search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னெச்சரிக்கை"

    • காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 3 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • பல்வேறு பாதுகாப்புகளை மேற்கொண்டு 4 ஆயிரத்து 700 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழக கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதால் 3 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் தொடர்பான அனைத்து முன்னெச்சரி க்கை நடவடிக்கை பணிக ளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள், 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 7 புயல் பாதுகாப்பு மையங்கள், 30 படகுகள், 143 கனரக எந்திரங்கள், 617 அரவை எந்திரங்கள், 99 மரம் வெட்டும் எந்திரங்கள், 113 ஜெனரேட்டர்கள், 37 தண்ணீர் வெளியேற்றும் எந்திரங்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 325 மணல் மூட்டைகள், 30 ஆயிரத்து 672 தடுப்பு கம்புகள் தயார் நிலையில் உள்ளன.

    4 ஆயிரத்து 700 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    இலவச அழைப்பு எண்: 1077 மற்றும் தொலைபேசி எண்கள்: 04362-264115, 264117, 9345336838 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

    வருவாய் கோட்ட அலுவலகத்திலும், தாசி ல்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தெரிவித்தனர்.
    • மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் மீனாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைவர் பேசுகையில், திருப்பத்தூர் ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படாத வண்ணம் மணல் மூடைகளை அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் சாலை வசதி, மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும், பிராமணபட்டி அங்கன்வாடி மையத்திற்கு மின்இணைப்பு வழங்க வேண்டும், ரணசிங்கபுரம் மின்நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், கீழநிலை, நெடுமரம், வடக்கு இளையாத்தங்குடி பள்ளிகளை மேம்படுத்த வேண்டும், ஆ. தெக்கூர் அங்கன்வாடி மையத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் ராமசாமி, சகாதேவன், சுமதி, கலைமகள்ராஜீ, கலைமாமணி, பழனியப்பன் ஆகியோர் வலியுறுத்தினர். இதற்கு அரசு பொறியாளர் பதிலளித்தார்.

    வேளாண் அலுவலர் தனலட்சுமி பயிர் காப்பீடு குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக மேலாளர் செழியன் வரவேற்றார். மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் இளையராஜா நன்றி கூறினார்.

    • தமிழக அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
    • இயக்குனர் ரவி ஏற்பாடு செய்துள்ள மீட்பு பணிகள் குறித்த விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்: 

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடங்கி உள்ளது. இந்த பருவமழையானது பல இடங்களில் கொட்டி தீர்த்து வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. இதனால் இந்த பருவ மழையில் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ரவி மரக்காணம் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள மீட்பு பணிகள் குறித்த விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடலோர மாவட்டங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல் மரக்காணம் பகுதியிலும் பருவ மழையை எதிர்கொள்ள மீட்பு பணிகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த ஆய்வினைத் தொடர்ந்து கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்யப் போகிறேம். இவ்வாறு கூறினார். அப்பொழுது தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வீரர்கள் உடன் இருந்தனர்.

    • பண்டிகை காலத்தை யொட்டி அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து இரவு ரோந்து பணியை தீவிரப் படுத்துவதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே அந்த பகுதி களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
    • பழைய கொள்ளையர்கள் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த படங்களை அறி விப்பு பலகையாக பொது இடங்களில் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    நாகர்கோவில், அக்.13-

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து நாகர்கோவில் நகரப் பகுதி களில் காலை, மாலை நேரங் களில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வரு கிறது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான பொதுமக்கள் குடும்பத்தோடு கடை வீதிகளுக்கு வந்து செல் கிறார்கள். இதனால் வடசேரி பஸ்நிலையம், மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் செயின் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அண்ணா பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் நீண்ட நாட்களாக பூட்டி கிடக்கிறது. பண்டிகை காலமான தற்பொழுது கூட்டம் அலைமோதி வரும் நிலையில் அங்கு போலீசாரை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை தீவிரபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை யாக உள்ளது.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவடிக்கையாக அண்ணா பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை திறந்து அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுமார் 8 கேமிராக்கள் பஸ் நிலை யத்தில் உள்ளது. இதில் ஒரு சில கேமராக்கள் செயல் படாமல் பழுதடைந்து உள் ளது.

