search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "precautionary measures"

    • தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழந்துள்ளது. மேலும் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்கா தவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும்.

    ஒரு சில இடங்களில் மின் சப்ளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குடிநீர் சப்ளை மற்றும் போர் மோட்டார் இயக்கத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அந்த ஊர்களில் எல்லாம் குடிநீர் டேங்க், சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்டவற்றை இன்றே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்பு படை குழு வருகை தர உள்ளது.

    • வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடை பெற்றது.
    • வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்ஷஜீ வனா தலைமையில் நடை பெற்றது

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:

    வடகிழக்கு பருவமழைக் காலத்திற்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவ லர்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

    பேரிடரின் போது பொது கட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமான தாகவும் தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை கட்டிடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை சரிசெய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    நீர்நிலைப் புறம்போக்கு களான ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையினை ஆராய்ந்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உரிய நட வடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

    அவசர காலங்களில் கிராமங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் வழிகளுடன் கூடிய செயல் திட்டத்தினை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக தயார் செய்து வைத்திருத்தல் வேண்டும்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள த்தால் பாதிக்கப்படும் கிராமங்களிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு ஏதுவாக பள்ளிக் கட்டிட ங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களின் தொடர்பு எண்களுடன் கூடிய பட்டியலை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். வட்ட அளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித் துறையினரின் செயல்முறை விளக்கம் நடத்தி பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    நீர்நிலைகளில் பொது மக்கள், சிறுவர் - சிறுமிகள் இறங்குவதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க நீர்நிலைகளின் ஆழமான பகுதிகள் குறித்த முன்னெ ச்சரிக்கை அறிவிப்பு பலகையினை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நீர்நிலைகளின் கரைகளில் வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    • டிசம்பர் 6-ந் தேதி நாளை என்பதால் தமிழகத்திலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
    • மதுரை விமான நிலையப்பகுதியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ந் தேதி நாளை என்பதால் தமிழகத்திலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பஸ்- ெரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    ெரயில் நிலையத்தில் பயணிகள் மெட்டல் டிடெக்டர் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படு கிறார்கள். பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் பார்சல் அனுப்பவும் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

    தண்டவாளங்கள், ெரயில் பெட்டிகளிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள வாகன சோதனை சாவடிகளிலும் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை விமான நிலையப்பகுதியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மயிலம், திருவக்கரை கோவில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • பாதுகாப்பு துறை உதவி யாளர் ஜீவானந்தம்,தலைமை காவலர் செல்வ வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் மங்களூரில்ஆட்டோவில் குக்கர் வெடிப்பு நடந்தது. மேலும் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல பல்வேறு இடங்களில் (ஐ.எஸ்.ஐ.எஸ்.) அமை ப்பில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தும் அவர்கள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் எஸ்ஐக்கள் முருகன், ரவிச்சந்திரன், பா ர்த்தசாரதி, வெங்கடேசன், சிறப்பு உதவி யாளர் ராம வெங்கடேசன், வெங்கடேசன், தலைமையி லான வெடிகுண்டு நிபுணர்கள் மயிலம் முருகன் கோவில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், திண்டிவனம் ெரயில்வே நிலையம் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் மெட்டல் டிடக்டர் உதவியுடனும் மற்றும் மோப்பநாய் தமிழ் வர வைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் முன்னெ ச்சரிக்கை நடவடி க்கையாக சோதனை நடத்தினார்.திண்டிவனம் ரயில்வே நிலைய த்தில்ரயில்வே பாதுகாப்பு துறை உதவி யாளர் ஜீவானந்தம்,தலைமை காவலர் செல்வ வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர். இதனால் திண்டிவனம் மற்றும் மயிலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • விருதுநகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
    • இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் பேசியதாவது:-

    1.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதனடிப்படையில் காவல் துறை சார்பில் பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நிலையிலான ஒரு குழுவினை அமைக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பொதுப்பணி துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை சீரமைக்க வேண்டும்.

    பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான செய்திகள் மற்றும் எச்சரிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் TNSMART - மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

    மழை, வெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு, கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இடி, மின்னல் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை "DAMIN" மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    மின்தடை, சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின் வயர்கள் தொடர்பான புகார்களுக்கு 94987 94987 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    ×