search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிரம்"

    • இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.
    • பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

    வாக்காள பெருமக்களே.. மறந்தும் இருந்து விடாதீர்கள்... என்ற வாகன பிரசாரம் வீடுகளுக்குள் இருந்தாலும் தற்போது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

    நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.

    தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுவதால், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசியல் கட்சியினருக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதனால், திரும்பிய பக்கமெல்லாம் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காணப்பட்டனர். மேள தாளங்கள் அடித்தப்படி ஊர்வலமாக சென்றனர்.

    பிரசார வாகனங்களில் கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடிகளை அசைத்து, நடனமாடினர்.

    பாடல்கள் ஒலிபரப்பிக்கொண்டு ஆட்டோ முன் செல்ல, வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். அவர்களுடன் தொண்டர்கள் கையில் பதாதைகளை ஏந்தி நடனமாடிக் கொண்டே பின்தொடர்ந்து சென்றனர்.

    குறிப்பாக மலைக் கிராமங்கள், சாலை வசதியற்ற மற்றும் நீண்ட தொலைவில் உள்ள குக்கிராமங்களுக்கு வேட்பாளர்கள் சென்று குக்கிராமங்களிலும், வேட்பாளர்கள் வராத பகுதிகளிலும் வாக்காளர்களை கவரும் வகையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டனர்.

    எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் அரசியல் கட்சி தொண்டர்கள் தலைவர்கள் போல் வேடம் அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு அவர்கள் போல் பேசி பொதுமக்களை கவர்ந்தனர்.

    பெரியார் போல் வேடம் அணிந்து வருபவர்கள் சுய மரியாதை, பெண் விடுதலை குறித்தும் கருணாநிதி போல் வருபவர்கள் அவரது வசனம் மற்றும் கொள்கைகள் குறித்தும் பேசினர்.

    மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடம் அணிந்து வருபவர்கள் அவரது கொள்கைகள் குறித்தும் மற்றும் எம்.ஜி.ஆர். பாடிய பாடல்களை பாடி அவர் போல் நடித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகிறது. மேலும் மேள தாளங்கள் முழங்க சினிமா பாடல்கள், அரசியல் கட்சி பாடல்கள் மூலம் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தினர்.

    தொண்டர்கள் கட்சி சின்னங்களை உடலில் வரைந்து ஓட்டு கேட்டனர்.

    சைக்கிள், இருசக்கர வாகனங்களில் கட்சி சின்னங்களை வைத்து கொண்டு பல பகுதிகளில் சுற்றினர்.

    பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

    வேலூரில் சிலர் கரகாட்டம் ஆடுபவர்களை அழைத்து வந்தனர். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை கவரும் வகையில் கரகாட்டம் ஆடினர். மோகினி ஆட்டம், கதகளி ஆட்டமும் நடந்தது.

    இதை பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்தனர்.

    இறுதிகட்ட பிரசாரத்தில் எங்கு பார்த்தாலும் தாரைதப்பட்டை ஆட்டம் என திருவிழா போல் காட்சி அளித்தது.

    • கைது செய்யப்பட்டவா்களை தங்க வைக்கக்கூடிய இடங்களில் எந்தவித வசதியும் இல்லையென்றும் ஆசிரியா்கள் புகாா் தெரிவித்தனா்.
    • தமிழகம் முழுவதும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    சென்னை:

    ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தியும், சம வேலைக்கு சம ஊதியம் கோரியும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியா்கள் சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் கடந்த 19-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் சாா்பில் நடை பெற்று வரும் இந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

    நேற்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்தில் ஆசிரியா்கள் போராட்டம் நடத்த முயன்றனா். அப்போது இடைநிலை ஆசிரியா்களை போலீசார் கைது செய்தனா். அவா்களை 2 மணி நேரத்துக்கும் மேலாக, போலீஸ் வாகனத்திலேயே வைத்து பல்வேறு இடங்களில் சுற்றி அலைக்கழித்ததாகவும், கைது செய்யப்பட்டவா்களை தங்க வைக்கக்கூடிய இடங்க ளில் எந்தவித வசதியும் இல்லையென்றும் ஆசிரி யா்கள் புகாா் தெரிவித்தனா்.

