search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் ரவுடியை தீர்த்துக்கட்ட வெடிகுண்டுகளுடன் பைக்கில் சுற்றிய வாலிபர்கள் 3 பேர் கைது
    X

    புதுச்சேரியில் ரவுடியை தீர்த்துக்கட்ட வெடிகுண்டுகளுடன் பைக்கில் சுற்றிய வாலிபர்கள் 3 பேர் கைது

    • சாக்கு பையில் 2 நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி இருந்ததை கண்டு போலீசார் திடுக்கிட்டனர்.
    • தப்பியோடிய முகிலன், சங்கர் ஆகிய 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் முதலியார்பேட்டை 100 அடி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அனிதா நகரில் ஒரே பைக்கில் வந்த 5 பேரை தடுத்து நிறுத்தினர். அவர்களில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    மற்ற 3 பேரை மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் 2 நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி இருந்ததை கண்டு போலீசார் திடுக்கிட்டனர். இதையடுத்து நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தியை பறிமுதல் செய்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் உருளையன் பேட்டை கென்னடி நகர் ஜோயல் (வயது24) ராஜா நகர் பத்பநாபன் (25), கோவிந்து சாலை கார்த்திகேயன் என்ற குள்ள கார்த்தி (20) என்பதும், தப்பி சென்றவர்கள் அரியாங்குப்பம் முகிலன் (28) மற்றும் முத்தியால் பேட்டை சங்கர்(28) என்பது தெரியவந்தது.

    பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் தப்பியோடிய முகிலன், அரியாங்குப்பம் ஜிம் பாண்டியன் கொலை வழக்கில் ஜெயிலில் இருந்தபோது, அங்கிருந்த மற்றொரு ரவுடியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த முகிலன், தன்னிடம் தகராறு செய்த ரவுடியை தீர்த்து கட்டுவதற்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து பைக்கில் சுற்றி வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய முகிலன், சங்கர் ஆகிய 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×