search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு"

    • கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • கல்லூரிக்குள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி மாணவர்கள் மோதிக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. நேற்று காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் எதிர்தரப்பினர் மீது 2 பட்டாசுகளை வீசினர். இதில் அந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து கல்லூரிக்குள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி மாணவர்கள் மோதிக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது. தகவல் அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு வெடித்து சிதறி கிடந்த பாகங்களை ஆய்வு செய்தனர். இதில் மாணவர்கள் வீசியது திருவிழாகாலத்தில் பயன்படுத்தப்படும் பூண்டு பட்டாசு என்பது தெரிந்தது.

    கல்லூரியில் பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வரும் தனுஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கானாபாட்டு பாடல் பாடிய தாவரவியல் படிக்கும் மாணவர்களை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த தகராறில் தாவரவியல் படிக்கும் மாணவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இந்த மோதலின் தொடர்ச்சியாக நேற்று காலை கல்லூரிக்கு வந்த தனுஷ் மற்றும் உடன் படிக்கும் நண்பர்கள் எதிர்தரப்பு மாணவர்கள் மீது பூண்டு பட்டாசை கொளுத்தி போட்டு இருப்பது தெரிந்தது.

    இந்த மோதல் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் 18 மாணவர்களை நேற்று அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதில் 3-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர், 2-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர் ஆகும். இதற்கிடையே மோதலில் ஈடுபட்டதாக 10 மாணவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிக்குள் கோஷ்டிகளாக மோதலில் ஈடுபட்ட மற்ற மாணவர்கள் யார்?யார்? என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
    • கல்லூரிக்குள் நாட்டு வெகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது மர்ம கும்பல் திடீரென கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து 2 நாட்டு வெடிகுண்டை வீசி தப்பி சென்று விட்டனர். இதில் அந்த நாட்டு வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நின்று கொண்டு இருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வெடிகுண்டு வீச்சு தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரிக்குள் நாட்டு வெகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதுகாப்பு சோதனைகள் காரணமாக யுகே971 விமானம் தாமதமானது.
    • வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் புனேவிற்கு புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், விமான எண். யுகே971, கேட் எண். 42ல் உள்ள விமானத்தில் மூன்று வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும், அவை ஒரு மணி நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு அழைப்பை உடனடியாக துண்டித்துள்ளார்.

    வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர், விமானத்தை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர், விமானத்தில் சந்தேகத்திற்கு இடமாக மர்ம பொருள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில், கட்டாய பாதுகாப்பு சோதனைகள் காரணமாக யுகே971 விமானம் தாமதமானது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி ஆல்பர்ட்ட கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
    • கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் குமுதா டோம்னிக். இவரது மகன் ஆல்பர்ட். தி.மு.க.வில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளராக இருந்தார். மேலும் ஏ.டி.கே எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் எச்சூர் ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கழிவு பொருட்களை மொத்தமாக எடுக்கும் தொழிலும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்வது, தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தேவையான மண், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மாலை ஆல்பர்ட், சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலை சிப்காட் சாலையோரத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் ஆர்பர்ட்டை கொடூரமாக கொலை செய்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 4தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக கடந்த 7-ந்தேதி குரோம்பேட்டையை சேர்ந்த பிரணவ், தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் ,மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தினேஷ் குமார்,ஆகிய 3 பேர் தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக எச்சூரை சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.ப. நிர்வாகி சுரேஷ், சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் செந்தில்குமார் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.இதில் தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி ஆல்பர்ட்ட கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள புதிய நிறுவனங்கள் அமைக்கும் கட்டுமான பணியை செந்தில்குமார் மேற்கொண்டு வந்தார். இங்கு மண் கொட்டி நிரப்பும் பணியினை ஆல்பர்ட் செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் ஆல்பர்ட்டிற்கு முறையாக கணக்கு சொல்லாமல் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆல்பர்ட் தனக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டு உள்ளார். இதனால் அதே மண் நிரப்பும் பணியினை எச்சூரை சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சுரேஷுக்கு கொடுக்கபட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆல்பர்டிற்கும் சுரேஷூக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் சுரேசும், செந்தில்குமாரும் தாம்பரத்தில் உள்ள கூலிப்படையினைரை ஏவி ஆல்பர்ட்டை கொலை செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதையடுத்து பா.ம.க. பிரமுகர் சுரேஷ், செந்தில்குமார், மதுரையை சேர்ந்த சுந்தர்,ஆனந்த வினோத், எச்சூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் தினேஷ் ,சந்துரு, தாம்பரம் பகுதியை சேர்ந்த மாதவன், சபரிசன் வயது, அரவிந்த்க், அஸ்வின் மற்றும் 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என மொத்தம் 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ள நிலையில் மேலும் 14 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தொழில் போட்டியில் கூலிப்படை ஏவி தி.மு.க.பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் போர் முடியும் தறுவாயில் தரைமட்டமானது
    • வெளியெறிய மக்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர்

    19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன. இந்த பெரும் போர், இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது.

