search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worth Rs.50 lakhs for"

    • ஏலத்தில் விவசாயிகள் 3,117 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரை கொண்டு வந்திருந்தனர்.
    • இதேபோல உருண்டை வெல்லம் 3,600 கிலோ எடையிலான 120 மூட்டைகள் விற்பனையாகின.

    ஈரோடு:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச்சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக ஏலத்தில் பங்கேற்க சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,117 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.

    இதில், 60 கிலோ எடையிலான மூட்டை, முதல் தரம் ஒரே விலையாக ரூ. 2,400-க்கு விற்பனையானது. 2-ம் தரம், குறைந்தபட்சமாக மூட்டை ரூ.2,360-க்கும், அதிகபட்சமாக ரூ.2,480-க்கும் விற்பனையானது.

    இதில் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 280 கிலோ எடையிலான 1,888 நாட்டுச்சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின. இதன் விற்பனை மதிப்பு ரூ.45 லட்சத்து 4 ஆயிரத்து 480 ஆகும்.

    இதேபோல உருண்டை வெல்லம் முதல் தரம் 30 கிலோ சிப்பம் ஒரே விலையாக ரூ.1,560 எனும் விலையில், 3,600 கிலோ எடையிலான 120 மூட்டைகள் விற்பனையாகின. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 200 ஆகும்.

    நாட்டுச்சர்க்கரை, வெல்லம் 2-ம் சேர்த்து மொத்தம் ரூ.46 லட்சத்து 91 ஆயிரத்து 680-க்கு கொள் முதல் செய்யப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ×