நான்கு மாநிலங்களிலும் கடந்த தேர்தலை விட ஆதிக்கம் செலுத்தும் பா.ஜனதா

தெலுங்கானாவில் பா.ஜனதா கூட்டணி 11 இடங்களில் முன்னிலை.சத்தீஸ்கரில் பா.ஜனதா கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
நான்கு மாநிலங்களிலும் கடந்த தேர்தலை விட ஆதிக்கம் செலுத்தும் பா.ஜனதா
Published on

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

ராஜஸ்தானில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. தற்போதைய நிலையில் பா.ஜனதா 102 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பா.ஜனதா நான்கு மாநிலங்களில் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 8 இடங்கள் அதிகமாகும்.

ராஜஸ்தானில் 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. கடந்த தேர்தலை விட 33 இடங்கள் அதிகமாகும்.

சத்தீஸ்கரில் பா.ஜனதா கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 20 இடங்கள் அதிகமாகும்.

தெலுங்கானாவில் பா.ஜனதா கூட்டணி 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 11 இடங்கள் அதிகமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com