search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள"

    • மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 1.60 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஆபத்தை விளை விக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 1.60 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கிருஷ்ணராஜா சாகர் அணை, கபினி அணை

    களில் இருந்து அதிக அள விலான நீர் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. ஏற்கனவே சுமார் 1.60 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், தற்போது 2.10 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொது மக்க ளுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து அதிக அள வில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளை விக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணை யின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி கள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்க கிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

    குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டு வதையோ, புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்ப தையோ முற்றிலும்தவிர்த்திட வேண்டும். மீறினால் காவல்து றைமூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    • காவிரி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரி–கள் அறிவுறுத்தி உள்ளனர்.
    • நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.

    பரமத்திவேலூர்:

    மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து பரமத்தி வேலூர், மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரி–கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பரமத்தி வேலூர், மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோரம் உள்ள பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.

    நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும்.

    மேலும், பாதிக்கப்படக்–கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் மற்றும் பரமத்திவேலூர் வட்டத்திற்கு 94450 00546, மோகனூர் வட்டத்திற்கு 99524 12755, ஆகிய எண்களில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
    • இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக உபரி நீராக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

    எடப்பாடி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், காவிரியில் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேலாக இருந்து வரும் நிலையில், தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

    இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக உபரி நீராக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூலாம்பட்டி பகுதியில் தண்டோர மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை ஒடுக்கப்பட்டு வருகிறது.

    அதில் காவிரியில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் சூழலில், கரையோர பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றினை கடக்கவோ, மீன் பிடித்தல், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், காவிரி வடிகால் பகுதியில் உள்ள மணல் தீட்டுகளில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், விளைபொருட்களை உலர்த்தவும் கூடாது எனவும், கரையோர நீர் பிடிப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    • குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
    • தேவையான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

    குமாரபாளையம்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

    அதனால் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது.இது குறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது காவிரியில் அதிக நீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்ல வேண்டி கூறி வருகிறோம்.

    மேலும் தங்குவதற்கு தேவையான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

    ×