search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடைகள்"

    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது.
    • இன்று முதல் 3 நாட்கள் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மீண்டும் வருகிற 20-ந்தேதி திறக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு (19-ந்தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது.

    இன்று கடைசி நாள் பிரசாரம் நடைபெறுவதையொட்டியும், நாளை மறுநாள் தேர்தல் அன்று மதுபோதையால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் வகையிலும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

    இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அனைத்து மதுபான கடைகளிலும் குடிமகன்கள் மது குடிப்பதற்காக குவிந்தனர். இன்று முதல் 3 நாட்களும் மதுகுடிக்க முடியாது என்பதால் பலர் கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி வயிறு முட்ட குடித்தனர்.

    மேலும் பலர் நன்றாக மது குடித்து விட்டு தங்களது தேவைக்காக மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒரு பீர், 3 குவார்ட்டர் பாட்டில்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதை மீறி கூடுதல் மது பாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது.

    ஆனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று குவிந்த மது பிரியர்கள் மூன்று, மூன்று பாட்டில்களாக வாங்கி தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி குவித்து மொத்தமாக மறைத்து அள்ளிச் சென்றுள்ளனர்.

    இது போன்று வாங்கிச் சென்ற மதுபாட்டில்களை திருட்டுத் தனமாக கூடுதல் விலைக்கும் அவர்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

    இதைத் தொடர்ந்து அது போன்ற மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட 2½ மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும் என்றும் 2½ மடங்கு அளவுக்கு நேற்று கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதால் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, சென்னையில் சில கடைகளில் 4 மடங்கு வரை கூடுதலாக மது விற்பனையாகி இருப்பதாக தெரிவித்தார்.

    இன்று முதல் 3 நாட்கள் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மீண்டும் வருகிற 20-ந்தேதி திறக்கப்படும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி அன்று மதுக்கடைகள் மீண்டும் மூடப்படும். இதனால் தேர்தலுக்கு மறுநாளான சனிக்கிழமை அன்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோத வாய்ப்பு உள்ளது. அன்றும் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நாட்களில் கூடுதல் விலைக்கு மது விற்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை கடைகள் மூடல்.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு.

    இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் கட்சி தலைவர்கள் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், 17-ந்தேதி மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும்.

    அதனால் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

    அதனைத்தொடர்ந்து தமிழக அரசு மூன்று நாட்களை டாஸ்மாக் மூடப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளது.

    • தேர்தல் நேரத்தில் நபர் ஒருவருக்கு 3 குவார்ட்டர் பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பது தேர்தல் ஆணைய விதிகளில் ஒன்றாக உள்ளது.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 16-ந்தேதியில் இருந்து எவ்வளவு மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளன? என்பது பற்றிய கணக்கையும் கேட்டுப்பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    தேர்தல் நேரத்தில் அரங்கேறும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு அளவுக்கு அதிகமான மதுபோதையே காரணம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிவாளம் போட்டு உள்ளது.

    தேர்தல் நேரத்தில் நபர் ஒருவருக்கு 3 குவார்ட்டர் பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பது தேர்தல் ஆணைய விதிகளில் ஒன்றாக உள்ளது. அதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். டாஸ்மாக் கடைகளில் மதுவாங்கி விட்டு வெளியே செல்பவர்கள் எத்தனை மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்? விதிகளை மீறி அவர்களுக்கு மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது பற்றி பறக்கும் படையினர் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனைகளின் போது டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில் இருப்பை கணக்கிடும் அதிகாரிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 16-ந்தேதியில் இருந்து எவ்வளவு மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளன? என்பது பற்றிய கணக்கையும் கேட்டுப்பெற்றுள்ளனர்.

    கடந்த 2 வாரங்களில் விற்பனையான மதுபாட்டில்களின் எண்ணிக்கையை அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிட்டு பார்த்து கூடுதலாக மொத்தமாக மதுவிற்பனை நடைபெற்று உள்ளதா? என்கிற விசாரணையிலும் இறங்கி உள்ளனர்.

    டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக நடைபெறும் மது விற்பனையை விட 30 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மதுவிற்பனை நடைபெற்றிருப்பதால் அதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகள் கேள்வி எழுப்புவது இல்லை. அதே நேரத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக மதுவிற்பனை நடந்திருந்தால் அதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் விசாரித்து வருகிறார்கள்.

    அதே நேரத்தில் சென்னையில் பல இடங்களில் இந்தத் தேர்தல் விதிமுறைகளை மீறி டாஸ்மாக் கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் மொத்தமாக வாங்கி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுபோன்று பதுக்கி வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    • தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர்.
    • தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    டாஸ்மாக் மதுக்கடைகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மதுபான ஆலைகளில் இருந்து பீர் வகைகள் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு பிரீமியம், லேகர் பீர், கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர், பிரீமியம் பீர், கிளாசிக் பீர், மேக்மை ஸ்ட்ராங் பீர், எஸ்.என்.ஜே. 10 ஆயிரம் டீலர்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு கெஸ்ட்ரா, ஸ்ட்ராங் பீர், ஹண்டர் வூட்பெக்கர், பவர் கூல் உள்பட 35 வகையான பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டிகளுக்கு மேல் பீர் விற்பனையாகிறது. கோடை காலம் வந்து விட்டதால் பீர் விற்பனை இன்னும் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் 65 லட்சம் பெட்டி அளவுக்கு பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுவும் கூலிங் பீர் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்குகிறார்கள். அதற்கேற்ப டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் தட்டுப்பாடின்றி வினியோகிக்கிறார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர். இதனால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கிராம பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதுபோன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மது ஆலைகளில் இருந்து அதிகளவு பீர் கொள்முதல் செய்யப்பட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஒரு வாரத்துக்கு தேவையான பீர் இருப்பு வைக்கப்பட்டு, தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில், இதற்கு முன்பு மது குடிப்பவர்கள் குறிப்பிட்ட ரக மதுபானங்களை வாங்கி குடிப்பது வழக்கம். மற்ற ரக பீர்களை குடித்தால் தலை வலிக்கும் என்று வாங்க மாட்டார்கள்.

    ஆனால் இப்போது அப்படி அல்ல. எந்த ரகமாக இருந்தாலும் வாங்கி குடிக்கிறார்கள். அவர்களுக்கு போதை ஏற வேண்டும். அதுதான் நோக்கம். இதனால் ஒரு பிராண்ட் இல்லாவிட்டால் வேறொரு பிராண்டை வாங்கிச் சென்று குடிக்கிறார்கள். குடிகாரர்களின் மனநிலை மாறிவிட்டது. 5 வருடத்துக்கு முன்பு குடித்தவர்கள் மனநிலை வேறு விதமாக இருந்தது. இப்போது மனநிலை வேறு விதமாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் போதைக்கு அடிமையாகி கிடைத்த சரக்கை வாங்கி குடிக்கிறார்கள்.

    இதனால் மது தட்டுப்பாடு என்ற நிலை வரவில்லை. டாஸ்மாக் நிர்வாகமும் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து ஒரு வாரம் இருப்பு வைக்கும் அளவுக்கு சரக்கை அனுப்புகிறார்கள். இதனால் பீர் தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன.
    • கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    மதுரை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி அரசு கடந்த மாதம் அறிவித்தது.

    இந்த உத்தரவின் பேரில் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அனைத்து மதுபானங்களின் விலையும் அதன் அளவுக்கேற்ப விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது. இதில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன. எனவே அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

    இந்த சூழலில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மேலாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு 3 நாட்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுபான பாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 4 கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களான சுரேஷ், பொன்முத்துமாரி, சக்தி மோகன், சுப்ரமணியன் ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
    • விலை உயர்வை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை விரைவில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயரும் என தெரிகிறது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

    பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.


