என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுராந்தகம் அருகே சென்னை மாணவி, காதலனுடன் தற்கொலை
- அருண் தங்கி இருந்த வீட்டில் அருணும், மாணவியும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.
- வேறு யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுராந்தகம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் அருண் (வயது 22). இவர் கடந்த 6 வருடங்களாக மதுராந்தகத்தில் உள்ள மோட்டார் காயில் கட்டும் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவர் மதுராந்தகம் அருகே உள்ள புது மாம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.
மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுமி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில் அருணும், 17 வயது மாணவியும் காதலித்து வந்தனர். இந்த தகவல் அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதனால் அருண், மாணவி இருவரும் மனம் உடைந்தனர். அருண் தங்கி இருந்த வீட்டில் அருணும், மாணவியும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். அவர்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து அவர்களின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்