search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அருகே தூக்குபோட்டு மாணவி தற்கொலை
    X

    நாகர்கோவில் அருகே தூக்குபோட்டு மாணவி தற்கொலை

    • சிவசாந்தினியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
    • தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே மேலபெருவிளை சானல்கரை பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகள் சிவ சாந்தினி (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு சிவ சாந்தினி வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த அவரது சகோத ரிக்கும், சிவ சாந்தினிக்கு இடையே தகராறு ஏற்பட் டது. இதையடுத்து அவரது தாயார் இருவரையும் சமாதானம் செய்துவிட்டு கடைக்கு சென்றதாக கூறப் படுகிறது.

    சகோதரி தன்னுடன் தகராறில் ஈடுபட்டதால் மனமடைந்த சிவ சாந்தினி வீட்டில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது சகோதரி மற்றும் தாயார் சிவசாந்தி னியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிவசாந்தினி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவசாந்தினியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏரா ளமானோர் அங்கு திரண்டு உள்ளனர். சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×