    இப்போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசின. அதில் பெரும்பகுதி ஜெர்மனி மீது வீசப்பட்டது. இவற்றில் பல வெடித்தாலும் ஒரு சில வெடிக்காமல் பூமியில் புதைந்தன.

    போர் முடியும் நேரத்தில் ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. அந்நாட்டில் இதனால் பல வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதையுண்டு போனது. பல தசாப்தங்கள் ஆன பிறகும் ஆங்காங்கே அவற்றில் சில கண்டெடுக்கப்பட்டதாக அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு.

    ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ஃப் (Dusseldorf) பகுதியில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் இம்மாதம் முதல் வாரத்தில் 1 டன் எடையுள்ள ஒரு வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து அதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டனர்.

    இதன் ஒரு பகுதியாக, அந்த குண்டு கிடப்பதாக சொல்லப்படும் இடத்திற்கருகே சுமார் 1640 சதுர அடி சுற்றளவில் (500 meter radius) உள்ள இடங்களில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர். வெளியெறியவர்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையின்போது அந்த இடத்தை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டது.

    தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை எப்போது முடிவடையும் என்பதும் தற்காலிக தடை நீக்கப்பட்டதா? என்பது குறித்தும் தற்போது வரை தகவல்கள் இல்லை.

    • ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது.
    • ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமுதா டோம்னிக். இவரது கணவர் டோமினிக் தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பில் உள்ளார்.இவரது மகன் ஆல்பர்ட் (வயது 30).

    இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி பொறுப்பில் உள்ளார். ஆல்பர்ட் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் கட்டுமான பணி மற்றும் ஸ்கிராப் எனப்படும் தொழிற்சாலை கழிவு பொருட்கள் எடுப்பது போன்ற தொழில் செய்து வருகிறார்.

    ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆல்பர்ட் தொழிற் சாலை மேலாளரை மிரட்டிய வழக்கில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

    நேற்று மாலை சுங்குவார்சத்திரம் அருகே சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே சாலை ஓரத்தில் நின்று ஆல்பர்ட் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 மர்ம நபர்கள் திடீர் என ஆல்பர்ட் மீது நாட்டு வெடி குண்டு வீசி உள்ளனர்.

    இதில் சுதாரித்து கொண்ட ஆல்பர்ட் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் ஆல்பர்ட் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆல்பர்டை மீட்டு மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ஆல்பர்ட்டை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ஆல்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பர்ட்டை யார் கொலை செய்தது? தொழில் போட்டியா? அல்லது வேறு எதும் காரணங்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆல்பர்டுக்கு திருமணம் ஆகி இந்துமதி என்கிற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாஸ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிபடை அமைக்கபட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன் பா.ஜனதா பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கர் நாட்டு வெடி குண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்யும் கலாச்சாரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரவி வருகிறது. இது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    • தகவல் அறிந்ததும் செங்கல்பட்டில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
    • தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதரில் வெடிகுண்டுகள் எப்படி வந்தது?

    திருப்போரூர்:

    திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் அட்டைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. கடந்த 5 மாதங்களாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையை சுற்றிலும் மற்றும் பின்புறத்திலும் ஏராளமான முட்புதர்கள் இருந்தன.

    இதனை அகற்றும் பணியில் பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சீனு, தினேஷ் உள்ளிட்ட 4 தொழி லாளர்கள் ஈடுபட்டனர். அப்போது முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தொழிலாளர்கள் சீனு, தினேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் செங்கல்பட்டில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். போலீசாரின் தீவிர சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்து மேலும் 2 வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. அதனை வாளியில் வைத்து பத்திரமாக போலீசார் எடுத்து சென்ற னர். தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதரில் வெடிகுண்டுகள் எப்படி வந்தது? யார் இதை இங்கு வைத்தது? ரவுடி கும்பல் இதனை இங்கு பதுக்கி வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் ரவுடிகள் 2 பேர் எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டு ஒன்று திருப்போரூர் பஸ்நிலையம் அருகே எதிர்பாராத விதமாக வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து கேளம்பாக்கம் பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது தண்டலம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பறிமுதல் செய்யப்பட்ட2 நாட்டு வெடிகுண்டுகளையும் முருக மங்கலத்தில் உள்ள வெடிபொருள் கிடங்கிற்கு போலீசார் எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் சிறிது நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என பேசிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதையடுத்து கோயம்பேடு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    இதனால் வெளி மாவட்டங்கள் செல்லும் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சாக்கு பையில் 2 நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி இருந்ததை கண்டு போலீசார் திடுக்கிட்டனர்.
    • தப்பியோடிய முகிலன், சங்கர் ஆகிய 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் முதலியார்பேட்டை 100 அடி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அனிதா நகரில் ஒரே பைக்கில் வந்த 5 பேரை தடுத்து நிறுத்தினர். அவர்களில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    மற்ற 3 பேரை மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் 2 நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி இருந்ததை கண்டு போலீசார் திடுக்கிட்டனர். இதையடுத்து நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தியை பறிமுதல் செய்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் உருளையன் பேட்டை கென்னடி நகர் ஜோயல் (வயது24) ராஜா நகர் பத்பநாபன் (25), கோவிந்து சாலை கார்த்திகேயன் என்ற குள்ள கார்த்தி (20) என்பதும், தப்பி சென்றவர்கள் அரியாங்குப்பம் முகிலன் (28) மற்றும் முத்தியால் பேட்டை சங்கர்(28) என்பது தெரியவந்தது.

    பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் தப்பியோடிய முகிலன், அரியாங்குப்பம் ஜிம் பாண்டியன் கொலை வழக்கில் ஜெயிலில் இருந்தபோது, அங்கிருந்த மற்றொரு ரவுடியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த முகிலன், தன்னிடம் தகராறு செய்த ரவுடியை தீர்த்து கட்டுவதற்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து பைக்கில் சுற்றி வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய முகிலன், சங்கர் ஆகிய 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    • வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகர் தியாகு முதலியார் வீதி, ஹவுஸ்சிங் போர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி (வயது 32).

    லாரி டிரைவரான ராஜி. குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.

    தேங்காய்திட்டில் வசித்து வந்த ராஜிவின் உறவினர் ஒருவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

    இறுதி ஊர்வலத்தில் ராஜி பட்டாசு வெடித்தபடி சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வேல்ராம்பட்டை சேர்ந்த நிர்மல், ஹரி ஆகியோர் வெடிக்க பட்டாசு கேட்டனர். அப்போது அவர் நீங்கள் சின்ன பசங்க... உங்களுக்கு பட்டாசு வெடிக்க தெரியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் ராஜிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ராஜி அவர்களை தாக்கியுள்ளார்.

    அவர்கள் ராஜிவை தாக்க முயற்சித்த போது உறவினர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதனால் இறுதி ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது தங்களுக்குள் பேசி தீர்த்து கொள்வதாக இருதரப்பும் கூறியதால் போலீசார் திரும்பி சென்றனர்.

    இறுதி சடங்கு முடிந்த பின்பு ராஜி வீட்டிற்கு வந்தார். அவரை பின் தொடர்ந்து நிர்மலும், ஹரியும் வந்தனர். ராஜியின் வீட்டை அடையாளம் தெரிந்த பின்னர் அவர்கள் திரும்பி சென்றனர்.

    இரவு 8.30 மணிக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு ராஜி சென்று டிபன் வாங்கி கொண்டு வீட்டின் மாடிக்கு ராஜி சென்றார்.

    அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த நிர்மலும், ஹரியும் தாங்கள் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து ராஜி மீது வீசினர்.

    அவரது முதுகில் வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வெடிகுண்டு பயங்கர சத்ததுடன் வெடித்ததில் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

    அங்கு ராஜி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு நின்ற கொலையாளிகள் 2 பேரும் பொதுமக்கள் வருவதை பார்த்ததும் பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

    இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ராஜி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

    ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வீசி டிரைவர் கொலை செய்யப் பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • தீனதயாளன் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.
    • நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போரூர்:

    விருகம்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது21). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. நேற்று நள்ளிரவு அவர், வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரை தெருவில் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டு விழவில்லை. அவரது அருகே சிறிது தூரத்தில் விழுந்து நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தீனதயாளன் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். எனினும் மர்ம கும்பல் அவரை பட்டாக் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றனர்.

    இதற்கிடையே நாட்டுவெடிகுண்டு வெடித்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தீனதயாளனை மர்ம கும்பல் அரிவாளுடன் விரட்டி செல்வதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

    சிறிது நேரத்தில் கொலைவெறி கும்பலிடம் இருந்து தப்பிய தீனதயாளன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.அவர்தான் அணிந்திருந்த சட்டையை மாற்றிக் கொண்டு "அனைவரும் இங்கிருந்து கிளம்பி சென்று விடுங்கள் ஆபத்து உள்ளது" என்று அவரது தாயிடம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தீனதயாளன் எங்கு சென்றார் என்று தெரிய வில்லை. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    நேற்று நண்பர் ஒருவரது பிறந்தநாள் விழாவில் தீனதயாளன் கலந்து கொண்டார். அப்போது அவர் மதுபோதையில் அங்கிருந்த ஒருவரையும் அவரது கூட்டாளிகளையும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறில் அந்த கும்பல் தீனதயாளனை தீர்த்துக்கட்ட நாட்டு வெடி குண்டை வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×