என் மலர்
நீங்கள் தேடியது "precautionary measures"
- மயிலம், திருவக்கரை கோவில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுப்பட்டனர்.
- பாதுகாப்பு துறை உதவி யாளர் ஜீவானந்தம்,தலைமை காவலர் செல்வ வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
விழுப்புரம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் மங்களூரில்ஆட்டோவில் குக்கர் வெடிப்பு நடந்தது. மேலும் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல பல்வேறு இடங்களில் (ஐ.எஸ்.ஐ.எஸ்.) அமை ப்பில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தும் அவர்கள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் எஸ்ஐக்கள் முருகன், ரவிச்சந்திரன், பா ர்த்தசாரதி, வெங்கடேசன், சிறப்பு உதவி யாளர் ராம வெங்கடேசன், வெங்கடேசன், தலைமையி லான வெடிகுண்டு நிபுணர்கள் மயிலம் முருகன் கோவில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், திண்டிவனம் ெரயில்வே நிலையம் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் மெட்டல் டிடக்டர் உதவியுடனும் மற்றும் மோப்பநாய் தமிழ் வர வைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் முன்னெ ச்சரிக்கை நடவடி க்கையாக சோதனை நடத்தினார்.திண்டிவனம் ரயில்வே நிலைய த்தில்ரயில்வே பாதுகாப்பு துறை உதவி யாளர் ஜீவானந்தம்,தலைமை காவலர் செல்வ வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர். இதனால் திண்டிவனம் மற்றும் மயிலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- டிசம்பர் 6-ந் தேதி நாளை என்பதால் தமிழகத்திலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- மதுரை விமான நிலையப்பகுதியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ந் தேதி நாளை என்பதால் தமிழகத்திலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பஸ்- ெரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
ெரயில் நிலையத்தில் பயணிகள் மெட்டல் டிடெக்டர் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படு கிறார்கள். பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் பார்சல் அனுப்பவும் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.
தண்டவாளங்கள், ெரயில் பெட்டிகளிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள வாகன சோதனை சாவடிகளிலும் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை விமான நிலையப்பகுதியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடை பெற்றது.
- வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும் என தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்ஷஜீ வனா தலைமையில் நடை பெற்றது
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:
வடகிழக்கு பருவமழைக் காலத்திற்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவ லர்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
பேரிடரின் போது பொது கட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமான தாகவும் தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை கட்டிடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை சரிசெய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நீர்நிலைப் புறம்போக்கு களான ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையினை ஆராய்ந்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உரிய நட வடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
அவசர காலங்களில் கிராமங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் வழிகளுடன் கூடிய செயல் திட்டத்தினை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக தயார் செய்து வைத்திருத்தல் வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள த்தால் பாதிக்கப்படும் கிராமங்களிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு ஏதுவாக பள்ளிக் கட்டிட ங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களின் தொடர்பு எண்களுடன் கூடிய பட்டியலை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். வட்ட அளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித் துறையினரின் செயல்முறை விளக்கம் நடத்தி பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீர்நிலைகளில் பொது மக்கள், சிறுவர் - சிறுமிகள் இறங்குவதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க நீர்நிலைகளின் ஆழமான பகுதிகள் குறித்த முன்னெ ச்சரிக்கை அறிவிப்பு பலகையினை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நீர்நிலைகளின் கரைகளில் வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும் என தெரிவித்தார்.
- தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழந்துள்ளது. மேலும் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்கா தவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும்.
ஒரு சில இடங்களில் மின் சப்ளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குடிநீர் சப்ளை மற்றும் போர் மோட்டார் இயக்கத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அந்த ஊர்களில் எல்லாம் குடிநீர் டேங்க், சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்டவற்றை இன்றே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்பு படை குழு வருகை தர உள்ளது.
- உடற்பயிற்சி செய்வதையோ, கடுமையான வேலை செய்வதையோ தவிருங்கள்.
