search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்க்கரை"

    • மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
    • மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

    ஜெனிவா:

    மதுபானங்கள் மற்றும் சர்க்கரை இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறியதாவது:-

    ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவாக உள்ளது. வரிகளை உயர்த்துவது ஆரோக்கியமான மக்கள்தொகைக்கு வழிவகுக்கும். மதுபானங்கள் மற்றும் சர்க்கரை-இனிப்பு பானங்களுக்கு அதிக கலால் வரி விதிக்கப்பட வேண்டும். மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.

    80 லட்சத்துக்கு அதிகமானோர் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் இறக்கின்றனர். மதுபானங்கள், சர்க்கரை-இனிப்பு பானங்கள் மீதான வரியை அமல்படுத்துவது இந்த இறப்புகளைக் குறைக்கும். இது இந்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும். ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது. மதுபான விஷயத்தில், வன்முறை மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்கவும் வரி உதவுகிறது. மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

    • ஏதாவது ஒரு வடிவத்தில் தினமும் உடலில் சர்க்கரை சேருகிறது.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் சிறப்பானது.

    டீ, காபி, ஸ்மூத்தி, ஜூஸ் என ஏதாவதொரு பானம் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். இந்த பானங்களில் ஏதாவதொரு வகையில் சர்க்கரையின் பங்களிப்பு இருக்கிறது. வெள்ளை சர்க்கரை, வெல்லம், தேன், பிரவுன் சுகர் எனப்படும் பழுப்பு நிற சர்க்கரை இவற்றில் ஏதாவது ஒரு வடிவத்தில் தினமும் உடலில் சர்க்கரை சேருகிறது. இதில் எந்த சர்க்கரை நல்லது என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது. இது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

    வெள்ளை சர்க்கரை, புரவுன் சுகர், வெல்லம் இவை எல்லாமே கரும்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. சுத்திகரிப்பு முறைதான் இதன் தன்மையை நிர்ணயிக்கின்றன. வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது பிரவுன் சுகர் அதிகம் சுத்திகரிக்கப்படுவதில்லை. இவை இரண்டுடன் ஒப்பிடும்போது வெல்லம் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை.

    ஆனால் வெள்ளை சர்க்கரை, பிரவுன் சுகர், வெல்லம் இவற்றில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எதை எடுத்துக்கொண்டாலும் அனைத்துமே ஒரே விதமான கலோரிகளைத்தான் கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் சுமார் 20 கலோரிகள் வரை இருக்கும். ஒரு டீஸ்பூன் தேனிலும் சுமார் 20 கலோரிகள் இருக்கின்றன.

    இருப்பினும் வெள்ளை மற்றும் பழுப்பு நிற சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகுந்திருக்கும். வெல்லத்தின் கிளைசெமிக் குறியீடும் குறைவுதான். அதனால் வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சட்டென்று அதிகரிக்க செய்யாது.

    அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் சிறப்பானது. வெள்ளை சர்க்கரைக்கு மாற்று தேடுபவர்களுக்கு வெல்லம் சிறந்த தேர்வாக அமையும்.

    வெள்ளை சர்க்கரை, பிரவுன் சுகரை பொறுத்தவரை சுவையின் தன்மையில் மாற்றத்தை உணரலாம். சர்க்கரையை உருக வைத்து இனிப்பு பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கேரமல் சுவையை விரும்புபவர்களுக்கு பிரவுன் சுகர் சிறந்த தேர்வாக அமையும். வெள்ளை சர்க்கரையை அனைத்து வகையான இனிப்புகளிலும் சேர்த்துக்கொள்ளலாம். எந்த சர்க்கரையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல.

    • உணவு உண்ட நிறைவைக் கொடுப்பது தயிர்தான்.
    • செரிமான மண்டலம் குளிர்ச்சி அடையும்.

