search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 பேர் பலி"

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எந்த கருத்து மோதலும் இல்லை என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    மதுரை:

    அ.தி.மு.க.வில் இருந்து தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதையடுத்து நேற்று மதுரையில் டி.டி.வி. தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் வெற்றிவேல், பார்த்திபன் தவிர 16 பேர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தங்க தமிழ்செல்வன், எங்களை தகுதி நீக்கம் செய்த சபாநயகரின் முடிவு தவறானது என்பதை நிரூபிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அங்கு எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

    சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    இன்று காலை மதுரை ரிங்ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்து மருது சகோதரர்கள் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த புறப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-


    எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முடிவில் 18 பேரும் ஒற்றுமையாக கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களிடம் எந்தவிதமான கருத்து மோதல்களும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் என்னிடம்தான் உள்ளனர். அவர்கள் யாரும் பலனை எதிர்பார்த்து இருக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எந்த சலசலப்புக்கும் இடமில்லை. அப்படி சலசலப்பு ஏற்படும் என்று நினைப்பவர்களின் ஆசை நிராசையாகிவிடும்.

    எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். எங்களைப்பற்றி துரோகிகள் பேசுகிற பேச்சுக்களை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் மன்றம் சரியான பாடம் புகட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran  #MLAsDisqualificationCase
    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தேர்தலில் நிற்க தடை இல்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். #18MLAsDisqualification #TTVDhinakaran

    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று ஐகோர்ட்டு நீதிபதி சத்திய நாராயணன் நேற்று தீர்ப்பு கூறி இருந்தார்.

    இந்த தீர்ப்பு மூலம் தகுதி இழப்புக்கு உள்ளான 18 எம்.எல்.ஏ.க்களும் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

     


    எம்.எல்.ஏ.க்களை எந்தெந்த குற்றங்களின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியும் என்பதை அரசியலமைப்பு சாசனத்தின் 191 (1) (2) உட்பிரிவு கூறுகிறது.

    ஆனால் இந்த 18 எம்.எல். ஏ.க்களுக்கு நேரிட்டுள்ள நிலையை ஆராய்ந்தால், அவர்களை அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிட தடை செய்வதற்கான நேரடி சட்டங்களோ, சட்டப்பிரிவுகளோ இல்லை என்று தான் கூறவேண்டும்.

    மேலும் இந்தியாவில் இதுபோன்ற நிலைக்குள்ளான எம்.எல்.ஏ.க்கள் யாரையும் தேர்தலில் போட்டியிட தகுதி இழப்புக்கு ஆளாக்கிய நிகழ்வு இதுவரை நடக்கவில்லை. எனவே இதில் விவாதங்கள் எழும்ப வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் கேட்டபோது, ‘‘அந்த 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் அடுத்த தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கக்கூடிய நேரடி சட்டங்கள் கிடையாது. எனவே அவர்கள் சட்டமன்றம் உள்பட எந்த தேர்தலிலும் போட்டியிடமுடியும்’’ என்று தெரிவித்தார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை செயலாளர் ஒருவரும் இதே கருத்தையே கூறினார். #18MLAsDisqualification #TTVDhinakaran

    18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். #18MLAsDisqualification #TTVDhinakaran #18MLAsAppeal
    மதுரை:

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து அந்த 18 பேரிடமும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மதுரை மாட்டுத்தாவணி, ரிங்ரோட்டில் உள்ள ஓட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



    சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அனைவரிடமும் தினகரன் கேட்டார். அப்போது மேல்முறையீடு செய்யவேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர்.

    ‘மீண்டும் மேல்முறையீட்டுக்கு சென்றால் அதில் தீர்ப்பு வர தாமதமாகும். அது எடப்பாடி- ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதகமாகவே இருக்கும். அதனால் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம்’ என்று ஒரு தரப்பினர் ஆலோசனை தெரிவித்தனர். மற்றொரு தரப்பினரோ இடைத்தேர்தலை சந்தித்தால் பெரும் செலவு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.

    இந்த ஆலோசனையின் முடிவில், தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. 18 பேரும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர். #18MLAsDisqualification #TTVDhinakaran #18MLAsAppeal
    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் டி.டி.வி. தினகரன் மதுரையில் ஆலோசனை நடத்தினார். #TTVDhinakaran #DisqualificationMLAs
    மதுரை:

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில் பதவி நீக்கத்துக்குள்ளான எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் இருந்து நேற்று இரவு மதுரை வந்தனர். மாட்டுத்தாவணி, ரிங்ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவர்களை, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார்.

    சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, ‘மீண்டும் மேல்முறையீட்டுக்கு சென்றால் அதில் தீர்ப்பு வர தாமதமாகும். அது எடப்பாடி- ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதகமாகவே இருக்கும்.

    அதனால் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம்’ என்று ஒரு தரப்பினர் ஆலோசனை தெரிவித்தனர்.

    மற்றொரு தரப்பினரோ இடைத்தேர்தலை சந்தித்தால் பெரும் செலவு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.

    அவர்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்ட தினகரன் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, சசிகலாவை சந்தித்து விட்டு அவர் என்ன சொல்கிறார்? என்பதை கேட்டு ஒரு முடிவுக்கு வரலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    முன்னதாக டி.டி.வி. தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது:-


    தகுதி நீக்க தீர்ப்பு வழக்கில் முடிவெடுக்க பொதுச்செயலாளர் சசிகலா எனக்கு அதிகாரம் வழங்கியுள்ளார். அவரிடம் ஏற்கனவே இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.

    எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.தி.மு.க.வை காப்பாற்றவே 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை தியாகம் செய்துள்ளனர்.

    அ.தி.மு.க.வை எங்களால் தான் பாதுகாக்க முடியும். என்னுடைய ஆதரவாளர்கள் தெரிவித்தால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம். அதே நேரத்தில் இடைத்தேர்தலை சந்திக்கவும் தயாராக உள்ளோம்.

    தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.

    அ.தி.மு.க.வினர் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நினைக்கிறார்கள். அதை எப்படி கையாளுவது? கீழே இழுப்பது என்பது எனக்கு எல்லா வேலைகளும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #DisqualificationMLAs
    சபாயநாகரின் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளதாக அமைச்சர் கருப்பணன் கூறினார். #ADMK #KCKaruppannan
    அம்மாபேட்டை:

    உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பில் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதை கொண்டாடும் வகையில் அம்மாபேட்டை ஒன்றியம் சித்தாரில் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா தலைமையில் இனிப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதில் கலந்து கொண்டு அமைச்சர் கே.சி.கருப்பணன் சித்தார் மற்றும் செம்படாபளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சில புல்லுருவிகள் அதிமுகவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார்கள் ஆனால் அவர்களது கனவு பலிக்கவில்லை.

    சபாயநாகரின் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளது. வரும் காலங்களில் ஜெயலலிதா ஆசியோடு அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவை சிறப்பாக வழி நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #KCKaruppannan
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஜெயலலிதா ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு சரியான பாடம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #ADMK #MRVijayaBaskar
    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதியரசர் வழங்கிய தீர்ப்பு அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. ஜெயலலிதா தனது உயிரை கொடுத்து உருவாக்கி தந்த இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு இது சரியான பாடம்.

    ஜெயலலிதா வழியில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். இந்த தீர்ப்பில் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இது ஒரு அனுபவம் என டி.டி.வி. தினகரன் சொன்னதாக சொல்கிறீர்கள். இதுவா? அனுபவம், அப்படியென்றால் நிறைய அனுபவம் அவருக்கு காத்திருக்கிறது.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தாங்களாகவே தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தால் இதுதொடர்பாக முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள்.

    நீதிமன்றம் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று கூறியுள்ளது. மீண்டும் தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். ஜெயலலிதா சொன்னது போல் இன்னும் 100 ஆண்டுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்.

    கரூரில் ஒரு நபர் (முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி) இரண்டு அமாவாசைக்கு தான் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் என அவ்வப்போது கூறி வருகிறார். மாதா மாதம் அமாவாசைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இன்னும் பல அமாவாசைகளை அவர் பார்க்க தான் போகிறார். எங்கள் இல்லத்திருமண விழாவில் தனியார் பள்ளி பேருந்துகளும் அரசு பஸ்சும் இயக்கப்பட்டதாக கூறுகின்றனர். அரசு விதியின்படி ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MRVijayaBaskar #18MLAsCaseVerdict
    டிடிவி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, அதிமுக அரசுக்கு லாபமா? நஷ்டமா? என்பதை ஆராய்ந்து பார்த்தால் பல உண்மை நிலவரங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. #TTVDhinakaran #MLAsdisqualification #ADMK
    சென்னை:

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருந்து வருகின்றன.

    இந்த நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த வழக்கை விசாரித்து வந்த 3-வது நீதிபதி சத்திய நாராயணன் நேற்று அதை உறுதி செய்து தீர்ப்பு வழங்கினார்.

    இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    சமீபத்தில், நாடு முழுவதும் காலியாக இருந்த சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதால் இந்த முடிவை எடுத்ததாக அதற்கு காரணம் தெரிவித்தது.

