search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "potato"

    • பெண்களின் கண்களை பற்றி பேசாத அறிஞர்களே இருக்கமாட்டார்கள்.
    • கண்களுக்கு தேவையான ஓய்வை நாம் அளிக்கும் போது கண்கள் பொலிவுடன் இருக்கும்.

    பொதுவாக ஒரு பெண்ணை பற்றி பேசும்போது அவளின் கண்களை பற்றி பேசாத அறிஞர்களே இருக்கமாட்டார்கள். ஒருவருடைய பார்வை என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றைக்கு பலபேருடைய கண்களை பார்த்தால் கண்களில் சோர்வு தான் இருக்கிறது. எப்போதும் தூங்காததுபோல் கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கண்கள் மிகவும் ஆரோக்கியம் இழந்து காணப்படுகிறது.

    இதற்கு பல காரணங்களை சொல்லலாம். கண்ணுக்கு அழகை தருவது எப்போது என்றால் அதற்கு தேவையான ஓய்வை நாம் அளிக்கும் போது கண்கள் பொலிவுடன் இருக்கும். நன்றாக தூங்கவில்லை என்றாலும் கண்ணுக்கு அது ஆரோக்கிய குறைவுதான். அதனால் முடிந்தவரை நன்றாக தூங்க வேண்டும்.

    ஆனால் நாங்கள் நன்றாக தூங்குகிறோம், ஆனால் எப்போது கண்களில் ஒருவித எரிச்சல் இருக்கிறது. கண்களில் குளுமை இல்லை. கண் வறட்சியாக இருக்கிறது என்றால் முதலில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணித்து கண்களையும் குளுமைப்படுத்தும்.

    இரண்டாவதாக முக்கியமான பொருள் உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய். இப்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தனித்தனியே துருவி எடுத்து பிழிந்தால் நன்றாக சாறு நமக்கு கிடைக்கும். இப்போது வெள்ளரிக்கா சாறு ஒரு ஸ்பூன் என்றால், உருளைக்கிழங்கு சாறும் ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். அதன்பிறகு அதனுடன் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் இதையும் ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். இந்த மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நல்ல பஞ்சில் இந்த சாற்றில் ஊறவிட்டு அந்த நனைந்த பஞ்சினை எடுத்து இரவு படுக்க செல்வதற்கு முன்னர் கண்களில் 20 நிமிடம் ஒற்றிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு செய்யும் போது நமது கண்கள் மிகவும் குளிர்ச்சியடைந்து காணப்படும். எவ்வளவு உடல் சூடு இருந்தாலும் இதை வைத்த எடுத்த உடனேயே உங்களது கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். கண்கள் குளிர்ச்சியாக இருந்தால் காட்சியும் குளிர்ச்சியாக இருக்கும். நாமும் எல்லோரையும் கனிவுடன் பார்க்கலாம். இதனை குழந்தைகளுக்கும் தாராளமாக பயன்படுத்தலாம். தொடர்ந்து நாம் இதனை 2 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்களையும் இது நமக்கு போக்கி கொடுக்கும்.

    • உருளைக்கிழங்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது.
    • உருளைக்கிழங்கு சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்துக்கொள்வது உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அது உண்மைதான் என்றாலும் உருளைக்கிழங்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. உருளைக்கிழங்கை சாறு எடுத்தும் பருகலாம். அது காரத்தன்மை வாய்ந்தது என்றாலும் உடலில் அமிலத்தன்மையை குறைக்க உதவும். கருவளையம், கண் வீக்கம் போன்ற பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கு சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    * உருளைக்கிழங்கு சாறு வயிற்றில் அமிலத்தன்மையை சீராக்கும் திறன் கொண்டது. அசிடிட்டி பிரச்சினை ஏற்படும்போது 50 மி.லி முதல் 100 மி.லி வரை உருளைக்கிழங்கு சாறு பருகலாம்.

    * அல்சர் பாதிப்புக்கு நிவாரணம் தரும் தன்மை உருளைக்கிழங்கு சாறுக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    * கருவளையத்தால் பாதிக்கப் படுபவர்கள் உருளைக்கிழங்கு சாறு பருகி வரலாம். கண்களுக்கு அடிப்பகுதியிலும் உருளைக்கிழங்கு சாறை தடவி வரலாம். அல்லது மெல்லிய உருளைக்கிழங்கு துண்டுகளை கண்களின் மேல் அரை மணி நேரம் வைத்திருக்கலாம்.

    * கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துவதற்கு உருளைக்கிழங்கு சாறு உதவும்.

    * முகம் மற்றும் கண்கள் வீங்கி இருந்தால் உருளைக்கிழங்கு சாறை உபயோகிக்கலாம். அதில் இருக்கும் நீர்ச்சத்து வீக்கத்தை குறைக்கும். சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் கொடுக்கும்.

    * உருளைக்கிழங்கில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. அது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும்.

    * ஒரு டம்ளர் உருளைக்கிழங்கு சாறு பருகுவதன் மூலம் ஒருநாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்தை ஏறக்குறைய பெற்றுவிடலாம். சாப்பிடும் உணவில் வைட்டமின் சி இருப்பது உடலில் இரும்புச் சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

    * துத்தநாகம், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை உருளைக்கிழங்கில் உள்ள மற்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள். இந்த வைட்டமின்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

    * தோல் அழற்சி உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு உதவியாக இருக்கும். பொடுகு பிரச்சினை கொண்டவர்கள் உருளைக்கிழங்கு சாறை உச்சந்தலையில் தடவி வருவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
    • கடந்த வாரம் வரை ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.30 வரை விற்பனையாகி வந்தது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, பீன்ஸ் போன்ற மலை காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    அங்கு மொத்த வியாபாரிகள் காய்கறிகளை ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளையும் உருளைக்கிழங்கு ஊட்டி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மண்டிகளில் ஏல மூலம் விற்பனை செய்யப்பட்டும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

    கடந்த வாரம் வரை ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.30 வரை விற்பனையாகி வந்தது.

    தற்போது கிலோவுக்கு ரூ.15 அதிகரித்து, ரூ.45 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயி வினோதன் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ் கிலோ ரூ.5-க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக முட்டைகோஸ்களை அறுவடை செய்வதற்கு கிலோவுக்கு ரூ.5 வரை செலவாகும். கடந்த வாரம் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    பொங்கல் அன்று அதிகபட்சமாக ரூ.2,200-க்கு மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்பட்டது. நீலகிரியில் விளையும் உருளைக்கிழங்கை ஒரு மாதத்திற்கு மேல் வைத்து பயன்படுத்தலாம் என்பதால், நீலகிரி உருளைக்கிழங்கு அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டதால் விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு சில வாரங்கள் நீடிக்கும் என தெரிகிறது. இதன் மூலம் மற்ற காய்கறிகளால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு, வாசவி மஹால் இறக்கம், பால் மார்க்கெட், ஆனந்தா காய் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5 டன் வரை சர்க்கரை வள்ளிக்கிழங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

    அன்னதானப்பட்டி:

    சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு, வாசவி மஹால் இறக்கம், பால் மார்க்கெட், ஆனந்தா காய் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.

     சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதால் அனேக இடங்களில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5 டன் வரை சர்க்கரை வள்ளிக்கிழங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

    இங்கு விற்பனைக்கு வரும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது : -

    ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிகளவில் விற்பனைக்கு வரும். தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து உள்ளதால், விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால்

    சர்க்கரை வள்ளிக் கிழங்கு கள் வரத்து அதிகரித்து சீசன் களைகட்டியுள்ளது. ஒரு கிலோ சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூ.25, ரூ.22, ரூ.20 என அளவைப் பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.சர்க்கரை வள்ளிக்கி ழங்குகள் வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்தவை ஆகும். மேலும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த கிழங்குகள் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். எனவே இவற்றை பெண்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. #Potato
    புதுடெல்லி:

    இந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. மலைப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த உருளைக்கிழங்குகள் குறித்து மத்திய ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஆய்வு செய்தது.

    நுண்ணிய ஒட்டுன்னி மூலம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 4 மாநில உருளைக்கிழங்கில் பூச்சி தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

    இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    இந்த 4 மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விதை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து உதவியை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    4 மாநிலங்களில் உருளைக்கிழங்குக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் இருக்காது. பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Potato
    ×