர்களுக்கு ஆதரவாகவே உள்ளன.

    சத்தீஸ்கர்

    காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் கடந்த மாதம் 7 மற்றும் 17-ந்தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 76.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், துணை முதல்-மந்திரி சிங் தியோ, முன்னாள் முதல்-மந்திரி ராமன் சிங் உள்பட ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1,181 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும்.

    அங்கு தேர்தலுக்கு பின்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் காங்கிரசே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் என தெரிய வந்திருக்கிறது.

    தெலுங்கானா

    பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆளும் தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. அங்கு பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவியது.

    இந்த கட்சிகளை சேர்ந்த 2,290 வேட்பாளர்கள் போட்டிக்கோதாவில் உள்ளனர். இதில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அவரது மகன் கே.டி. ராமாராவ், காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி.க்கள் பண்டி சஞ்சய் குமார், அரவிந்த் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். மாநில தேர்தலில் 71.34 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    தெலுங்கானா பிரிவினைக்கு முக்கிய பங்காற்றிய சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி, மாநிலத்தில் கடந்த 2 முறையாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. அங்கு ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் அந்த கட்சி உள்ளது.

    ஆனால் இந்த முறை மாநில மக்கள் மாற்றத்தை சிந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியும் இந்த தேர்தல்களை அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவே கருதி களப்பணி ஆற்றின.

    எனவே இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்காக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது. இவ்வாறு ஆவலை தூண்டியிருக்கும் இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பலுக்குள் தெரிந்துவிடும்.

    • நான்கு 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த வேட்பாளர்கள், கட்சி முகவர்கள் கடும் சோதனைக்குப்பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்பின் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல்.
    • ஆனால், நான்கு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. மிசோரம் மாநிலம் வாக்கு எண்ணிக்கை நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. சத்தீஸ்கர், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    என்றபோதிலும், அந்தந்த கட்சித் தலைவர்கள் நான்கு மாநிலங்களிலும் நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் எனத் தெரிவித்து வருகின்றனர்.

    இன்று வாக்கு எண்ணிக்கையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். அதன்பின் வாக்கு எந்திரங்கள் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன் திரண்டுள்ளனர். அவர்கள் கைகளில் பதாதைகளுடன் நின்றுள்ளனர். மேலும், சிலர் பட்டாசு வெடித்து தற்போதே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    ஒரு காங்கிரஸ் தொண்டர் ஹனுமான் வேடமணிந்து ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மிசோரம் மாநிலத்தில் மட்டும் ஓட்டு எண்ணிக்கையை 4-ந் தேதிக்கு தள்ளி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. மிசோரமில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதல்கட்டாக 20 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக சத்தீஸ்கரில் 2-வது கட்டமாக 70 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடந்தது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 199 தொகுதிகளில் கடந்த 25-ந்தேதியும், தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் நேற்று முன்தினமும்(30-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடந்தது.

    மத்திய பிரதேசத்தில் 76.22 சதவீதமும், ராஜஸ்தானில் 73.92 சதவீதமும், தெலுங்கானாவில் 71.34 சதவீதமும், மிசோரமில் 77.04 சதவீதமும், சத்தீஸ்கரில் 76.31 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவானது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. ஓட்டு எந்திரங்களுக்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புடன் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. பின்னர் ஓட்டு எந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி தொடங்குகிறது.

    இதன் முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களின் புனிதநாள் என்பதால் அவர்கள் தேவாலயங்களுக்கு செல்வார்கள். இதனால் ஓட்டு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார்கள். மேலும் நேற்று இந்த கோரிக்கைக்காக போராட்டமும் நடந்தது. இதையடுத்து கடைசி நேரத்தில் மிசோரம் மாநிலத்தில் மட்டும் ஓட்டு எண்ணிக்கையை 4-ந் தேதிக்கு (நாளை மறுநாள்) தள்ளி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மற்ற 4 மாநிலங்களிலும் ஏற்கனவே அறிவித்தபடி நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் பாரதிய ஜனதா-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசும் ஆளும் கட்சியாக உள்ளது.

    தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்ட்ரீய சமிதி ஆட்சியில் உள்ளது.

    தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றும் என்றும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென் மாநிலமான தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் மிசோரமில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலின் போதும் தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்புகள் சரியாக இருந்தது. அதே போல இந்த கருத்துக்கணிப்பின் படி தேர்தல் முடிவுகள் அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. நாளை ஓட்டு எண்ணிக்கையின் போது 4 மாநிலங்களிலும் யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள்? என்பது தெரிந்து விடும். வெற்றியை கொண்டாட பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.

    • தமிழக முழுவதுமே கொலை களமாக மாறி வருகிறது.
    • காவல்துறை சுதாரித்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு குற்றங்களை தடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. மழை, வெள்ளம் வருவதும் அதனை பார்வையிட வேட்டியை மடித்துக்கொண்டு முன்பு கலைஞர், பின்பு ஸ்டாலின், அதன் பின்பு தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், இனி அவரது மகன் இதே போல பார்வையிட செல்வார். இதற்கு நிரந்தர தீர்வு காண அவர்களிடம் எந்த ஒரு தீர்வும் கிடையாது.

    சென்னையில் மழை வெள்ளத்தோடு வீடுகளுக்குள் சாக்கடை நீர் செல்கிறது. மக்கள் மிகப்பெரிய அவதியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். உலக அளவிலான நிபுணர்களை வரவழைத்து இதற்கு தீர்வு காண வேண்டும். முன்பு ஜெனிவாவில் இது போன்ற நிலை இருந்தது அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற நடவடிக்கை ராஜஸ்தானில் கடைசியாக நடைபெற்றுள்ளது. தற்போது இங்கு நடைபெற்றுள்ளது. இது முதலும் முடிவும் அல்ல, அந்தத் துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அனைவருமே தவறானவர்கள் என்று பார்ப்பது சரியல்ல.

    இதுபோல காவல்துறையில் ஒருவர் தவறு செய்தால் காவல்துறை முழுமையாக தவறு என்று கூற முடியுமா? காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் தமிழக அரசியல்வாதிகள் அரசியல் முதிர்ச்சி இன்றி பேசி வருகின்றனர்.

    நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர உள்ளது. தெலுங்கானாவில் கடந்த முறை ஒரு இடத்தில் வென்ற நிலையில் இந்த முறை இரட்டை இலக்கங்களில் பா.ஜ.க. வெற்றி பெற உள்ளது. மிசோராமில் அந்த மாநில கட்சி வெற்றி பெரும் சூழல் உள்ளது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அங்கு துடைத்து எறியப்படும் நிலையில் உள்ளது.

    சத்தீஸ்கரில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் முழுமையாக தெரியவரும்.


    உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறினார்கள். அரசியலுக்கு வரவழைக்கப்பட்டார். எம்.எல்.ஏ. ஆகமாட்டார் என்றார்கள். எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டார், அமைச்சராக மாட்டார் என்றார்கள். அமைச்சராக்கப்பட்டார். அதுபோல துணை முதல்வர் ஆக மாட்டார் என்று கூறினால் ஆவார் என்று அர்த்தம். அது அவர்கள் விருப்பம். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி, நெல்லையில் படுகொலைகள் நடைபெற்றுள்ளது. தமிழக முழுவதுமே கொலை களமாக மாறி வருகிறது. காவல்துறை சுதாரித்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு குற்றங்களை தடுக்க வேண்டும்.

    மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு அரசியல் சூழல் மாறி இருப்பதன் காரணமாக இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.
    • வாக்குப்பதிவு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைப்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது.

    அதன்படி, மிசோரம் மாநிலத்தில் கடந்த 7-ந் தேதியும் மத்திய பிரதேசத்தில் 17-ந் தேதியும், ராஜஸ்தானில் 25-ந் தேதியும், தெலுங்கானாவில் 30-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக 7 மற்றும் 14-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மிசோரம் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 3ம் தேதி நடைபெற இருந்த மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அறிவித்துள்ளது.

    • ம.பி.யில் பா.ஜனதா 100 முதல் 123 இடங்களையும், காங்கிரஸ் 102 முதல் 125 இடங்களையும் பெறும் என தெரிய வந்துள்ளது.
    • 86 முதல் 106 இடங்கள் வரை ஆளும் காங்கிரஸ் பெறும் எனவும் பா.ஜனதா 80 முதல் 100 இடங்கள் வரை கைப்பற்றும்

    5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும், தெலுங்கானா, சத்தீஸ்காரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.

    இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்...

    ராஜஸ்தான் மாநில மந்திரி மகோஷ ஜோஷி: முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ராஜஸ்தானில ஆட்சியமைக்கும். அதுபோக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்: மற்ற மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு சிறப்பாக உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சூழ்நிலைய நன்றாக இருக்கிறது. தெலுங்கானாவில் நாங்கள் 80 சதவீத இடங்களை பிடிப்போம். காங்கிரஸ் 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும்.

    பா.ஜனதா சீனியர் தலைவர் சரோஜ் பாண்டே (சத்தீஸ்கர்): பா.ஜனதா ஏராளமான வளர்ச்சியை கொடுத்துள்ளது. நாங்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்து வருகிறமோ, அங்கெல்லாம் ஆட்சி அமைப்போம். அதேபோல் ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம். மோடி மீதான நம்பிக்கை மக்கள் காட்டியுள்ளனர்.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி: இது காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையிலான தேர்தல் அல்ல. 4 கோடி மக்கள் பிஆர்எஸ்-க்கு எதிராக உள்ளனர். இது தெலுங்கானா மக்களின் வெற்றி. முதல் மந்திரிசபை கூட்டத்தில் 6 வாக்குறுதிகளை நிறைவேற்ற அனுமதி பெற்று செயல்படுத்துவோம். நாங்கள் முழு வெற்றி பெறுவோம். இதைத்தான் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

    சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா தலைவர் அருண் சாயோ: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட மாதிரி அளவைக் கொண்டுள்ளன. பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

    ராபர்ட் வதேரா: நான் கருத்துக் கணிப்பை பெரிய அளவில் நம்பவில்லை. நான் உண்மையான முடிவை நம்புகிறவன். நான் கடந்த சில மாதங்களாக ஏராளமான மக்களை சந்தித்தேன். அவர்கள் விரக்தியில் இருந்தனர். குறிப்பாக மத்திய பிரதேசத்தில். ஆட்சியை கவிழ்த்தது தொடர்பான விரக்தி தெரிந்தது.

    பா.ஜனதா எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர்: அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். பா.ஜனதா செய்த பணிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் பிரகாஷ் பாண்டே: கருத்துக் கணிப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதற்கு காரணம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங்: கருத்துக் கணிப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. நாங்கள் அது குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாது. மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் என்ற உறுதியை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முதல்வர் சிவ்சராஜ் சிங் சவுகான் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

    பா.ஜனதா எம்.பி. ரதோர் (ராஜஸ்தான்): மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முழு மெஜாரிட்டியுடன் ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சியமைக்கும். கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட பகுதிக்கானது. 3-ந்தேதி முடிவு பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும்.

    ×