    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மூலப்பொருட்களின் விலை உயர்வால் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அரசுக்கும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் மது வகைகள் விலைகள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
    • டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி நட்சத்திர ஓட்டல்களில் இயங்கி வரும் கிளப் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இந்த மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் மூடப்படும் என ராஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

    ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அதேபோல் ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் தினம் என்பதும், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் ஜனவரி 16, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    மேலும் டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி நட்சத்திர ஓட்டல்களில் இயங்கி வரும் கிளப் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தஞ்சை மாவட்டத்தில் சுமார் 143 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றது.
    • கடைகள் முன்பு அனாவசியமாக கூடும் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திடம், ஏ. ஐ. டி.யூ .சி. டாஸ்மாக் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் துரை. மதிவாணன், முத்துக்குமரன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், தலைவர் பால. வடிவேலன், மாவட்ட பொருளாளர் இளஞ்செ ழியன், மேற்பார்வையாளர் கருணாகரன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் சுமார் 143 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றது.

    நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை நடைபெற வாய்ப்புள்ளது. எனவே இதை பயன்படுத்தி சமூக விரோதிகளால் டாஸ்மாக் கடைகளில் அமைதி இல்லாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் அடிக்கடி வந்து கண்காணிக்க வேண்டும்.

    பாதுகாப்பு வழங்க வேண்டும். கடைகள் முன்பு அனாவசியமாக கூடும் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகிறது.
    • கோடை காலங்களில் 65 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகும்.

    சென்னை:

    'டாஸ்மாக்' மதுக்கடைகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பீர் கம்பெனிகளில் தயாரிக்கப்படும் பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு பிரீமியம் லேகர் பீர், கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர், பிரீமியம் பீர், கிளாசிக் பீர், மேக்னம் ஸ்ட்ராங் பீர், எஸ்.என்.ஜே. 10 ஆயிரம் டீலக்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் பீர் உள்பட 35 வகையான பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகிறது. கோடை காலங்களில் 65 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகும். அதுவும் 'கூலிங் பீர்' வேண்டும் என்று கேட்டு வாங்குவது வாடிக்கையாளர்களின் வழக்கம்.

    தமிழகத்தில் தயாரிக்கும் பீர் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் இப்போது வெளிமாநிலத்தில் தயாரிக்கப்படும் பீர் வகைககளை வாங்கவும் டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தை சார்ந்த எஸ்.ஓ.எம். குரூப் கம்பெனி கும்மிடிப்பூண்டியில் மது தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    இந்த கம்பெனியின் பீர் வகைகளை கொள்முதல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருகிற 10-ந்தேதிக்கு பிறகு ஹன்டர், உட்பெக்கர், பவர் கூல் உள்ளிட்ட புதிய ரக பீர்கள் விற்பனைக்கு வர உள்ளது.

    இதே போல் பிற மாநிலங்களில் இருந்தும் விதவிதமான ரகங்களில் பீர் வகைகள் வாங்கி டிசம்பர் மாதத்தில் இருந்து விற்பனை செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் எஸ்.என்.ஜே. குழுமத்தில் இருந்து 100 சதவீதம் பார்லி சார்ந்த பீரை அறிமுகப்படுத்தியது. இப்போது 4 சதவீதம் ஆல்கஹால் கொண்ட பீர் வகைகளை வாங்கி விற்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

    வெளிமாநில பீர் வகைகளை விற்பனை செய்ய ஏதுவாக அந்தந்த கம்பெனியினர் 'கூலிங் பிரிட்ஜ்' வழங்கவும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

    • தமிழகம் முழுவதும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்களை ஏலம் எடுப்பதற்கு விண்ணப்பித்தனர்.
    • டாஸ்மாக் நிர்வாகம் கோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்து விளக்கம் அளித்த பிறகுதான் முடிவாகும்.

    சென்னை:

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் பார்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பார்கள் நடத்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஏலம் விடப்படவில்லை. 2,800 கடைகளுக்கான பார்களை டெண்டர் விட கடந்த 7-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    ஏற்கனவே விடப்பட்டு நிறுத்தப்பட்ட கடைகளுக்கும், இதுவரையில் ஏலம் விடாமல் இருந்த கடைகளுக்கும் சேர்த்து இ.டெண்டர் விடப்பட்டது. இதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

    தமிழகம் முழுவதும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்களை ஏலம் எடுப்பதற்கு விண்ணப்பித்தனர். குறிப்பாக சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் 720 பார்கள் உள்ளன. இவற்றை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவுகிறது.