    மேலும், போலீசார் தாக்கியதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சோ்ந்த கலிய மூா்த்தி என்பவா் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று ஆசிரியர்கள் போராட்டம் 7-வது நாளாக நீடிக்கிறது.

    இந்நிலையில் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை நாளை முதல் தீவிரப்படுத்த உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது:-

    ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இதுவரை சென்னையில் மட்டும் போராட்டம் நடத்தி வருகிறோம். முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். நாளை முதல் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.

    நாங்கள் நீண்டகாலமாக எங்களின் உரிமைகளை இழந்து வருகிறோம். இது தொடர்பாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோர் நட வடிக்கை எடுக்கவில்லை. இதனால் பல்லாயிரக்க ணக்கான ஆசிரியர்கள் தங்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காமல் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராள மானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து அதிகரித்து காணப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் தற்போது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.

    நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 4 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் தொடங்கியது
    • வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-நாகர்கோ வில், காவல்கிணறு- நாகர்கோவில், நாகர்கோவில்-வில்லுக்குறி, வில்லுக்குறி-உச்சக்கடை என 4 பிரிவுகளாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முற்றிலும் புதிய வழித்தடமாக அமையும் இந்த சாலை நீர் நிலைகளை பாதிக்கும் என்றும் எனவே ஏற்கனவே இருக்கும் என்.எச்.47 சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன. பின்னர் இந்த வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் கமிட்டி ஆய்வு செய்து அளித்த அறிக்கை யின்படி நீர்நிலைகள் பாதிக் காமல் பாலங்கள் அமைத்து கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதில் குமரி மாவட்டத்தில் 29 பெரிய பாலங்களும், 12 சிறிய பாலங்களும், 2 இடங்க ளில் தண்ணீர் செல்லும் குழாய்களும், 75 பெரிய கல்வெர்ட்களும் 8 இடங்களில் சிறியகல்வெர்ட்களும் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    அந்த அடிப்படையில் இந்த 4 வழிசாலை பணிக்காக குமரி மாவட்டத்தில் உள்ள தாம ரைக்குளம், பொட்டக் குளம், புதுக்குளம், நட்டாலம் மவுதக்குளம், மாம்பள்ளி குளம், செட்டிகுளம், பகவதிக்குளம், ரெட்டை குளம், அரசமுத்துகுளம், பிலாஞ்சேரிகுளம், வெள்ளி யாகுளம், பாம்பாட்டிகுளம், செல்லாக்குளம்-1, செல்லா க்குளம்-2, நாச்சியார்குளம், கரிச்சான்குளம், அம்பலத்தடி குளம், குதிரை பாஞ்சான் குளம், அனந்தன்குளம்-1, அனந்தன்குளம்- 2, தேவன் குளம், பாணாகுளம், சுந்தர நைனார்குளம், நிலப் பாறைக்குளம், கிருஷ்ண சமுத்திரகுளம், புத்தேரிகுளம், பிராந்த நேரிகுளம், புரு ஷோத்தமநேரிகுளம், தாணு மாலையன்குளம், புளி யன்குளம், கண்டுகிருஷிகுளம், பள்ளக்குளம், ராஜேந்திரிகுளம், மந்தாரம்புதூர் குளம், தேவகுளம், கவற்குளம், அகஸ்தியர்குளம், பன்னிக்குண்டுகுளம், நுள்ளி குளம் ஆகிய குளங்களில் பாலம் அமைக்க பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.

    இந்த பாலங்களை அமைக்க கூடுதலாக ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தியர்குளம், பொற்றையடி பள்ளக்குளம் உள்பட பல குளங்களில் 4 வழிசாலைக்காக பாலங்கள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக இந்த குளங்களில் மேம்பாலங்கள் அமைப்பதற்காக ராட்சத எந்திரங்கள் மூலம் சிமெண்ட் பிளாக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையி லான நான்கு வழிசாலையில் கொட்டாரம்-அகஸ்தீஸ்வரம் சாலையின் குறுக்கே வடுகன் பற்று பகுதியில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இருபுறமும் மண் நிரப்பி இணைப்பு சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கொட்டாரம் பகுதியில் நான்கு வழி சாலை முழுமை அடையாமல் இருந்தது.

