search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானம்"

    • இந்திய மதுபான வர்த்தக சந்தை 33 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புடையது
    • அம்ருத் விஸ்கி 183 சதவீதம் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது

    மதுபான வகைகளில் உலகளவில் பெரும்பாலான ஆசிய நாடுகளில் பீர் விரும்பப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் வைன் சுவைப்பதையே அதிகளவில் மதுப்பிரியர்கள் விரும்புகின்றனர்.

    ஆனால், இந்தியர்கள் விஸ்கி பிரியர்கள்.

    மதுபான வர்த்தகத்தில் $33 பில்லியன் மதிப்புடைய சந்தையாக அதிக விஸ்கி சுவைப்பவர்கள் நாடாக இருந்த இந்தியா தற்போது அதிகளவில் விஸ்கி தயாரிக்கும் நாடாக உருவெடுத்துள்ளது.

    இந்திய தலைநகர் புது டெல்லியை சேர்ந்த பிக்காடிலி வடிசாலையில் (Piccadily distillery) தயாராகும் சிங்கிள் மால்ட் வகை "இண்ட்ரி" (Indri) விஸ்கி, உலகிலேயே சிறந்த விஸ்கி என முதலிடத்தை பிடித்துள்ளது.

    உலகளவில் முன்னணியில் உள்ள பிரான்சின் பெர்னாட் ரிகார்ட் (Pernod Ricard) நிறுவனத்தின் க்ளென்லிவெட் (Glenlivet), இங்கிலாந்தின் டியாஜியோ (Diageo) நிறுவனத்தின் டாலிஸ்கர் (Talisker) ஆகிய மதுபான வகைகள் இந்தியாவின் இண்ட்ரி, அம்ருத் (Amrut) மற்றும் ராம்புர் (Rampur) போன்ற உள்ளூர் விஸ்கி மதுவகைகளுடன் போட்டி போட முடியாமல் திணறுகின்றன.

    தங்கள் உபயோகத்திற்கும், கேளிக்கை விருந்து பரிமாற்றங்கள் மற்றும் பிறருக்கு பரிசளிக்கவும் பெரும்பாலான இந்தியர்கள், இந்த உள்ளூர் தயாரிப்புகளையே விரும்ப தொடங்கி உள்ளனர்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உலகின் தலைசிறந்த விஸ்கிகளுக்கான பரிசு (Whiskies of the World) போட்டியில், ஸ்காட்லேண்டு மற்றும் அமெரிக்காவின் பல பிராண்டுகளை பின்னுக்கு தள்ளி "பெஸ்ட் இன் ஷோ" (Best in Show) பரிசை இண்ட்ரி (தீபாவளி எடிஷன்) வென்று முதலிடம் பிடித்தது.

    விற்பனையில் முன்னணியில் இருந்த க்ளென்லிவெட், இந்திய பிராண்டான அம்ருத் விஸ்கியின் 183 சதவீத வளர்ச்சியால் சரிவை சந்தித்திருக்கிறது.

    வரும் 2025 காலகட்டத்தில் பிக்காடிலி நிறுவனம் தனது உற்பத்தியை 66 சதவீதம் அதிகரித்து நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் சித்தார்த்த ஷர்மா தெரிவித்தார்.

    விற்பனையில் முன்னணியில் உள்ள இந்த மது தயாரிப்பு நிறுவனங்கள் விலையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஒரு பாட்டில் இண்ட்ரி $37, அம்ருத் $42 மற்றும் ராம்புர் $66 என அயல்நாட்டு மதுபானங்களுக்கு ஈடாக விற்பனை ஆகிறது.

    • மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
    • மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

    ஜெனிவா:

    மதுபானங்கள் மற்றும் சர்க்கரை இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறியதாவது:-

    ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவாக உள்ளது. வரிகளை உயர்த்துவது ஆரோக்கியமான மக்கள்தொகைக்கு வழிவகுக்கும். மதுபானங்கள் மற்றும் சர்க்கரை-இனிப்பு பானங்களுக்கு அதிக கலால் வரி விதிக்கப்பட வேண்டும். மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.

    80 லட்சத்துக்கு அதிகமானோர் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் இறக்கின்றனர். மதுபானங்கள், சர்க்கரை-இனிப்பு பானங்கள் மீதான வரியை அமல்படுத்துவது இந்த இறப்புகளைக் குறைக்கும். இது இந்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும். ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது. மதுபான விஷயத்தில், வன்முறை மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்கவும் வரி உதவுகிறது. மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

    • உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • ஆணையர் (கலால்) கிருஷ்ண மோகன் உப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை மதியம் நடைபெற இருக்கிறது.

    இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பிரபலங்கள் பலரும் இறுதிப்போட்டியை நேரில் பார்வையிட இருக்கின்றனர்.

    கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கிய நாளான நாளைய தினத்தில், சத் பூஜை முன்னிட்டு டெல்லியில் நாளை ஒரு நாள் மட்டும் மதுபானக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாத் என்பது உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தவர்களால் சூரியனை வழிபடும் ஒரு முக்கிய பண்டிகையாகும்.

    இதுகுறித்து, ஆணையர் (கலால்) கிருஷ்ண மோகன் உப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, பிரதிஹர் சஷ்டி அல்லது சூர்ய சஷ்டி (சத் பூஜை) ஞாயிற்றுக்கிழமை உலர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காரை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டி,பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.
    • பள்ளங்குப்பம் பகுதியை சேர்ந்த சிவசங்கர்(38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    செங்கல்பட்டு:

    பாண்டிச்சேரியில் இருந்து செங்கல்பட்டு பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புதுப்பட்டு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காரை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டி,பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து காரில் மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட செய்யூர் அருகே உள்ள பள்ளங்குப்பம் பகுதியை சேர்ந்த சிவசங்கர்(38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 3 ஆயிரம் மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    • 500 மதுக்கடைகளை மூடியதை தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இப்போது என்ன செய்யலாம் என்று அரசு யோசித்து வருகிறது.
    • பீர்பாட்டில் விலையையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது.

    இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது.

    பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி வருகிறது.

    பொதுமக்கள் மனு கொடுத்து எதிர்ப்பு தெரிவித்தால்தான் அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிக்கிறார்கள்.

    இந்த வகையில்தான் சமீபத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

    2023 மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5329 ஆக இருந்தது. அதன் பிறகு அரசு எடுத்த கொள்கை முடிவு படி 500 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்போது 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.

    500 மதுக்கடைகளை மூடியதை தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இப்போது என்ன செய்யலாம் என்று அரசு யோசித்து வருகிறது.

    இதனால் சமீபத்தில் நடந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் 500 மதுக்கடை மூடப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி ஈடு செய்வது என விவாதிக்கப்பட்டுள்ளது.

    அப்போது மதுபாட்டில்கள் விலையை கணிசமாக உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தினால் மக்களுக்கு பெரிய சுமையாக தெரியாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிராண்டுக்கு ஏற்ப 80 ரூபாய் வரை விலையை உயர்த்தினால் அரசுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், டாஸ்மாக் மதுக்கடைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் போது பல்வேறு புகார்கள் எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.

    அவற்றை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அது மட்டுமின்றி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட மது வகைகளின் விலையை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்த ஆலோசிக்கப்பட்டது. ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.20 வரையும் முழு பாட்டில் ரூ.30 முதல் ரூ.50-வரை உயர்த்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பிராண்டுகள் அடிப்படையில் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

    இதே போல் பீர் பாட்டில் விலையையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். அப்போது என்னென்ன சரக்கு எவ்வளவு விலை என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
    • அதிக விலைக்கு மதுவிற்றதாக பணியில் இருந்து யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை.

    சென்னை:

    டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக விற்கக் கூடாது. அதில் உள்ள விலைக்கு தான் அனைத்து மதுபாட்டில்கள், பீர் வகைகள் விற்க வேண்டும், கூடுதலாக ரூ.10 வைத்து விற்றால் விற்பனையாளர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று மேலாண்மை இயக்குனர் விசாகன் உத்தரவிட்டு இருந்தார்.

    சமீபத்தில் காணொலி காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் கூட அதை உறுதிப்படுத்தி பேசியுள்ளார். கூடுதல் விலைக்கு விற்கப்படும் விற்பனையாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார், மேலும் விற்பனையை தடுக்க தவறிய சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் கடை வேலை நேரத்தில் பணியில் இல்லாத மேற்பார்வையாளர்கள் விற்பனை குறைவான கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர். மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள 73 கடைகளில் 25 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதில் 7 மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகபட்ச விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. டாஸ்மாக் பொது மேலாளர்கள் நடத்திய சோதனையில் இது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் மீது நிரந்தர பணி நீக்க நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

    இதுவரையில் அதிக விலைக்கு மதுவிற்றதாக பணியில் இருந்து யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. இடமாற்றம், சஸ்பெண்டு போன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆனால் இந்த முறை டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கும் என்பதால் கலக்கத்தில் உள்ளார்.