- வியர்வை ஆவியாக மாறுவதற்கு ஏற்ப பருத்தியாலான ஆடைகளை அணியுங்கள்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. நாட்டின் பல நகரங்கள் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை சர்வ சாதாரணமாக எட்டிப்பிடித்துவிட்டன. இன்னும் அச்சுறுத்தும் வகையில் வெப்ப அலையும் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. வெப்ப அலை என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? அது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.
வெப்ப அலை ஏன் ஏற்படுகிறது?
வெப்பநிலை அதிகரிக்கும் சமயங்களில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து காற்றை அழுத்தித் தள்ளும் செயல்முறை நடக்கும். அப்படி காற்று ஒரே பகுதியில் குவிந்து காற்றழுத்தம் அதிகரிக்கும்போது மேகங்கள் உருவாவது கட்டுப்படுத்தப்படும். வானம் நீல நிறத்தில் தெளிவாக காணப்படும்.
அப்போது வானின் மேற்பரப்பில் வெப்பம் பரவி வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும். இப்படி காற்றின் வடிவங்களில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றம் குறிப்பிட்ட பகுதிக்கு வெப்பமான காற்றை கொண்டு வரக்கூடும். அத்துடன் காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலையும் இணைந்து வெப்ப அலைக்கு வித்திடுகின்றன.
எங்கு வெப்பநிலை அதிகமாகும்?
பொதுவாகவே இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கும். இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சத்தீஸ்கார், மத்தியபிரதேசம், குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் சராசரி வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்.
வெப்ப அலை என்றால் என்ன?
பொதுவாக இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் கோடை காலங்களில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பநிலை உயருவதைத்தான் வெப்ப அலை என்று குறிப்பிடுகிறார்கள். பொதுவாக வெப்ப அலை மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் ஏற்படும்.
சில சமயம் ஜூலை மாதம் வரை நீடிக்கும். இயல்பாக இருக்கும் வெப்பநிலையை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் அதனை வெப்ப அலை என்று வரையறை செய்கிறார்கள். அதிலும் சமவெளி பகுதியில் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகவும், கடலோர பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவும், மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியசுக்கு கூடுதலாகவும் வெப்பநிலை உயர்ந்தால் அங்கு வெப்ப அலை வீசுவதாக கணக்கிடப்படுகிறது.
எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்?
வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும்போது நீரிழப்பு, சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு, வியர்வை, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகள் எற்படும். உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அதாவது 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாகும்.
அதனால் மயக்கம், வலிப்பு, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். சிலர் கோமா நிலைக்கு தள்ளப்படலாம். வெப்ப அலைகள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவை அதிகப்படுத்தும். அதனை ஈடுசெய்ய போதுமான திரவ நிலை உணவுகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

வெப்ப அலை வீசும் சமயத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
* தாகம் எடுக்காவிட்டாலும் நாள் முழுவதும் தண்ணீர் மற்றும் திரவ பானங்கள் அருந்திக்கொண்டிருக்க வேண்டும். பருகும் தண்ணீர் அறை வெப்பநிலைக்குள்ளாகவே இருக்க வேண்டும்.
குறிப்பாக குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் நீர் பருகுவதை தவிர்க்கவும். அதிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியல் நிலையில் இருந்தால் குளிர்ந்த நீரை அறவே தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதனை பருகுவது ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
* வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடனே கை, கால்களை கழுவக்கூடாது. அறை வெப்பநிலைக்கு உடல் தன்னை தயார் செய்த பிறகு அல்லது அரை மணி நேரம் கழித்து கை, கால்களை கழுவவோ, குளிக்கவோ செய்யலாம்.
* வெப்பம் அதிகம் நிலவும் வேளையில் சோர்வாக இருந்தால், உடனடியாக குளிர்ந்த நீரை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அது நரம்புகள், ரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழிவகுக்கும். பக்கவாதத்திற்கும் வித்திடும்.
* வெப்பம் அதிகம் நிலவும் சமயத்தில் உடற்பயிற்சி செய்வதையோ, கடுமையான வேலை செய்வதையோ தவிருங்கள்.
* உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை ஆவியாக மாறுவதற்கு ஏற்ப பருத்தியாலான ஆடைகளை அணியுங்கள்.