    தற்போது, மேலும் 18 தொகுதிகள் காலியாகியுள்ளதால், மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் தான் இடைத்தேர்தல் நடத்தப்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.

    எனவே, அதுவரை ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு பிரச்சினை இல்லை என்றாலும், மெஜாரிட்டியை நிரூபிக்கக்கோரி தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.



    ஏனென்றால், தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் பலம் 214 ஆக உள்ளது. இதை வைத்து மெஜாரிட்டியை கணக்கிடும்போது அ.தி.மு.க. அரசுக்கு 108 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது. தற்போது, அ.தி.மு.க.வுக்கு (சபாநாயகரையும் சேர்த்து) 116, தி.மு.க.வுக்கு 88, காங்கிரஸ் கட்சிக்கு 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என்ற வகையில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.வாக டி.டி.வி.தினகரன் உள்ளார்.

    ஆனால், அ.தி.மு.க.வில் உள்ள ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ் (திருவாடானை), உ.தனியரசு (காங்கேயம்), தமிமுன் அன்சாரி (நாகப்பட்டினம்) ஆகிய 3 பேரும் தி.மு.க. மற்றும் டி.டி.வி.தினகரனுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர்.

    இதை வைத்து பார்க்கும்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்மையான பலம் 110 என்ற நிலையிலேயே இருக்கிறது. மெஜாரிட்டியுடன் இதை கணக்கிடும்போது, கூடுதலாக 2 மட்டுமே உள்ளது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அ.தி.மு.க.வில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்தாலே ஆட்சி கலைந்து விடும் அபாயம் உள்ளது.

    எனவே, அதுபோன்ற சூழ்நிலை வரும்போது, அ.தி.மு.க. அரசு சற்று ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டியுள்ளது. என்றாலும், அ.தி.மு.க.வுக்கு ஒருசில சாதகமான அம்சங்களும் இருக்கின்றன. அதாவது, தற்போது அதிருப்தியில் இருந்துவரும் 6 எம்.எல்.ஏ.க்களும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள்.

    இதில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    எனவே, இதைக் காரணம் காட்டியே அவர்கள் 3 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய 3 பேர் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், அவர்கள் மீதும் இதே நடவடிக்கையை எடுக்க அ.தி.மு.க. தலைமை தயங்காது.

    இதுபோன்ற சாதகமான சூழ்நிலையால், மெஜாரிட்டியை தற்சமயம் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. கருதினாலும், அடுத்த 5 மாதத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எப்படியும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்தத் தேர்தலில் 20 இடங்களில் கட்டாயம் 2 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியும் அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது.

    அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணிக்கு தற்போது எம்.எல்.ஏ.க்களின் பலம் 97 ஆக உள்ளது. இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுடன், சுயேச்சை எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரனின் ஆதரவையும் பெற்றால், மெஜாரிட்டி எண்ணிக்கையான 118-ஐ தி.மு.க.வால் எட்ட முடியும். ஆட்சி அரியணையிலும் தி.மு.க.வால் அமர முடியும்.

    அதே நேரத்தில், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கத்தை எதிர்த்து, டி.டி.வி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்தால், இடைத்தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. அது அ.தி.மு.க. அரசுக்கு சாதகமாகவே அமைந்து விடும்.  #TTVDhinakaran #MLAsdisqualification #ADMK
    தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம் எல் ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என அமமுக துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    சென்னை:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முதலில் இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இவ்வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும். தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்று நீதிபதி அறிவித்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.



    இதுபற்றி டிடிவி தினகரன் கூறுகையில், தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வதா அல்லது தேர்தலை சந்திப்பதா என 18 பேரிடமும் நாளை கருத்து கேட்க உள்ளேன்.

    நீதிமன்ற தீர்ப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாது. தமிழகத்தில் இடைத்தேர்தல் வருமா என்பது சந்தேகமாக உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதைவிட முழு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தலாம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். #18MLAsCaseVerdict #ByElection #PChidambaram
    சென்னை:

    தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், 18 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என தெரிவித்தது. அத்துடன் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் நீக்கியது. ஏற்கனவே 2 தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே, அதனுடன் சேர்த்து 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதேபோல், 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தாலை தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று டிடிவி தினகரன் தரப்பும் உறுதியாக கூறி வருகிறது. தங்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருப்பதாக திமுக கூறியுள்ளது.


    ஆனால் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார். ‘இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது. 18+2 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட, முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும்’ என ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict #ByElection #PChidambaram
    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #18MLAsCaseVerdict
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது.

    நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள ஆட்சி, நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டமாகும்.

    நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக தப்பிப் பிழைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சி, மக்களால் மிக விரைவில் தண்டிக்கப்பட்டே தீரும் என இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி உறுதியாக நம்புகிறது.

    மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்றபடி, எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலகி, மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டும்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதியும் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியதன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தீர்ப்பின் முழுமையான விவரங்கள் தெரிந்த பிறகுதான் மேற்கொண்டு எந்த கருத்தையும் தெரிவிக்க முடியும். இதில் 18 எம்.எல்.ஏ.க் களும் மேல்முறையீடு செய்வார்களா? இல்லையா? என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க முடியும்.

    ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு நடத்த வேண்டிய இடைத்தேர்தலை தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

    ஒருவேளை இந்த தீர்ப்புக்கும், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கும் ஏதோ ஒரு உள்ளார்ந்த உளவு இருப்பது மாதிரிதான் எண்ணத் தோன்றுகிறது.

    18 தொகுதியில் உள்ள மக்களுக்கு கிட்டதட்ட 2 ஆண்டாக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை.

    எனவே இனியும் காலம் கடத்தாமல் திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

    தமிழகத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். பிறகு இந்த வழக்கு 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டது.

    இன்றைக்கு வெளிவந்திருக்கும் 3-வது நீதிபதியின் தீர்ப்பின் மூலம் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்ட மன்ற உறுப்பினர்களும் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்து தான் இறுதி முடிவு கிடைக்கும்.

    தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இறுதியான தீர்ப்பினால் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    இந்த பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்றாலும், சுமார் 400 நாட்களுக்கு மேலாக வழக்கில் ஈடுபட்டுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிக்குட்பட்ட மக்கள், தங்கள் தொகுதி பிரச்சனையை கூற பிரதிநிதியின்றி, தொகுதி வளர்ச்சி குறித்து சட்டமன்றத்தில் தங்களது தேவைகளை கூறும் உறுப்பினரின்றி குழம்பிய நிலையில் இருந்துள்ளனர். இனி வருங்காலங்களில், மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு நிர்வாகம் சார்ந்த வழக்குகளையும் அவசர வழக்காக விசாரித்து காலதாமதமின்றி தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன்:-

    இந்த 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதன் மூலமாகதான் தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் இருக்கின்ற எல்லா தலைவர்களும் பெரும்பான்மையான மக்கள் தங்களோடுதான் இருக்கிறார்கள் என்று சுயதம்பட்டம் அடித்து கொண்டிருக்கின்ற வேளையில் உண்மை தெரிய வேண்டும். பல அரசியல் பிரச்சனைகளுக்கும், ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களுக்கும் அதுதான் தீர்வாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #18MLAsCaseVerdict
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு காலதாமதமாக வழங்கப்பட்டு உள்ளது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #18MLAsCaseVerdict
    குழித்துறை:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அதை கோர்ட்டு உறுதி செய்திருக்கிறது. இந்த தீர்ப்பு காலதாமதமான தீர்ப்பு. இதற்கு முன்பே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும். இந்த தீர்ப்பில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

    18 எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட்டு புஷ்கரவிழாவில் புனித நீராடி உள்ளனர். இதன்மூலம் இவர்கள் தங்கள் பாவங்களை தண்ணீரில் கழுவிவிட்டுள்ளனர்.


    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதை எதிர்த்து பெரும்பான்மையோர் போராடி வருகிறார்கள். கேரளாவில் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றுபட்டு இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    ஒரு சிலர் அதுவும் அய்யப்பன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்தனர். அவர்களுக்கு போலீஸ் சீருடை வழங்கப்பட்டு உள்ளது. யார் திட்டப்படி அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PonRadhakrishanan #18MLAsCaseVerdict
    சபாநாயகரின் தீர்ப்பு, கோர்ட்டு தீர்ப்பு பற்றி மக்களின் கருத்தை அறிய 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar #18MLAsCaseVerdict
    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பு வந்திருப்பதால் அவர்கள் எம்.எல்.ஏ. பதவி ரத்தாகி இருக்கிறது.

    ஏற்கனவே 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இதையும் சேர்த்தால் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. அதாவது வாக்களித்த 50 லட்சம் வாக்காளர்களுக்கும் பிரதிநிதிகள் இல்லை.

    எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டப்படி மேல்முறையீடு செய்ய வழி இருந்தாலும் மேல் முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பது அவர்களின் விருப்பம். அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது.

    என்னை பொறுத்தவரை சபாநாயகரின் தீர்ப்பு, கோர்ட்டு தீர்ப்பு பற்றி மக்களின் கருத்தை அறிய 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #18MLAsCaseVerdict
    ×