    எனவே பழுதடைந்துள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புற காவல் நிலையம் திறப்பதுடன் சி.சி.டி.வி. கேமிராக்கள் சரி செய்யும் பட்சத்தில் குற்ற சம்பவங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதே போல் வடசேரி பஸ் நிலையத்தில் தற்போது புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    பண்டிகை காலத்தை யொட்டி அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து இரவு ரோந்து பணியை தீவிரப் படுத்துவதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே அந்த பகுதி களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

    பழைய கொள்ளையர்கள் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த படங்களை அறி விப்பு பலகையாக பொது இடங்களில் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2,3 தினங்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது.
    • பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    வட தமிழகப் பகுதிகளில் மேல்வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2,3 தினங்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது. கடலூர் மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மட்டும் 14 சென்டிமீட்டர் மழை பெய்தது. மேலும் இந்த மழை கடலூர் மட்டுமல்லாமல் பண்ருட்டி, நெல்லி க்குப்பம், சிதம்பரம், விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இரவு நேரங்களில் பெய்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை காலை முதலும் நீடித்தது. இதனால் அலுவலகங்கள் மற்றும் பிற பணிகளுக்கு செல்வோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு மழை நீர் மூலம் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டை, மரம் அறுக்கும் இயந்திரம் மேலும் ஜேசிபி உள்ளிட்ட மழைக்காலங்களில் பயன்படுத்தக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொருள்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள அனைத்து துறை அதிகாரிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிகமானால் அங்குள்ள பொதுமக்களை விரை வாக வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு முன் எச்சரிக்கையும் நடவடிக்கையும் மாவட்டம் முழுவதும் சப் கலெக்டர் வருவாய் கோட்டாட்சியர் தலை மையில் அரசு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் வேளாண் அதிகாரிகள் மூலமும் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • விருதுநகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
    • இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் பேசியதாவது:-

    1.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதனடிப்படையில் காவல் துறை சார்பில் பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நிலையிலான ஒரு குழுவினை அமைக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பொதுப்பணி துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை சீரமைக்க வேண்டும்.

    பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான செய்திகள் மற்றும் எச்சரிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் TNSMART - மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

    மழை, வெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு, கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இடி, மின்னல் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை "DAMIN" மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    மின்தடை, சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின் வயர்கள் தொடர்பான புகார்களுக்கு 94987 94987 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    • ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
    • வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அணைக்கரை ஆய்வு மாளிகையில் கொள்ளிட கரையோர பகுதிகளில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

    பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

    பாதுகாப்பு முகாமில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை உள்ளது.

    இலவச அழைப்பு எண்-1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 264115 மற்றும் 94458-69848 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் மழை, வெள்ள சேதம் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்வதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது
    • பெரம்பலூரில் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    பெரம்பலூர்:

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு பேரிடர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் லாடபுரம், திருவாளந்துறை, வேள்விமங்களம், சிறுகன்பூர் கிழக்கு கொட்டரை ஆகிய கிராமங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லாடபுரம் சின்ன ஏரியில் பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மூலம் நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டார்.

    அப்போது தீயணைப்புத்துறையின் மூலம் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, மீட்பு பணியின் போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர் காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை, இரும்பு பொருட்களை வெட்ட வல்ல ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு, விபத்து நேரங்களில் வாகனங்களின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் பொருட்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவற்றின் இயக்கம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    வெள்ள நேரங்களில் பொதுமக்களை காப்பாற்ற, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி அவர்களை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பல்வேறு முறைகளை பின்பற்றி அழைத்து செல்வது குறித்த செயல்விளக்கம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    • வெண்ணாறு ஆறுகளின் கரையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
    • கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காகவும், மேய்ச்சலுக்காகவும் ஆற்றுப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம்.

    திருவையாறு:

    திருவையாறு தாசில்தார் பழனியப்பன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், ஊராட்சி ஒன்றிய் ஆணையர்கள் நந்தினி, கென்னடி, பேரூராட்சி தலைவர் கஸ்தூரி நாகராஜன், மற்றும் செயல் அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் மழை, வெள்ளப் பெருக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு கூறியுருப்பதாவது,

    தற்போது கர்நாடக மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் காவிரியில் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து தமிழக காவிரி ஆற்றில் 1,85,000 கனஅடி அளவு தண்ணீர் திறக்கப்பட்டு கரைபுரண்டு வந்துகொண்டிருக்கிறது.

