என் மலர்tooltip icon

    இந்தியா

    மீண்டும் விபத்தில் சிக்கிய தேஜஸ் போர் விமானம்.. உயிர்தப்பிய விமானி
    X

    மீண்டும் விபத்தில் சிக்கிய தேஜஸ் போர் விமானம்.. உயிர்தப்பிய விமானி

    • சமீப காலங்களில் தேஜஸ் விமானதிற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்.
    • விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள உள்நாட்டுத் தயாரிப்பு போர்விமானமான 'தேஜஸ்' மீண்டும் விபத்தில் சிக்கி உள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் நிகழ்ந்த இந்த விபத்தின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    வழக்கமான பயிற்சியை முடித்துவிட்டு விமான தளத்தில் தரையிறங்க முயன்றபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்தின் போது விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு பாராசூட் மூலம் குதித்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.

    விமானத்தின் Airframe கட்டமைப்பிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த விமானத்தை இனி பயன்படுத்த முடியாத அளவிற்கு அது சிதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    சமீப காலங்களில் தேஜஸ் விமானதிற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்

    2024 மார்ச் மாதம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே முதல் விபத்து நிகழ்ந்தது. இதில் விமானி பத்திரமாக மீட்கப்பட்டார்.

    கடந்த நவம்பர் மாதம், துபாய் விமானக் கண்காட்சியின் போது நிகழ்ந்த தேஜஸ் விமான விபத்தில் விங் கமாண்டர் நமான்ஷ் சியால் உயிரிழந்தார்.

    தற்போது நிகழ்ந்துள்ள இந்த விபத்து குறித்து விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இந்த விபத்தைத் தொடர்ந்து, தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தேஜஸ் விமானங்களையும் விரிவான தொழில்நுட்பப் பரிசோதனைக்கு உட்படுத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×