search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 7 மாதம் கர்ப்பமாக இருந்த பிளஸ்-1 மாணவி
    X

    கோவையில் 7 மாதம் கர்ப்பமாக இருந்த பிளஸ்-1 மாணவி

    • வலிப்பு நோய்க்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது உண்மை வெளியானது
    • டாக்டர்கள்-பெற்றோர் அதிர்ச்சி

    கோவை,

    கோவை நீலிகோணாம்பாளையம் அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து டாக்டர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசார் இந்த வழக்கை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

    கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×