    நாம் தினசரி சாப்பிடும் உணவில் தவறாமல் இடம் பிடிக்கவேண்டியது தயிர். மதிய உணவு மெனுவில் குழம்பு, கூட்டு, பொரியல் என பலவகைகள் இருந்தாலும், உணவு உண்ட நிறைவைக் கொடுப்பது தயிர்தான். பாலில் இருந்து ஏராளமான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால். ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் தயிருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும், வைட்டமின் ஏ. ஈ. சி. பி2, பி12 மற்றும் கரேடினாய்டு போன்ற அத்தியாவசிய சத்துக்களும் தயிரில் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை விரும்புவார்கள். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படுமா? என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

    ஆயுர்வேத மருத்துவத்தின்படி தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடும்போது. மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான குளுக்கோஸ் போதுமாள அளவு கிடைக்கும். தயிர் மற்றும் சர்க்கரை கலவை உடலின் ஆற்றலை அதிகரித்து தான் முழுவதும் உடலை நிரேற்றத்துடன் வைத்திருக்க உதவும், சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்யும்.

    தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் செரிமான மண்டலம் குளிர்ச்சி அடையும். வயிற்றில் உருவாகும் அதிக அளவிலான அமிலச் சுரப்பும், அதனால் உண்டாகும் நெஞ்செரிச்சலும் கட்டுப்படும். மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மசாலா மற்றும் காரம் காரணமாக ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறையும். மலச்சிக்கல். வயிற்றுப்பொருமல் போன்ற பிரச்சினைகளும் தீரும்.

    காலையில் எழுந்தவுடன். உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கப் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொற்றினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும். மேலும் இது சிறு நீர் குழாயை சுத்தப்படுத்தி குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

    உடல் பருமன் பிரச்சினையால் சிரமப்படுபவர்கள், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உடலில் அதிகப்படியான கலோரிகள் சேர்வதற்கு வழிவகுத்து உடல் எடையை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால். சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்ப்பது நல்லது. சளி. ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளால் அவதிப் படுபவர்களும், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    • வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.
    • எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    வெங்கடா சலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும். பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் பெருமாளே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.

    • கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன.
    • புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும்.

    பாலுக்கு விலை என்பது பாலில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை உயர்த்த சரியான தீவன மேலாண்மையை கையாள வேண்டும்.

    பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும். இவற்றை தவிர கொழுப்பின் அளவை கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும். பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை தீவனம் உள்பட சில வழிகளில் அதிகரிக்கலாம். மாடுகளில் 1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுக்கலாம்.

    மேலும், கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவு அதிகரித்தால், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். மாடுகளின் பாலில் இதர சத்துப் பொருட்கள் அதிக அளவில் இருக்க 12 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பால் கறக்க வேண்டும். மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.

    பாலில் கொழுப்பின் அளவை அந்த மாடுகளின் மரபு கூறுகள் தீர்மானிக்கின்றன. சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருப்பது அதன் மரபு பண்பாக இருந்தால் அதை நாம் மாற்ற முடியாது. எரிசக்திக்கான தீவனம் மற்றும் நார்ச்சத்து தீவனங்களை அளிப்பதால் கொழுப்புச் சத்தை அதிகரிக்கலாம்.

    பொதுவாக, கன்று ஈன்றவுடன் பசுவின் உடலில் உள்ள கொழுப்பு சத்து பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு விடுவதால் மாடுகளின் உடலில் கொழுப்பு சத்து குறைந்து மாடுகள் மிகவும் மெலிந்து இருக்கும்.

    பாலில் கொழுப்பும் குறைவாக இருக்கும். இது போன்ற பாதிப்பு வராமல் தடுக்க, மாடுகள் கன்று ஈனுவதற்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன்பிருந்து மாடுகளுக்கு பருத்தி கொட்டை, சோயா, சூரியகாந்தி போன்ற எரிசக்தி மிகுந்த தீவனங்களை அளிக்க வேண்டும்.