    மத்திய சென்னையை தொடர்ந்து வடசென்னையில் உள்ள 81 கடைகள், தென் சென்னையில் உள்ள 89 கடை பணியாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மதுபிரியர்களிடம் இருந்து கூடுதல் தொகை வசூலித்தால் கண்டிப்பான நடவடிக்கை என்பது அமைச்சர் முத்துசாமி கட்டுப்பாட்டில் இத்துறை வந்த பிறகு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் அவற்றின் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுப்பது என்பது இதுவே முதல் முறையாகும். அதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையில் எச்சரிக்கையோடு செயல்படுகின்றனர்.

    • மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த தாசன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்தவர் தாசன் (வயது 62). கூலி தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த தாசன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

    அப்போது குடி போதையில் மது பானம் என நினைத்து ரப்பர் பால் உறைய வைக்கும் ஆசிட்டை குடித்து விட்டார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மயங்கி விழுந்தார். அவரை அவர் மகன் சுஜின் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்பு தாசன் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரக்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது56). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தோப்ரன்குடி என்ற இடத்தில் கட்டிட வேலைக்காக தங்கியிருந்தார். அப்போது அவர், தண்ணீர் என நினைத்து பேட்டரி வாட்டரில் மதுவை கலந்து குடித்திருக்கிறார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகனன், தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்பு மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது இறப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.      

    • சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் குட்டை பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அங்கு சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துராமன் (வயது 34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதி யில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வராசு மனைவி பன்னீர்செல்வி (வயது 55) என்பவர், தனது வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட போலீசார் பன்னீர்செல்வியை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது.
    • அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது. இங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட தாபா கடைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஓட்டல் உரிமையாளர் கந்தசாமி( 50) என்பவரை கைது செய்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபான விற்பனையில் உலகின் 5-வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
    • ரெடி-டு ட்ரிங்க் பானங்கள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உருவெடுத்துள்ளன.

    சென்னை:

    இந்தியாவில் சமீபகாலமாக மதுப்பிரியர்கள் அதிகரித்து வருகின்றனர். எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்ற நிலை வந்துவிட்டதால் மது விற்பனையும் அதிகமாகி வருகிறது. மதுபான விற்பனையில் உலகின் 5-வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.

    மதுபான வகைகளை ஒயின், ஜின் விற்பனை அதிகரித்த நிலையில் தற்போது விற்பனையில் விஸ்கி முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவின் மது விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு விஸ்கி விற்பனை ஆவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் 85 சதவீதம் 10 உள்நாட்டு பிராண்டுகள் பிடித்துள்ளன. விஸ்கியின் விற்பனை சதவீத 66 ஆக அதிகரித்து உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி 3.3 சதவீதம் விற்பனை ஆவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விஸ்கி சந்தையில் 96 சதவீத இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புகளுக்கு பின்னர் மது வணிகம் மீண்டும் முன்னேற்ற பாதையில் உள்ளது. வோட்கா ரகம் விற்பனையில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொருத்தவரை ரூ.53 பில்லியன் மதுபானங்கள் விற்பனை ஆவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெடி-டு ட்ரிங்க் பானங்கள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உருவெடுத்துள்ளன. கடந்த ஆண்டு 40 சதவீதம் இது விற்பனை ஆகி உள்ளது.

    மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் கூட இதன் எண்ணிக்கை விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் ஐந்தில் ஒரு பங்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒயின்களே விற்பனை ஆகின்றன. இதில் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட ஒயின்களே அதிகம். தடையற்ற வர்த்தகம் காரணமாக இவை அதிகமாக இறக்குமதி ஆவதால் விற்பனையும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கிகளும் விற்ப னையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்க, ஜப்பானிய, கன்னட விஸ்கிகள் இருந்தா லும் இந்திய தயாரிப்பை மதுப்பிரியர்கள் விரும்புவதாக இந்திய மதுபான விற்பனை சங்கத்தின் தலைமை அதிகாரி நிதா கபூர் தெரிவித்தார். 

    ×