search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூகாம்பிகா கல்லூரி மாணவி தற்கொலை: பயிற்சி டாக்டரின் சம்மனை வாங்கிய உறவினர்கள்
    X

    மூகாம்பிகா கல்லூரி மாணவி தற்கொலை: பயிற்சி டாக்டரின் சம்மனை வாங்கிய உறவினர்கள்

    • தூத்துக்குடியை சேர்ந்தவர் சுகிர்தா. இவர் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்
    • கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

    நாகர்கோவில் : தூத்துக்குடியை சேர்ந்தவர் சுகிர்தா. இவர் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் பரமசிவம் மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஹரிஷ், ப்ரீத்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பரமசிவத்தை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பரமசிவத்திற்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    தற்பொழுது பாளையங்கோட்டை ஜெயிலில் பரமசிவம் அடைக்கப்பட்டுள்ளார். பயிற்சி டாக்டர்கள் ஹரிஷ், ப்ரீத்தி இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர்.

    இந்த நிலையில் இருவரும் முன் ஜமீன் பெற்றனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி.போலீசார் ஹரிசுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். சம்மனை ஹரிசின் உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியுள்ளனர். மேலும் ப்ரீத்திக்கு சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×