    இந்த நிலையில் 4 வருடங்க ளுக்கு பிறகு கொட்டாரம் நான்கு வழிச்சாலை மேம் பாலத்தை இணைக்கு வகையில் தற்போது இருபுற மும் ஏராளமான டாரஸ் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து நிரப்பப்பட்டு "ரோடுரோலர்" மூலம் இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. கொட்டாரம் பகுதியில் நடந்து வரும் இந்த நான்கு வழிசாலை மேம்பால இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் என்ஜீ னியர்கள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    • டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பணி மேற்கொண்டு வருகின்றனர்.
    • தண்ணீர் தொட்டியை தொண்டாமுத்தூர் செயல் அலுவலர் பழனியப்பன் கள‌ ஆய்வு செய்தார்.

    வடவள்ளி,

    தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தடுப்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தொண்டாமுத்தூர் அனைத்து வார்டுகளிலும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    தேங்கி நிற்கும் தண்ணீர் தொட்டிகள், டயர்கள், போன்றவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா என்பதை கண்டுபிடித்து உடனடியாக அதை அப்புறப்படுத்தி மருந்து தெளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 7-வது வார்டு குபேரபுரி பகுதியில் ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டியை தொண்டாமுத்தூர் செயல் அலுவலர் பழனியப்பன் கள ஆய்வு செய்தார். 

    • புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • இதுவரை 20 சதவீத பணிகள் முடிவ டைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் ஏற்கனவே இருந்த பஸ் நிலையத்தை இடித்து விட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் அதே இடத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது.

    சுமார் 150 மீட்டர் நீளத்திலும், 120 மீட்டர் அகலத்திலும் பஸ் நிலையம் கட்டுவதற்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டன. இதில் ஒவ்வொரு தூண்களும் சுமார் 4 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன.

    ஒரே நேரத்தில் 35 பஸ்கள் நிறுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தவிர பஸ் நிலையத்தில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் வந்து செல்ல வசதியாக தனி பாதையும் அமைக்கப்பட உள்ளன. இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கும் தனியாக வாகன நிறுத்துமிடமும், 100-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகளும் கட்டப்பட உள்ளன.இந்த கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள் ளதாகவும், இதுவரை 20 சதவீத பணிகள் முடிவ டைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
    • பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.

    பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பரிசல் மூலம் தேடுதல்

    உடனடியாக இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசா ருக்கு தகவல் அளித்தனர்.

    இதனிடையே சம்பவம் நடந்த இடம் ஈரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் துணையுடன் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    7-க்கும் மேற்பட்ட பரிசல்களுடன் நேற்று இரவு 7 மணி வரை பெண்ணை தேடும் பணி நடந்தது.

    இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    காவிரி ஆற்றில் குதித்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரம்ம தீர்த்த குளத்தில் தண்ணீர் வெளியேற்றத்தை தீவிரமாக நடந்து வருகிறது.
    • மீன்கள் செத்து மிதந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே திருஉத்தர கோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால்தொடர்ந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவில் ராஜகோபுரத்திற்கு முன்பாக ராமநாதபுரம் செல்லும் சாலையில் 3 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம தீர்த்த தெப்பக்குளம் அமைந்துள்ளது.

    பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற பிரம்ம தீர்த்த தெப்பக்குளத்தில் 2000-ம் ஆண்டு வரை பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வந்தனர். வீடுகளில் உள்ள கழிவுநீர் பிரம்ம தீர்த்த குளத்தில் கலந்ததால் நீராடுவதற்கு தகுதியற்ற நிலையில் இருந்தது. இதனால் பக்தர்கள் தலையில் மட்டும் தண்ணீர் தெளித்து சாமி தரிசனம் செய்து வந்தனர். கடந்த ஜூன் 19-ந்தேதி பிரம்ம தீர்த்த தெப்பக்கு ளத்தில் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன. இதைக் கண்டு ஏராளமான பக்தர்கள் பிரம்ம தீர்த்தத்தில் உள்ள தண்ணீரை சுத்தம் செய்யு மாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தின் சார்பில் பிரம்மதீர்த்த தெப்பக் குளத்தை தூய்மை செய்யும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. அதன்பின் மழை நீர் சேகரிப்பு முறையில் தூய்மையான நீர் குளத்தில் சேகரிக்க திட்ட மிட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில், திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில், கோவிலின் சரக பொறுப்பாளர் சரண்யா மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    • அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
    • நெற்பயிருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நெல்லுக்கான நுண்ணூட்ட உரம் ஆகியவையும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது.

