search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர் கால பயிற்சி வகுப்பு
    X

    பேரிடர் கால பயிற்சி வகுப்பு

    • பொதுமக்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் கால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • அலுவலர் கணேசன் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவான செய்முறைப் பயிற்சிகளை வழங்கினார்.

    நன்னிலம் :

    நன்னிலம் தாலுகா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், எதிர்வரும் வட கிழக்கு பருவமழையால், பேரிடர் ஏற்பட்டால் அதில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் கால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, நன்னிலம் வருவாய் வட்டாட்சியர் பத்மினி தலைமை தாங்கி னார். வருவாய் ஆய்வாளர் நெடுமாறன் முன்னிலை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை நிலைய அலுவலர் கணேசன் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவான செய்முறைப் பயிற்சிகளை வழங்கினார்.

    நன்னிலம் வட்ட கிளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் உத்தமன் முதலுதவி முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பயிற்சியாளர் பரிமளா காந்தி, முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினார். இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட கிராமங்க ளிலிருந்து, தேர்வு செய்ய ப்பட்ட முதல் நிலை பொறு ப்பாளர்கள் பயிற்சி பெற்றனர்.

    Next Story
    ×