search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Continued rain"

    • தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ளது. வரத்து 781 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4426 மி.கன அடி.

    மழை நீடிக்கும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.90 அடியாக உள்ளது. வரத்து 710 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 3400 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.40 அடி. வரத்து 33 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 383 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.54 அடியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 97 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு 1.6, தேக்கடி 2.2, உத்தமபாளையம் 2.4, போடி 2.6, வைகை அணை 16.8, மஞ்சளாறு 30, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 21, வீரபாண்டி 9.2, அரண்மனைப்புதூர் 10.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • தொடர் மழையால் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • கும்பக்கரை அருவியில் சீரான அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணைகளுக்கு தண்ணீர் வருவதாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாலும் விவசாயிகளுக்கு ஆறுதலை தந்துள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 117.15 அடியாக உள்ளது. வரத்து 204 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2114 மி.கன அடி. வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 57.49 அடியாக உள்ளது. வரத்து 113 கன அடி. திறப்பு 822 கன அடி. இருப்பு 2336 மி.கன அடி.

    மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக 750 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அது நிறுத்தப்படும் என தெரிகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 40 அடி. வரத்து 47 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 85.77 அடி. வரத்து 24 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் சீரான அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    பெரியாறு 0.6, கூடலூர் 2.2, சண்முகாநதி அணை 1.6, உத்தமபாளையம் 2.4, போடி 0.6, சோத்துப்பாறை 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
    • இடைவிடாது கொட்டி தீர்த்த மழையினால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் கொடைக்கானல், பழனி, சத்திரப்பட்டி, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானலில் நேற்று 3-வது நாளாக பகலில் தொடங்கிய மழை நள்ளிரவுக்கு மேலும் நீடித்தது. இடைவிடாது கொட்டி தீர்த்த மழையினால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடியதால் நடந்து செல்லமுடியாமலும், வாகனங்களில் பயணிக்க முடியாமலும் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    ஏற்கனவே சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்ட நிலையில் தற்போது பெய்த கனமழையால் மேலும் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்தது. இதேபோல் திண்டுக்கல் நகரிலும் கொட்டிதீர்த்த மழையினால் மாநகராட்சிக்குட்பட்டட பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலைகளாக மாறிவருகின்றன. மழைநீர் தேங்கியுள்ள சாலைகளில் வாகனங்கள் தவறிவிழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    கூட்டுறவு நகர், சுப்ரீம்நகரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது பாதாளசாக்கடை தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம்போல் தேங்கியது. அதனை மாநகராட்சி அதிகாரிகள் ஒருவாரமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து தண்ணீர் தேங்கி கிடந்த நிலை மாறியது. தற்போது 3 நாட்களாக பெய்த கனமழையால் சுப்ரீம்நகரில் மீண்டும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

    அங்கு ெகாசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்திற்கு முன்னதாக போதிய வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெறாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 282 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது. திண்டுக்கல் 10.6, கொடைக்கானல் 53, பழனி 31, சத்திரப்பட்டி 57.2, வேடசந்தூர் 1.2, போட்கிளப் 127.9 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2,3 தினங்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது.
    • பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    வட தமிழகப் பகுதிகளில் மேல்வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2,3 தினங்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது. கடலூர் மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மட்டும் 14 சென்டிமீட்டர் மழை பெய்தது. மேலும் இந்த மழை கடலூர் மட்டுமல்லாமல் பண்ருட்டி, நெல்லி க்குப்பம், சிதம்பரம், விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இரவு நேரங்களில் பெய்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை காலை முதலும் நீடித்தது. இதனால் அலுவலகங்கள் மற்றும் பிற பணிகளுக்கு செல்வோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு மழை நீர் மூலம் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டை, மரம் அறுக்கும் இயந்திரம் மேலும் ஜேசிபி உள்ளிட்ட மழைக்காலங்களில் பயன்படுத்தக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொருள்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள அனைத்து துறை அதிகாரிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிகமானால் அங்குள்ள பொதுமக்களை விரை வாக வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு முன் எச்சரிக்கையும் நடவடிக்கையும் மாவட்டம் முழுவதும் சப் கலெக்டர் வருவாய் கோட்டாட்சியர் தலை மையில் அரசு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் வேளாண் அதிகாரிகள் மூலமும் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    ×