    உடுமலை:

    உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர். நாற்றங்கால் நடவு முறை, நெல் விதைப்பு முறையில் சாகுபடி மேற்கொள்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான கோ 51 விதை நெல் 11 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.அதே போல் நெற்பயிருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நெல்லுக்கான நுண்ணூட்ட உரம் ஆகியவையும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது.

    விவசாயிகள் இவற்றை வாங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.   

    • ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 300-க்கும் அதிக மான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பஸ்கள் நின்று செல்லும் வகையில் ரெயில் நிலையம் அருகே பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

    ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து 300-க்கும் அதிக மான பஸ்கள் இயக்கப்படு கின்றன. போதிய பராம ரிப்பின்றி பஸ் நிலைய தரைத்தளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. பிளாட்பார கடைகளில் கூரை பூச்சு பெயர்ந்து அடிக்கடி கீழே விழுகிறது.

    இந்த நிலையில் ரூ.20 கோடியில் பஸ் நிலையத்தை சீரமைத்து சந்தை திடல் வரை விரிவுபடுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு தற்காலிகமாக பயணிகள் வசதிக்காக பழைய பஸ் நிலையம், மூலக்கொத்தளம் பகுதிகளில் இருந்து பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து ரெயில் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலையத்தில் புதிதாக தரைத்தளம் அமைத்தல், கழிவறை செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறை வடைந்து செயல்பட தொடங்கியதும் புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் அகற்றப்பட்டு விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இதை தொட ர்ந்து அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குற்ற செயல்கள் தடுப்பது குறித்து போலீ சாருக்கு அறிவுரை கூறி ஆய்வு செய்து வருகிறார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி சீட்டுகள் விற்ப னை, குட்கா மற்றும் ரவுடிகள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்கவும், மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை வேண்டும். இதே போல் பொதுமக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு உத்தரவின் படி புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் பு.புளியம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை கண்காணித்து வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து பவானிசாகர் ரோடு, கோவை ரோடு, நால்ரோடு, சோதனை சாவடி பகுதி, நம்பியூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிர ப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    • காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார்.
    • நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 64). இவர், காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று காலை பழனியம்மாள் குடி சையில் இருந்து வெளியில் வரவில்லை. இதையடுத்து, தீவனம் இன்றி கால்நடை களும் கத்தத் தொடங்கின. அதனைக்கேட்டு அப்பகுதி மக்கள் குடிசைக்கு சென்று பார்த்துள்ளனர்.

    அங்கு, நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

    பழனியம்மாளின் தலை யில் கல்லால் தாக்கியதில், அதிகளவில் ரத்தம் வெளி யேறிய நிலையில் உயிரி ழந்திருப்பது தெரியவந்தது. கொலை சம்பவம் குறித்து அறிந்த டி.எஸ்.பி. மகா லட்சுமி, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, கொலை நடந்த விதம் குறித்து விசா ரணை மேற்கொண்டார்.

    நிர்வாண நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்ததை பார்க்கும் போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டடிருக்கலாம் என போலீசார் தெரிவித்த னர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான் முழுவிபரம் தெரிய வரம் என கூறினர். தொடர்ந்து மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. குடிசை வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய ஸ்டெபி, மெயின் ரோடு வரை சென்று நின்றுவிட்டது. மேலும், நாமக்கல்லில் இருந்து தடய அறிவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தடயங்களை சேகரித்தனர்.

    தொடர்ந்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட எஸ்.பி.கலைச்செல்வன், சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளியை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டார்.

    2 மாதங்களுக்கு முன்பு பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியைச் சேர்ந்த மூதாட்டி பாவாயம்மாள், பாப்பம்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் நிர்வணா நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இந்த வழக்கில் கொலையாளி குறித்து துப்பு துலங்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், அதேபோல் மற்றொரு கொலை சம்ப வம், பள்ளிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×