    இதனால், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாரத்தில் ஓடுகிற கொள்ளிடம், காவிரி, குடமுருட்டி, வெட்டாறு, மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகளில் அதிகளவு வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.

    எனவே, திருவையாறு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட ஸ்ரீராம் நகர், 15 மண்டபத்தெரு, புதுஅக்ரஹாரம், புஷ்யம ண்டபத்தெரு, திருமஞ்சனவீதி, செவ்வாய்க்கிழமைத் தெரு, தியாகராஜர் காலனி, மற்றும் அகிலாண்டபுரம் ஆகிய காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், திருவையாறு வட்டாரத்தில் கொள்ளிடம், காவிரி, குடமுருட்டி, வெட்டாறு மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகளின் கரையோரங்களைச் சார்ந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் ஆற்றில் இறங்காமல் முன்னெச்ச ரிக்கையுடன் இருக்குமாறும்.

    கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காக ஆற்றில் இறக்க வேண்டாம் என்றும், மேய்ச்சலுக்காக கால்நடைகளைஆற்றுப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும்போது மேட்டுப்பாங்கான இடங்களு க்கும், அரசுத்துறையினரின் வழிகாட்டுதலின்படி அருகாமையில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கும் சென்று பாதுகாத்துக் கொள்ளுமாறும், ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் நேரிட்டால் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஊராட்சி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவும் வேண்டுமாறும் கூறியுள்ளனர்.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உணவுகள் வருவாய்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
    • அளக்குடி பகுதியில் தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார்.

    சீர்காழி:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்று பழையாறு கடலில் கலந்து வருகிறது.

    இந்த வெள்ளத்தால் திட்டு கிராமங்களான வெள்ளை மணல், நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களை முழுமையாக தண்ணீர் சூழ்ந்து கிராமத்தின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பலர் தங்கள் கால்நடைகள் மற்றும் உடமைகளுடன் கரைப்பகுதியில் தங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உணவுகள் வருவாய்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    இதனிடைய கொள்ளிடம் ஆறு அளக்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வீட்டு வசதி நகர் வளர்ச்சி அரசு முதன்மை செயலர் கித்தேஸ்குமார் மக்வானா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காட்டூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்று நீர் கரையை அரித்து உள்ளே புகும் அபாய நிலை உள்ளதை நேரில் பார்வையிட்ட கித்தேஷ்குமார் அப்பகு தியில் கருங்கல் கொட்டி கரையை பலப்படுத்திட கூறினார். தொடர்ந்து அளக்குடி பகுதியில் தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்கி உள்ள மக்களை சந்தித்து உணவுகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்கப்படுகிறதாஎன அரசு முதன்மை செயலாளர் கேட்டறிந்தார். ஆய்வின் போது மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் உடன் இருந்தனர்.

    • பொதுமக்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் கால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • அலுவலர் கணேசன் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவான செய்முறைப் பயிற்சிகளை வழங்கினார்.

    நன்னிலம் :

    நன்னிலம் தாலுகா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், எதிர்வரும் வட கிழக்கு பருவமழையால், பேரிடர் ஏற்பட்டால் அதில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் கால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, நன்னிலம் வருவாய் வட்டாட்சியர் பத்மினி தலைமை தாங்கி னார். வருவாய் ஆய்வாளர் நெடுமாறன் முன்னிலை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை நிலைய அலுவலர் கணேசன் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவான செய்முறைப் பயிற்சிகளை வழங்கினார்.

    நன்னிலம் வட்ட கிளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் உத்தமன் முதலுதவி முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பயிற்சியாளர் பரிமளா காந்தி, முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினார். இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட கிராமங்க ளிலிருந்து, தேர்வு செய்ய ப்பட்ட முதல் நிலை பொறு ப்பாளர்கள் பயிற்சி பெற்றனர்.

    • மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 1.60 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஆபத்தை விளை விக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 1.60 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கிருஷ்ணராஜா சாகர் அணை, கபினி அணை

    களில் இருந்து அதிக அள விலான நீர் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. ஏற்கனவே சுமார் 1.60 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், தற்போது 2.10 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொது மக்க ளுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து அதிக அள வில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளை விக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணை யின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி கள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்க கிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

    குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டு வதையோ, புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்ப தையோ முற்றிலும்தவிர்த்திட வேண்டும். மீறினால் காவல்து றைமூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    ×