search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை தீப திருவிழாவையொட்டி  செஞ்சி பகுதியில் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்
    X

    சாலை சீரமைக்கும் பணி நடைபெறும் காட்சி. 

    திருவண்ணாமலை தீப திருவிழாவையொட்டி செஞ்சி பகுதியில் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்

    சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் வரும் 6-ம் தேதி திருவண்ணாமலை தீப திருவிழா நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    புதுவை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல தடவை தடைபட்டு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது இதனால் ஆங்காங்கே சில இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் வரும் 6-ம் தேதி திருவண்ணாமலை தீப திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழகஆளுநர் ரவி கலந்து கொள்ள உள்ளார். மேலும் இதில் நீதிபதிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து திண்டிவனம் , செஞ்சி வழியாகத்தான் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும். இதனால் இப்போது தற்காலிகமாக பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    இந்தச் சாலையின் வழியாக திருவண்ணாமலை தீபத்தன்று சென்னை புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

    Next Story
    ×