search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Precautionary"

    • மதுரையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பாது காப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    மதுரை

    ஆங்கில புத்தாண்டுக்கு 13 நாட்களே உள்ளன. இதையொட்டி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பாது காப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்ற சம்பவங்க ளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் தொடர்புடைய சுமார் 1000 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் ஜாமீனில் விடு தலை செய்யப்பட்டுள்ள னர். அவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடு கின்றனரா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் குற்ற சம்பவங்க ளில் மீண்டும் ஈடுபட தயா ராகி வரும் ரவுடிகளில் பலரை கைது செய்ய போலீசார் முடிவு செய்த னர்.

    இதற்கான பணி கடந்த ஒரு மாதமாக தொடங்கி நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, கருப்பாயூரணி, வாடிப்பட்டி, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, மாநகரில் தல்லாகுளம், செல்லூர், தெப்பக்குளம் உள்பட பல்வேறு போலீஸ் நிலை யங்களில் இருந்து சுமார் 100 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர தப்பி ஓடிய மேலும் பலரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    • புயல், கன மழையால் பொதுமக்களின் பாதிப்பை தடுத்திடும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம்.
    • ஒருவார காலத்திற்கு தேவையான உணவு பொருள்கள், குழந்தைகளுக்கான பால், மற்றும் மருந்து. மத்திரைகள், மின்தடையை சமாளிக்க மெழுகுவத்திகள், கான்டா விளக்குகள் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மெலட்டூர்:

    அம்மாப்பேட்டை ஒன்றியம், வடக்கு மாங்குடி ஊராட்சியில் மாண்டஸ் புயல், கன மழையால் பொதுமக்களின் பாதிப்பை தடுத்திடும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அப்துல் நாசர், ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் லதா, கிராம உதவியாளர், மின்வாரிய பணியாளர்கள், தன்னார்வாலர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள்,

    பணித்தள பொறுப்பா ளர் மற்றும் தேசிய ஊரகப் பணி ஒருங்கிணைப்பாளர் கலந்துக் கொண்டனர்.

    ஆய்வு கூட்டத்தில் மழையால் பொதுமக்கள் வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மேட்டு பாங்கான இடங்களுக்கு மாற்றி உதவிடவும், மின்சாரம் தடை ஏற்படும் போது குடித்தண்ணீர் தட்டுபாட்டை போக்கிட மின் உற்பத்தி இயந்திரம் (ஜெனரேட்டர்) கொண்டு மேல் நீர் தேக்கத் தொட்டி மோட்டாரை இயக்கிடவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உணவுகள், மற்றும் தங்குவதற்கான ஏற்படு செய்துதர முடிவு செய்யப்பட்டது.

    மேலும் பொதுமக்கள் ஒருவார காலத்திற்கு தேவையான உணவு பொருள்கள், குழந்தைகளுக்கான பால், மற்றும் மருந்து. மத்திரைகள், மின்தடையை சமாளிக்க மெழுகுவத்திகள், கான்டா விளக்குகள் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்கவும், அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    மேலும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் அருகே செல்லவோ, தொடவோ கூடாது எனவும் புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது
    • பெரம்பலூரில் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    பெரம்பலூர்:

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு பேரிடர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் லாடபுரம், திருவாளந்துறை, வேள்விமங்களம், சிறுகன்பூர் கிழக்கு கொட்டரை ஆகிய கிராமங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லாடபுரம் சின்ன ஏரியில் பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மூலம் நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டார்.

    அப்போது தீயணைப்புத்துறையின் மூலம் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, மீட்பு பணியின் போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர் காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை, இரும்பு பொருட்களை வெட்ட வல்ல ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு, விபத்து நேரங்களில் வாகனங்களின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் பொருட்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவற்றின் இயக்கம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    வெள்ள நேரங்களில் பொதுமக்களை காப்பாற்ற, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி அவர்களை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பல்வேறு முறைகளை பின்பற்றி அழைத்து செல்வது குறித்த செயல்விளக்கம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    • தேவகோட்டை நகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சி அவசர கூட்டம் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சாந்தி, மேலாளர் முன்னிலை வகித்தனர்.

    பருவமழை தொடங்க இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள், சிறு பாலங்கள் அடிப்புறத்தில் முழுமையாக தூர்வார வேண்டும்.

    தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்காமல் நகர் பகுதியில் 84 கிலோ மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகால்களையும், 15 கிலோ மீட்டர் உள்ள குளக்கால், 302 சிறு பாலங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

    பன்றிகளால் டெங்கு, மலேரியா, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் நிலை உள்ளதால் நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை உயிருடன் பிடித்து நகரின் எல்கையில் விட ஆணையாளர் உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பெருமா கண்மாய், காட்டூரணி, அழகப்பா ஊரணி போன்ற நீர்நிலைகள் மேம்பாட்டுபணி மற்றும் பேருந்து நிலையம் மேம்பாட்டு பணி, வாரச்சந்தை மேம்பாட்டு பணி, அழகப்பா ஊரணி பூங்கா மேம்பாட்டுபணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×