search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கில்லி படத்தை பார்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான படம் கில்லி. படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷா, முத்துபாண்டி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், விஜய் தங்கையாக ஜெனிபர், ஓட்டேரி நரி கதாபாத்திரத்தில் தாமு உள்பட பலர் நடித்திருந்தனர்.

    படத்தில் இடம் பெற்ற 'அப்படிபோடு' பாடல் அரங்கையே அதிர வைத்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 'கில்லி' படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கில்லி படம் வெளியான திரையரங்கங்கள் அனைத்தும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

    ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கில்லி படத்தை பார்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெளியாகி இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா அவர்களின் சமூக வலைத்தள பக்கத்தில் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பதிவிட்டிருந்தனர்.

    இதையடுத்து கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்த அத்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், டைரக்டர் தரணி ஆகியோர் தி. கோட் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்து பாராட்டினர்.

    மேலும் விஜய்யிடம் சக்திவேலன் பேசுகையில், சினிமாவை விட்டு முழுவதும் விலக வேண்டாம். வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்கள். வியாபாரத்துக்காக சொல்லவில்லை. தியேட்டரில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பாருங்கள் நான் உங்களின் ரசிகன்னாக கேட்கிறேன் என கோரிக்கை வைத்தார்.

    இதைக்கேட்ட விஜய் சிரித்தபடி தலையசைத்து கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி டிரெண்டிங்காகி வருகிறது.

    படம் பற்றி இயக்குனர் தரணி கூறியதாவது "கில்லி படத்தை இந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் பார்த்து விட்டு மகிழ்ந்து செல்வார்கள் என நினைத்தேன்.

    படத்தில் உள்ள ஒவ்வொரு வசனத்தையும் படம் பார்க்கும் போது உச்சரிக்கிறார்கள். ரசிகர்கள் அதிகம் பார்த்த விஜய் படம் கில்லி படம்தான். அனைவருக்கும் நான் ரொம்ப கடமைபட்டுள்ளேன்" என்று கூறினார்.

    படத்தில் விஜய் தங்கையாக நடித்த ஜெனிபர் கில்லி படம் மீண்டும் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "என் குழந்தை பருவத்தில் இருந்து நான் செய்ததை நினைத்து மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன் தளபதி" என பதிவிட்டுள்ளார். ஜெனிபர் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி அரசியல் பயணத்தை தொடங்கினார்.
    • டெல்லியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் கலந்து கொண்டார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். இவரது மனைவி கல்பனா. இவர் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கந்தே சட்டமன்ற தேர்தலுக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட இருக்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.ஏல்.ஏ. சர்பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் கந்தே தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, எம்டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார். ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பள்ளி கல்வியை முடித்த அவர், இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படிப்பை புவனேஸ்வரில் உள்ள கல்லூரிகளில் முடித்தார்.

    மார்ச் மாதம் 4-ந்தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தொடக்க தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது கல்பனா தனது அரசியல் பயத்தை தொடங்கினார். அப்போது, 2019-ல் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்ததில் இருந்தே எதிரிகளால் சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஜார்கண்ட் தனது கணவரை சிறையில் தள்ளிய சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார்.

    ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பின் கல்பனா டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    அமலாக்கத்துறை சம்மனை எதிர்கொண்டபோது, ஹேமந்த் சோரன் அவரது மனைவியை முதல்வராக்க முயற்சிக்கிறார் என பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க உத்தரவு.
    • தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 13% வரை சரிவை கண்டுள்ளது.

    இதன்மூலம், கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரான உதய் கோடக் தனது சொத்து மதிப்பில் சுமார் 10,831 கோடி ரூபாயை இழந்துள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரிடம் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருந்தது என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

    • படத்தில் 5 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியை எந்தவித கம்பியூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் எடுத்துள்ளனர்.
    • மேக்கிங் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

    நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் மாதம் 26-ம் தேதி {நாளை} இப்படம் வெளியாக உள்ளது.

    விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் மூன்றாவது முறை இணைந்து நடித்துள்ளார். இதற்கு முன் அவரது இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை படத்தில் நடித்துள்ளார். ரத்னம் திரைப்படம் விஷாலுக்கு 34- வது திரைப்படமாகும்.

    ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தை ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பாடல்கள் வெளியாகியது அதைத்தொடர்ந்து படத்தின் டிரெயிலர் வெளியாகியது. ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பார்டரில் கதைக்களம் நடப்பதுப் போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் பாடல் மற்றும் ட்ரெயிலர் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தாமிரபரணி மற்றும் பூஜை படத்தைப் போல் இப்படமும் விஷாலுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    படத்தில் சிங்கிள் ஷாட் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அதனுடைய மேக்கிங் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். அதில் படக்குழுவினரான ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவாளர் சுகுமார், ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் பேசியுள்ளனர்.

    படத்தில் ஒரு 5 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியை எந்தவித கம்பியூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் எடுத்துள்ளனர். திருப்பதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மூன்று நாட்கள் மிக கஷ்டப்பட்டு இந்த காட்சியை படமாக்கியுள்ளனர். மக்களிடையே இந்த காட்சியை திரையில் காண்பதற்கு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது.
    • அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை.

    பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆன்லாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது. அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை. அமைப்புகள் மற்றும் அலுவலங்கள் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்கள்.

    பிறப்படுத்தப்பட்டோர் அல்லது தலித் குடும்பத்தை சேர்ந்த இருவர் வேலை செய்தால், அவர்கள் அதில் ஒருவர் வேலையை பறித்து, நாட்டின் வளத்தின் முதல் உரிமையை பெற்றிருக்க வேண்டும் என யாரை குறிப்பிட்டார்களோ அவர்களுக்கு வழங்குவார்கள்" என்றார்.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் வளங்களில் முதல் உரிமை கோரலை பெற்றிருக்க வேண்டும் எனக் கூறியதை மேற்கோள் காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ஆபத்தான நிலையில் இருந்த 26 திமிங்கலங்கள் கரையில் மூச்சு விடமுடியாமல் இறந்தன.
    • திமிங்கலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆஸ்திரேலிய கடற்கரையில் சிக்கித் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்ற கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியில் கரை ஒதுங்கிய 26 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

    ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில்

    160 பைலட் திமிங்கலங்கள் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளன. ஆபத்தான நிலையில் இருந்த 26 திமிங்கலங்கள் கரையில் மூச்சு விடமுடியாமல் இறந்தன.

    மீதமுள்ள திமிங்கலங்களை மீட்டு கடலில்க்ஷ விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு திமிங்கலம் கரையில் தவறுதலாக மாட்டிக் கொண்ட நிலையில் அடுத்தடுத்து திமிங்கலம் வரிசையாக கரையில் சிக்கி இருக்கலாம் என அந்நாட்டில் கடல்வாழ் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள், சகோதரிகளின் நகைகளை மதிப்பீடு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என பிரதமர் குற்றச்சாட்டு.
    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாததை, தங்களது ஆலோசகர் தாங்களுக்கு தவறான தகவல்களை கொடுத்துள்ளனர் என காங்கிரஸ் பதில்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுத்தியுள்ளார்.

    இரண்டு பக்க கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாததை, தங்களது ஆலோசகர் தாங்களுக்கு தவறான தகவல்களை கொடுத்துள்ளனர் என கார்கே அதில் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க உங்களை சந்திக்கும் நபராக நான் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவேன். நாட்டின் பிரதமராக இருக்கும் நீங்கள் தவறான அறிக்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள், சகோதரிகளின் நகைகளை மதிப்பீடு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது விமர்சனம் செய்திருந்தார்.

    தேர்தல் அறிக்கையின் ஒரு வரியை வைத்துக்கொண்டு பேசக்கூடாது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் தொடரவில்லை.
    • புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக சீசன் 5 வரும் ஏப்ரல் 27 முதல் தொடங்க உள்ளது.

    சின்னதிரையில் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி.

    மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராகா வாரந்தோரும் மகிழ்விக்கவும் மிக நகைச்சுவை பாணியில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சி. கடந்த 4 சீசன்களும் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில் தற்பொழுது புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக சீசன் 5 வரும் ஏப்ரல் 27 முதல் தொடங்க உள்ளது.