    மாடுகள் கறவையில் உள்ள போது கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற எரிசக்தி மிகுந்த தானியங்களை தரவேண்டும். கலப்பு தீவனத்தில் 33 சதவீதம் பிண்ணாக்கு, 30 சதவீதம் தவிடு கலந்து ஒவ்வொரு 3 லிட்டர் கறவைக்கு 1 கிலோ கலப்பு தீவனம் என்ற அளவில் தர வேண்டும். இதன் மூலம் கறவை மாடுகளின் பாலில் கொழுப்பின் அளவை சீராக தக்க வைக்கலாம்.

    மாடுகளின் தீவனத்தில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் பாலில் கொழுப்பின் அளவும் குறையும். எனவே ஒரு மாட்டிற்கு அன்றாடம் 15 கிலோ பசுந்தீவனம், 4 முதல் 5 கிலோ காய்ந்த தீவனம் அளிக்க வேண்டும்.

    இது தவிர கலப்பு தீவனத்தில் மக்காச்சோளம், கம்பு போன்ற தீவனங்கள் பெரிய அளவு துகள்களாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

    ஒரு மாட்டிற்கு 30 சதவீதம் என்ற அளவில் தாது உப்பு கலவையை தீவனத்துடன் கலந்து அளித்தால் சத்து குறைபாடுகள் நீக்கப்படும். இத்துடன், ஒரு மாட்டிற்கு 15 முதல் 20 கிராம் அளவில் சோடா உப்பை தீவனத்தில் கலந்து கொடுக்கும் போது வயிற்றில் அமிலத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

    இதனால் பாலில் கொழுப்பு அதிகமாகும். இது போன்ற பராமரிப்புகளை கால்நடை விவசாயிகள் கடைப்பிடித்தால் பாலில் கொழுப்பும், இதர சத்துக்களும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

    • மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முதன்மைச் செயலாளரும், சர்க்கரை துறை ஆணையருமான விஜயராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
    • சர்க்கரை ஆலையின் மூலம் செயல்படுத்தப்படும் எரிசாராய ஆலை, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் இணை மின் உற்பத்தி திட்டம் மற்றும் சர்க்கரை ஆலையில் கரும்பு அறுவை செய்யும் இடம், சர்க்கரை உற்பத்தியாகும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முதன்மைச் செயலாளரும், சர்க்கரை துறை ஆணையருமான விஜயராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

    மோகனூர் பகுதிகளில் கரும்பு பயிர் செய்துள்ள வயல்கள், கரணை வெட்டப்படும் இடம், சர்க்கரை ஆலையின் மூலம் செயல்படுத்தப்படும் எரிசாராய ஆலை, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் இணை மின் உற்பத்தி திட்டம் மற்றும் சர்க்கரை ஆலையில் கரும்பு அறுவை செய்யும் இடம், சர்க்கரை உற்பத்தியாகும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது எரிசார ஆலையின் செயல்பாடு குறித்தும், விரைவில் தொடங்கப்பட உள்ள இணை மின் உற்பத்தி திட்டத்தின் தற்போதைய செயல்பாட்டின் நிலை குறித்தும் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் மல்லிகா, சர்க்கரைத் துறை ஆணையரிடம் எடுத்துக் கூறினார்.

    அதனை தொடர்ந்து சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விவசாயிகளின் கேள்விகளுக்கு ஆணையர் விஜயராஜ்குமார் பதிலளித்தார். ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • ஏலத்தில் விவசாயிகள் 3,117 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரை கொண்டு வந்திருந்தனர்.
    • இதேபோல உருண்டை வெல்லம் 3,600 கிலோ எடையிலான 120 மூட்டைகள் விற்பனையாகின.

    ஈரோடு:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச்சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக ஏலத்தில் பங்கேற்க சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,117 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.

    இதில், 60 கிலோ எடையிலான மூட்டை, முதல் தரம் ஒரே விலையாக ரூ. 2,400-க்கு விற்பனையானது. 2-ம் தரம், குறைந்தபட்சமாக மூட்டை ரூ.2,360-க்கும், அதிகபட்சமாக ரூ.2,480-க்கும் விற்பனையானது.