    இதற்கிடையில் மதுபான பார்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. டெண்டரை இன்று இறுதி செய்து அறிவிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் 31-ந் தேதி வரை பார் டெண்டர் குறித்த அறிவிப்பை வெளியிடக் கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனால் இன்று டெண்டர் இறுதி செய்யப்படாது. டாஸ்மாக் நிர்வாகம் கோர்ட்டில் இது தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்து விளக்கம் அளித்த பிறகுதான் முடிவாகும்.

    இதுகுறித்து தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறுகையில், 'பார்கள் டெண்டர் முறையாக நடத்தப்பட வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் நடைபெற வேண்டும். 2003 முதல் 2019 வரை என்ன நடைமுறை இருந்ததோ அதை பின்பற்றலாம். நேர்மையான முறையில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.

    • 500 மதுக்கடைகளை மூடியதை தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இப்போது என்ன செய்யலாம் என்று அரசு யோசித்து வருகிறது.
    • பீர்பாட்டில் விலையையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது.

    இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது.

    பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி வருகிறது.

    பொதுமக்கள் மனு கொடுத்து எதிர்ப்பு தெரிவித்தால்தான் அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிக்கிறார்கள்.

    இந்த வகையில்தான் சமீபத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

    2023 மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5329 ஆக இருந்தது. அதன் பிறகு அரசு எடுத்த கொள்கை முடிவு படி 500 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்போது 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.

    500 மதுக்கடைகளை மூடியதை தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இப்போது என்ன செய்யலாம் என்று அரசு யோசித்து வருகிறது.

    இதனால் சமீபத்தில் நடந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் 500 மதுக்கடை மூடப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி ஈடு செய்வது என விவாதிக்கப்பட்டுள்ளது.

    அப்போது மதுபாட்டில்கள் விலையை கணிசமாக உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தினால் மக்களுக்கு பெரிய சுமையாக தெரியாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிராண்டுக்கு ஏற்ப 80 ரூபாய் வரை விலையை உயர்த்தினால் அரசுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், டாஸ்மாக் மதுக்கடைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் போது பல்வேறு புகார்கள் எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.

    அவற்றை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அது மட்டுமின்றி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட மது வகைகளின் விலையை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்த ஆலோசிக்கப்பட்டது. ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.20 வரையும் முழு பாட்டில் ரூ.30 முதல் ரூ.50-வரை உயர்த்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பிராண்டுகள் அடிப்படையில் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

    இதே போல் பீர் பாட்டில் விலையையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். அப்போது என்னென்ன சரக்கு எவ்வளவு விலை என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பீர் விற்பனை சரிந்துள்ளது.
    • விஸ்கி, ரம், பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் வழக்கத்தைவிட சற்று கூடியுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் பீர் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த வருடம் வெயிலின் தாக்கம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் கடுமையாக இருந்தது.

    இதனால் வழக்கத்தைவிட டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்தது.

    கடந்த ஆண்டைவிட இந்த வருடம் பீர் மது வகைகள் பெட்டி பெட்டியாக விற்பனையானது. தென்மேற்கு பருவமழை காலத்திலும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மதுக்கடைகளில் பீர் வகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. ஜில் பீர் பானங்களுக்கு தேவை அதிகரித்தது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. கால சூழ்நிலை மாற்றத்தால் மது விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பீர் விற்பனை சரிந்துள்ளது.

    இந்த மாதத்தில் திடீரென பீர் விற்பனை குறைந்ததற்கு காரணம் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளதே காரணம்.

    இதனால் பீர் பிரியர்கள் ஹாட் மதுபானங்களுக்கு மாறியுள்ளனர். விஸ்கி, ரம், பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் வழக்கத்தைவிட சற்று கூடியுள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறும் போது, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் பீர் விற்பனை சரிந்தது.

    பீர் குடிப்பவர்கள், பிராந்தி, ரம், விஸ்கிக்கு மாறியுள்ளனர். மேலும் தற்போது புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் சிலர் விரதம் இருப்பார்கள். இதனால் வரும் நாட்களில் மது விற்பனை குறைய வாய்ப்புள்ளது.

    கார்த்திகை மாதம் வரை கோவில்களுக்கு செல்வதற்காக மாலை போடுவார்கள். அதனால் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் மது விற்பனை சற்று குறையக் கூடும் என்றனர்.

    ×