    இதற்குமுன் இந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் தொடரவில்லை. அவருக்கு பதில் சமையல் நிபுணர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்கிறார். மற்றொரு நடுவராக தாமு இருக்கிறார்.

    இந்த சீசனில் குக்காக - யூடியூபர் இர்பான்,வசந்த் வசி, நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் விடிவி கணேஷ், சீரியல் நடிகை சுஜிதா, நடிகை ஷாலின் சோயா, நடிகர் அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பாடகியான பூஜா வெங்கட் இதில் பங்கேற்க உள்ளனர்.

    கோமாளியாக புகழ், ராமர், சுனிதா, வினோத், சரத், திவாகர் மற்றும் சிலர் இதில் பங்கேற்கவுள்ளனர். மற்ற சீசங்களைப் போலவே இந்த சீசனும் மிகப் பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
    • சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

    • அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
    • இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.

    சென்னை:

    எல்லை தாண்டி இரக்கமற்று இந்தியர்களை கொன்று குவிக்கும் பாகிஸ்தானியர்கள் மீது ஆத்திரமும் கோபமும் இருந்தாலும் என்னை காப்பாற்றுங்கள் என்று வந்தால் எல்லைகளை கடந்து உயிர் கொடுத்தும் காப்பவர்கள் இந்தியர்கள் என்பதற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த சம்பவம்.

    பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆயிஷா ரஷான் (19). இந்த இளம்பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு சிகிச்சைக்காக இந்தியா வந்திருக்கிறார். அப்போது அடையார் மலர் ஆஸ்பத்திரியில் இதயவியல் நிபுணராக இருந்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் அவரது இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவ குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தில் ஒரு பம்பை பொருத்துகிறார்கள். சிகிச்சைக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய ஆயிஷா தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

    எம்.ஜி.எம். மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்த டாக்டர் பால கிருஷ்ணனை அணுகி பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஆயிஷாவின் இதய பம்பில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

    இதையடுத்து இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.

    இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம் தானத்துக்கு கிடைத்து இருப்பதாகவும் சிகிச்சை பெற வரும்படியும் அழைத்துள்ளார்கள்.

    ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்று தவித்துள்ளர்கள். கடைசியில் ஐஸ்வர்யா டிரஸ்டு மூலம் பண உதவியும் கிடைத்துள்ளது.

    இதையடுத்து சென்னையில் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அறுவை சிசிக்சை வெற்றிகரமாக முடிந்தது.

    விரைவில் தாயகம் திரும்பவிருக்கும் ஆயிஷா தனது தாய் சனோபருடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது சனோபர் கூறியதாவது:-

    "வெளிப்படையாகச் சொல்வதென்றால், இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை. இந்தியா மிகவும் நட்பாக இருப்பதாக உணர்கிறேன். இந்தியாவுக்கு வந்தபோது கிட்டதட்ட உயிர் போகும் நிலையில் தான் இருந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லை என்று பாகிஸ்தானில் மருத்துவர்கள் கூறியபோது, நாங்கள் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம். இதற்காக இந்தியாவுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் நன்றி என்றார்.

    ஆயிஷா கூறும்போது கராச்சி திரும்பியதும் பள்ளி படிப்பை தொடர போவதாகவும், ஆடை வடிவமைப்பாளராக வர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் குறிப்பிட்டார்.

    • புகாரின் பேரில் பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • பணிப்பெண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் கடந்த மாதம் தங்க நகைகள் திருடுபோனது.

    இதையடுத்து, மனைவிக்கு தந்த தங்க பரிசு பொருட்கள் காணாமல் போனதாக மாம்பலம் காவல் நிலையத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்திருந்தார்.

    புகாரின் பேரில் பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது, நகைகளை திருடவில்லை என பணிப்பெண் சொன்னதாகவும், விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், மன உளைச்சலில் இருந்து பணிப்பெண் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதைகண்ட அவரது குடும்பத்தினர், பணிப்பெண்ணை உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×