search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருவாய் இழப்பை தடுக்க வரி வசூலில் தீவிரம்
    X

    வருவாய் இழப்பை தடுக்க வரி வசூலில் தீவிரம்

    • வருவாய் இழப்பை தடுக்க வரி வசூலில் தீவிரம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள்.
    • வரிவசூல் செய்வதன் மூலம் கிராமங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம். கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அபிராமம் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிதி ஆதாரத்தை பெருக்க குடிநீர், தொழில்வரி, வீட்டு வரி உள்பட ஊராட்சி சம்பந்தமான அனைத்து வரிகளையும் இன்றுக்குள் (31-ந் தேதி) முழுமையாக முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 436 ஊராட்சிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஊராட்சிகள் நிதி ஆதாரத்தை பெருக்க குடிநீர், தொழில்வரி, வீட்டு வரி, நூலக வரி, சொத்து வரி போன்றவற்றின் மூலம் நிதி தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது.

    அதேபோல் கமுதி யூனியனில் உள்ள அச்சங்குளம், நத்தம். வங்காருபுரம், உடைய நாதபுரம், நகரத்தார் குறிச்சி, டி.புனவாசல், பாப்பணம் உள்பட 53 ஊராட்சிகளில் குடிநீர் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, நூலக வரி போன்றவரிகள் வசூல் செய்யப்படுகிறது. மார்ச் இறுதிக்குள் (இன்றுக்குள்) முழுமையாக வரி வசூல் செய்யும் பணி நடந்துவருகிறது.

    இதற்காக ஊராட்சி செயலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தினமும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வரி வசூல் செய்து உடனடியாக ரசீது வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூறுகையில், ஊராட்சிகளில் வருவாய் இழப்பை சரி செய்ய வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31-க்குள் முழுமை யாக வரி வசூல் செய்யும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். வரிவசூல் செய்வதன் மூலம் கிராமங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை செய்வதற்கு மாநில நிதிக்குழு மூலம் கூடுதல் நிதி ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×