search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி"

    • வீட்டில் மாணவி இன்று காலை 7.45 பள்ளிக்குச் செல்வதற்காக தயாராக இருந்தார்.
    • போலீசாரின் விசாரணையில் அந்த மாணவி வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    வீட்டில் மாணவி இன்று காலை 7.45 பள்ளிக்குச் செல்வதற்காக தயாராக இருந்தார். அப்போது அவருடைய தாய் வெளியே சென்ற சிறிது நேரத்தில் பின்னர் வீடு திரும்பியபோது பையை வீட்டில் வைத்துவிட்டு மாணவி மாயமானது தெரியவந்தது.

    இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் இது குறித்து உடனடியாக கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.போலீசாரின் விசாரணையில் அந்த மாணவி வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதாக வீட்டில் மாணவி கூறியுள்ளார். ஆனால் அவர் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இன்று பள்ளியில் ரேங்க் கார்டு வழங்க உள்ளதால் எங்கே தன்னைப் பற்றிய உண்மை தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாக மாணவி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த மாணவியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • தூத்துக்குடியை சேர்ந்தவர் சுகிர்தா. இவர் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்
    • கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

    நாகர்கோவில் : தூத்துக்குடியை சேர்ந்தவர் சுகிர்தா. இவர் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் பரமசிவம் மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஹரிஷ், ப்ரீத்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பரமசிவத்தை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பரமசிவத்திற்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    தற்பொழுது பாளையங்கோட்டை ஜெயிலில் பரமசிவம் அடைக்கப்பட்டுள்ளார். பயிற்சி டாக்டர்கள் ஹரிஷ், ப்ரீத்தி இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர்.

    இந்த நிலையில் இருவரும் முன் ஜமீன் பெற்றனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி.போலீசார் ஹரிசுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். சம்மனை ஹரிசின் உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியுள்ளனர். மேலும் ப்ரீத்திக்கு சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது47). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமாறன் தான் பழகி வந்த பெண்ணின் மூத்த மகளான கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். இதனை மாணவி கண்டித்து தனது தாயிடம் முறையிட்டார்.

    இந்நிலையில் மணிமாறன் 2-வது முறையாக அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை தேடி வருகிறார்கள்.

    • காட்வின் மைக்கேல் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
    • தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு பாலாஜி கார்டனை சேர்ந்த டிரைவர் காட்வின் மைக்கேல் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். ஆனால் காட்வின் மைக்கேல் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    கடந்த 1-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர் மாணவியை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து சென்றார். காட்வின் மைக்கேலும், மாணவியும் சேர்ந்து சென்றபோது மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். அவர் 2 பேரையும் கண்டித்து போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி விடுவதாக கூறி எச்சரித்தார்.

    இதனால் பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து காட்வின் மைக்கேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் காட்வின் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சிவசாந்தினியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
    • தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே மேலபெருவிளை சானல்கரை பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகள் சிவ சாந்தினி (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு சிவ சாந்தினி வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த அவரது சகோத ரிக்கும், சிவ சாந்தினிக்கு இடையே தகராறு ஏற்பட் டது. இதையடுத்து அவரது தாயார் இருவரையும் சமாதானம் செய்துவிட்டு கடைக்கு சென்றதாக கூறப் படுகிறது.

    சகோதரி தன்னுடன் தகராறில் ஈடுபட்டதால் மனமடைந்த சிவ சாந்தினி வீட்டில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது சகோதரி மற்றும் தாயார் சிவசாந்தி னியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிவசாந்தினி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவசாந்தினியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏரா ளமானோர் அங்கு திரண்டு உள்ளனர். சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அருண் தங்கி இருந்த வீட்டில் அருணும், மாணவியும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.
    • வேறு யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் அருண் (வயது 22). இவர் கடந்த 6 வருடங்களாக மதுராந்தகத்தில் உள்ள மோட்டார் காயில் கட்டும் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவர் மதுராந்தகம் அருகே உள்ள புது மாம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுமி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில் அருணும், 17 வயது மாணவியும் காதலித்து வந்தனர். இந்த தகவல் அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

    இதனால் அருண், மாணவி இருவரும் மனம் உடைந்தனர். அருண் தங்கி இருந்த வீட்டில் அருணும், மாணவியும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். அவர்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து அவர்களின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அவர் மாயமான குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • தனிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    மணவாளக்குறிச்சி:

    மண்டைக்காடு அருகே உள்ள கோவிலான் விளை யை சேர்ந்தவர் ஜாண்சன். டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தனிஷா(வயது 19) பக்கத்து ஊரிலுள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் காலை கல்லூரிக்கு செல்ல வீட்டிலிருந்து தனிஷா புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். ஆனால் தனிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.ஆகவே அவர் மாயமான குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி யை தேடி வருகின்றனர்.