    இதில் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 280 கிலோ எடையிலான 1,888 நாட்டுச்சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின. இதன் விற்பனை மதிப்பு ரூ.45 லட்சத்து 4 ஆயிரத்து 480 ஆகும்.

    இதேபோல உருண்டை வெல்லம் முதல் தரம் 30 கிலோ சிப்பம் ஒரே விலையாக ரூ.1,560 எனும் விலையில், 3,600 கிலோ எடையிலான 120 மூட்டைகள் விற்பனையாகின. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 200 ஆகும்.

    நாட்டுச்சர்க்கரை, வெல்லம் 2-ம் சேர்த்து மொத்தம் ரூ.46 லட்சத்து 91 ஆயிரத்து 680-க்கு கொள் முதல் செய்யப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • வேதாரண்யம் பகுதியில் விவசாயிகள் பனங்கிழங்கு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • சர்க்கரை நோயாளி–களுக்கு மிகவும் உகந்தது, நார் புரதசத்து நிறைந்தது, மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் விவசாயிகள் பனங்கிழங்கு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் தமிழர்களின் பாரம்பரிய உணவாகவும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடியது பனங்கிழங்கு.

    சர்க்கரை நோயாளி–களுக்கு மிகவும் உகந்தது. நார், புரதசத்து நிறைந்தது.

    மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

    மருத்துவ குணம் வாய்ந்த இந்த பனங்கிழங்கு சாகுபடி கடலோர கிராமங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஐப்பசி மாதத்தில் பனங் கொட்டைகளை நன்றாக காய வைத்து மணல் தீட்டுகளை புதைத்து வைத்து விடுகின்றனர்.

    மூன்று மாதத்தில் பனங்கிழங்கு மணலுக்கு அடியில் உருவாகி வளர்ந்து விடும்.

    மார்கழி மாதத்தில் அந்த கிழங்கு–களை விற்பனைக்கு தயாராகிவிடும்.

    பனங்கிழங்கு விவசாயி–களுக்கு செலவு இல்லாமல் செய்யும் சாகுபடியால் நல்ல லாபம் கிடைக்கிறது.

    பனங்கோட்டையில் இருந்து மணலில் தானாக வளர்ந்து விவசாயிகளுக்கு அதிக லாபத்தை தரும் இந்த சாகுபடியில் உற்பத்தி செலவு கிடையாது.

    தற்போது வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரை, கோடியக்காடு, ஆயக்காரன்புலம், நெய் விளக்கு, குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பனங்கிழங்கு சாகுபடி நடைபெற்று உள்ளது.

    தற்போது அதனை உள்ளூர் வியாபாரிகளும் வெளியூர் வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    ஒரு பனங்கிழங்கு ரூ.1 முதல் 2 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது இந்த பனங்கிழங்கை கொண்டு மதிப்புகூட்டல் பொருளாக செய்து நல்ல விலைக்கு விற்று வருகின்றனர்.

    • சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு, வாசவி மஹால் இறக்கம், பால் மார்க்கெட், ஆனந்தா காய் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5 டன் வரை சர்க்கரை வள்ளிக்கிழங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

    அன்னதானப்பட்டி:

    சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு, வாசவி மஹால் இறக்கம், பால் மார்க்கெட், ஆனந்தா காய் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.

     சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதால் அனேக இடங்களில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5 டன் வரை சர்க்கரை வள்ளிக்கிழங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

    இங்கு விற்பனைக்கு வரும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது : -

    ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிகளவில் விற்பனைக்கு வரும். தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து உள்ளதால், விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால்

    சர்க்கரை வள்ளிக் கிழங்கு கள் வரத்து அதிகரித்து சீசன் களைகட்டியுள்ளது. ஒரு கிலோ சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூ.25, ரூ.22, ரூ.20 என அளவைப் பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.சர்க்கரை வள்ளிக்கி ழங்குகள் வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்தவை ஆகும். மேலும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த கிழங்குகள் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். எனவே இவற்றை பெண்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    ×