என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் வாக்கு எண்ணிக்கை"

    • 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
    • திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை நான் பாராட்ட விரும்புகிறேன்.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து திருவனந்தபுரம் எம்.பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    "கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் என்னவொரு அற்புதமான முடிவுகள் நிறைந்த நாள். மக்கள் ஆணை தெளிவாக உள்ளது, மேலும் மாநிலத்தின் ஜனநாயக உணர்வு பிரகாசமாகத் தெரிகிறது.

    பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய வெற்றியைப் பெற்றகாங்கிரசின் UDF -க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரமும், மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையும் ஆகும்.

    கடின உழைப்பு, ஒரு வலுவான செய்தி மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவை அனைத்தும் 2020-ஐ விட மிகச் சிறந்த முடிவை அடைய உதவியுள்ளன.

    திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனையும் நான் பாராட்ட விரும்புகிறேன். மேலும் நகர மாநகராட்சியில் அவர்கள் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தலைநகரின் அரசியல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் ஒரு வலுவான செயல்திறனாகும். 45 ஆண்டுகால இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தவறான ஆட்சிக்கு ஒரு மாற்றத்திற்காக நான் பிரச்சாரம் செய்தேன், ஆனால் வாக்காளர்கள் இறுதியில் ஆட்சியமைப்பில் ஒரு தெளிவான மாற்றத்தை விரும்பிய மற்றொரு கட்சிக்கு வெகுமதி அளித்துள்ளனர்.

    அதுதான் ஜனநாயகத்தின் அழகு. ஒட்டுமொத்தமாக UDF-ஆக இருந்தாலும் சரி, அல்லது எனது தொகுதியில் பாஜக-வாக இருந்தாலும் சரி, மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்.

    கேரளாவின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், மக்களின் தேவைகளுக்காக வாதிடுவோம் மற்றும் நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம். முன்னேறிச் செல்வோம்!" என்று தெரிவித்துள்ளார். அணமைக் காலமாக சசி தரூர் பாஜக மற்றும் மோடியை புகழ்ந்து வருவது காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் இந்த வாழ்த்து முக்கியத்துவம் பெறுகிறது. 

    • ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
    • இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகமளிக்கும் மக்கள் தீர்ப்பு.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது நகர்ப்புறங்களில் LDF-இன் பிடியைப் பெரிதும் பாதித்துள்ளது.

    நகராட்சி மட்டத்திலும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை அடைந்தது. 87 நகராட்சிகளில் 54 நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.

    எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரசின் யுடிஎஃப் மீது நம்பிக்கை வைத்த கேரள மக்களுக்கு எனது வணக்கங்கள். இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகமளிக்கும் மக்கள் தீர்ப்பு.

    இந்த முடிவுகள் யுடிஎஃப் மீதான நம்பிக்கை வளர்ந்து வருவதற்கான தெளிவான அறிகுறியாகும். மேலும், இது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

    செய்தி தெளிவாக உள்ளது: கேரளா, மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து, பதிலளித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை விரும்புகிறது.

    இப்போது எங்கள் கவனம் அசைக்க முடியாதது - கேரளாவின் சாமானிய மக்களுடன் நிற்பது, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கையாள்வது, மற்றும் வெளிப்படையான, மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை உறுதி செய்வது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் எனது வாழ்த்துகள். இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செயல்பட்ட ஒவ்வொரு கட்சித் தலைவர் மற்றும் தொண்டருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்" என்று தெரிவித்தார்.    

    • ஆறு மாநகராட்சிகளில் நான்கை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
    • எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 

    ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது நகர்ப்புறங்களில் LDF-இன் பிடியைப் பெரிதும் பாதித்துள்ளது.

    திருவனந்தபுரம் மாநகராட்சியை வென்றதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கேரளாவில் காலூன்றி உள்ளது.

    UDF மற்றும் NDA இரண்டிலிருந்தும் கடுமையான சவாலை எதிர்கொண்ட போதிலும், கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே LDF தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    நகராட்சி மட்டத்திலும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை அடைந்தது. 87 நகராட்சிகளில் 54 நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.

    எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட சில பாரம்பரிய கோட்டைகளை LDF வென்ற போதிலும், 2020 ஆம் ஆண்டு செயல்திறனுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த செயல்திறன் குறைவே.

    ஒட்டுமொத்தமாக, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மறுமலர்ச்சிக்கான அறிகுறியாகும்.      

    தேர்தல் முடிவுகள் விவரம்:

    152 ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் UDF - 79, LDF - 63

    14 மாவட்ட பஞ்சாயத்துகளில் UDF - 7, LDF - 7

    87 நகராட்சிகளில் UDF - 54, LDF - 28, NDA - 1, மற்றவை - 1

    6 மாநகராட்சிகளில் UDF - 4, LDF - 1, NDA - 1 இடங்களைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல்.
    • ஆனால், நான்கு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. மிசோரம் மாநிலம் வாக்கு எண்ணிக்கை நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. சத்தீஸ்கர், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    என்றபோதிலும், அந்தந்த கட்சித் தலைவர்கள் நான்கு மாநிலங்களிலும் நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் எனத் தெரிவித்து வருகின்றனர்.

    இன்று வாக்கு எண்ணிக்கையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். அதன்பின் வாக்கு எந்திரங்கள் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன் திரண்டுள்ளனர். அவர்கள் கைகளில் பதாதைகளுடன் நின்றுள்ளனர். மேலும், சிலர் பட்டாசு வெடித்து தற்போதே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    ஒரு காங்கிரஸ் தொண்டர் ஹனுமான் வேடமணிந்து ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.

    • வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.
    • இவரும் பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பார்கள் என அறிவிப்பு.

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க 2 நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    நோடல் அதிகாரிகளாக, கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப், பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்படுள்ளனர்.

    இவரும் பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×