* வெப்பநிலை அதிகமாக இருக்கும் சமயத்தில் குளிரூட்டப்பட்ட அறை, நூலகம் மற்றும் உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் நேரத்தை செலவிடலாம். தினமும் இருமுறை குளியல் போடலாம்.
- பருவமழை தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ளன.
- மழைநீர் வடிகால்வாய்கள் துண்டிக்கப்பட்டு அடைப்புகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை:
மழைக்கால முன்னேற்பாடுகளை ஆண்டு தோறும் அரசு முன்னெடுத்து வருகிறது. இருந்தாலும் பருவ மழை காலம் சென்னை வாசிகளுக்கு போதாத காலமாகவே மாறி விடுகிறது.
எப்படியாவது சென்னையை மிதக்க வைத்து மக்களை தவிக்க வைத்து விடுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில் பல இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை தண்ணீரில் மூழ்கி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு பருவமழை தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ளன. பருவ மழையை எதிர்கொள்ள சென்னை தயாராக இருக்கிறதா? எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் வடிந்தோட வாய்ப்புகள் இருக்கிறதா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில், மின் வாரியம், குடிநீர் வாரியம் என்று பல துறைகள் மேற்கொண்டு வரும் பணிகளால் இருக்கின்ற கால்வாய்களே அடைபட்டு கிடக்கின்றன. எனவே மழை வந்தால் தண்ணீர் எங்கே போகும் என்ற கேள்விதான் இப்போது சென்னை வாசிகளை பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த ஆண்டு பருவமழையை சந்திப்பது சவாலாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 7 மண்டலங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன.
மாதவரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், கோடம் பாக்கம், வளசரவாக்கம், சோழிங்க நல்லூர், தேனாம்பேட்டை ஆகிய 7 மண்டலங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் துண்டிக்கப்பட்டும், அடைப்புகள் ஏற்பட்டும் உள்ளன.
ஓட்டேரியில் நல்லா கால்வாயில் 250 மீட்டர் தூரத்துக்கு ஓடை துண்டிக்கப்பட்டுள்ளது. ரேடியல் ரோடும், ஓ.எம்.ஆர். ரோடும் இணையும் இடத்தில் மத்திய கைலாசில் இருந்து செல்லும் பாதையில் சுமார் 100 அடி தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ரூ.5,800 கோடி செலவில் நடைபெறும் மேம்பால சாலை பணிகள் துறைமுகத்தில் இருந்து மதுர வாயல் வரை நடக்கிறது. சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த மேம்பால சாலை பணிக்காக கூவம் ஆற்றில் 605 ராட்சத தூண்கள் கட்டப்படுகிறது.
மழை நீர் ஆற்றுக்குள் செல்லும் பகுதிகள் பல இடங்களில் மண் கொட்டப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் கூவம் ஆறு பல இடங்களில் இவ்வாறு மண் கொட்டப்பட்டு இருப்பதால் சுருங்கி கிடக்கிறது.
இது தவிர மின் வாரியம் சார்பில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகள், குடிநீரர் வாரிய பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. இதனால் நீர்வழித்தடங்கள் அடைபட்டு கிடக்கின்றன.
மாதவரம் பால் பண்ணை சாலை, ஜவகர்லால் நேரு ரோடு, புரசைவாக்கம் நெடுஞ் சாலை, பர்ணபி சாலை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுக்கலாம்.
இந்த பழுதுகளை மாநக ராட்சி கண்டறிந்துள்ளது. அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து பருவ மழைக்கு முன்பு இந்த பகுதிகளில் தடையின்றி மழைநீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லா விட்டால் ஆபத்தை தவிர்க்க முடியாது.
- விருதுநகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
- இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் பேசியதாவது:-
1.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதனடிப்படையில் காவல் துறை சார்பில் பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நிலையிலான ஒரு குழுவினை அமைக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொதுப்பணி துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான செய்திகள் மற்றும் எச்சரிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் TNSMART - மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
மழை, வெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு, கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இடி, மின்னல் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை "DAMIN" மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மின்தடை, சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின் வயர்கள் தொடர்பான புகார்களுக்கு 94987 94987 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.