    • மாநில அளவிலான போட்டியில் விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.
    • ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிச்சாமி. கூலி தொழிலாளி.

    இவரது மனைவி செம்மலர்.

    இந்த தம்பதிக்கு அஜிஷா என்ற மகள் உள்ளார்.

    இவர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் இளங்கலை படித்து வருகிறார்.

    அஜிஷா சிறு வயது முதலே வில்வித்தை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாக இருந்தாலும் தன் மகள் ஆசைபட்டால் என்பதற்காக பக்கிரிச்சாமி அஜிதாவை திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் சேர்த்துள்ளார்.

    மாணவியும் சிறப்பாக பயிற்சி பெற்று ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி பதக்கம் வென்றுளார்.

    மேலும், இவர் மாநில அளவிலான வில்வித்தை போட்டிக்கு தேர்வாகி சிறப்பாக விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.

    தொடர்ந்து, இவர் சர்வதேச விளையாட்டு போட்டிக்கு தயாராகி உள்ளார்.

    இந்நிலையில், போட்டியில் விளையாடு வதற்கு வில்-அம்பு கருவி வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்திற்கு மேல் உள்ளது. ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

    எனவே, தமிழக அரசு வில்-அம்பு வாங்குவதற்கு நிதி உதவி அளித்தால் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

    தனது கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துைற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • ‘குண்டான் சட்டி’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.

    கும்பகோணம் அடுத்த கொரநாட்டுகருப்பூரில் உள்ள கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் அகஸ்தி (வயது 12) என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் மாற்றுத்திறனாளி மாண வனின் குறும்புத்தனம், கேலி செய்யும் விதம், அவர்களின் தனி திறமையை பிரதிபலிக்கும் வகையில் 'குண்டான் சட்டி' என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.இந்த படமானது மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் வளர்க்கும் சிறந்த படமா கவும், மாணவர்களின் தனித்துவம் மேன்மை அடையும் வகையிலும் அமைந்துள்ளது.

    இந்த படத்தை பாராட்டி தனியார் பள்ளிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி கழகம் ஆனது சிறந்த இயக்குனருக்கான விருதை மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், மாணவி அகஸ்திக்கு வழங்கினார்.

    விருதை பெற்று க்கொண்ட மாணவி இது எனக்கு சிறந்த ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. இது மேலும், பல்வேறு விருதுகளை பெற ஊக்கமளிப்பதாக தெரிவித்தார்.

    • வலிப்பு நோய்க்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது உண்மை வெளியானது
    • டாக்டர்கள்-பெற்றோர் அதிர்ச்சி

    கோவை,

    கோவை நீலிகோணாம்பாளையம் அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து டாக்டர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசார் இந்த வழக்கை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

    கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் அகில இந்திய தடகள போட்டிகள் கோவாவில் நடைபெற்றது.

    போட்டியில் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஜனனி என்ற மாணவி யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    வெற்றிபெற்ற மாணவியை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழும இணைச்செயலாளர் சங்கர் கணேஷ், துறை தலைவர் கணேசன், அருள் செல்வன், முதலாம் ஆண்டு துறை தலைவர் தீபா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க. மனு
    • 5 ஆண்டுகளில் சுமார் 10 மருத்துவ மாணவ-மாணவிகள் மர்மமாக இறந்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி என்ற அரிகரன் தலைமையில் கட்சியினர், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில், குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவி சுகிர்தா தற்கொலைக்கு காரணமானவர்களை காப்பாற்றவும் குற்றத்தை மூடி மறைக்கவும் கல்லூரி நிர்வாகம் முயல்கிறது. இந்த விஷயத்தில் குலசேகரம் போலீஸ் விசாரணையும் நம்பும் படி இல்லை என மாணவியின் உறவினர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். இங்கு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 மருத்துவ மாணவ-மாணவிகள் மர்மமாக இறந்துள்ளனர்.

    மேலும் கல்லூரி நிர்வாகம் தங்கள் செல்வாக்கால், மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×