search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac stores"

    • பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கின்றனர்.
    • குடிமகன்கள் விரும்பும் மதுவகைகள் கிடைப்பதில்லை.

    சென்னிமலை:

    சென்னிமலை வட்டா ரத்தில் ஈங்கூர், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ். உள்பட 14 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.

    தற்போது கோடை வெயில் 104 டிகிரிக்கு மேல் இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக பாட்டில் பீர் கேட்டால் டின் பீர், டின் பீர் கேட்டால் பாட்டில் பீர் என கிடைத்து வந்தது. கடந்த 3 நாட்களாக எந்த பீர் வகைகளும் கிடைக்கவில்லை.

    குடிமக ன்களும் பல கடைகளில் தேடி அழைந்து பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கின்றனர். மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக மதுபா னங்கள் வரவு அதிகரி த்துள்ளதாலும் குடிமகன்கள் விரும்பும் மதுவகைகள் கிடைப்பதில்லை.

    குடிமகன்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்து விட்டன. விலை அதிகரிப்பு, உள்ள மதுபானங்கள் தான் கிடைக்கின்றன என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக உள்ள நிலையில், தற்போது பீர் பிரியர்களும் மன வேதனை அடைந்துள்ளனர்.

    தட்டுபாடு மற்றும் பீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். அதிலும் கேட்ட பீர் வகைகள் கிடைப்பதே இல்லை என குறைபட்டு கொள்கின்றனர். 

    • கரூர், மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • விதிகளை மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், தெரிவித்துள்ளார்.

    கரூர்,

    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும், அரசு மதுபான டாஸ்மாக் கடைகள், சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும். அன்றைய தினத்தில் விதிகளை மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், தெரிவித்துள்ளார்.


    • நகர சபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பெண்கள் செல்வதற்கு அச்சமாக உள்ளதாக புகார்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரமன்ற அவசரக் கூட்டம் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி, சுகாதார அலுவலர் மொய்தீன், நகரமைப்பு வளர் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் துவங்கியவுடன் நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் பேசுகையில்:-

    நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி தனது வார்டில் உள்ள சித்திவிநாயகர் கோவில் தெருவில் சாலை மற்றும் வடிகால் வசதிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்ய பொதுமக்கள் பங்களிப்பாக 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து தந்துள்ளார் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் இதேபோல் நகரமன்ற உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பங்களிப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    உறுப்பினர் ராணி குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே எம் ஜி ஆர், ஜெயலலிதா, அண்ணா சிலைகள் உள்ளன.

    அதன் பின்புறம் 2 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், பெண்கள் செல்வதற்கு மிகவும் அச்சமாக உள்ளது இந்த கடையை மாற்றவேண்டும் வலியுறுத்தினார்.

    உறுப்பினர் ஆட்டோ மோகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேதாஜி சவுக் அருகே உள்ள டாஸ்மாக் கடையும் அகற்ற வேண்டும் ஒரு வழி பாதையாக உள்ள அங்கு டாஸ்மாக்கடை இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என கூறினார்.

    அப்போது உறுப்பினர்கள் பலர் எழுந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை அருகே காலை முதலே மது விற்பனை செய்கிறார்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது இந்த டாஸ்மாக் கடை விற்பனை தவிர மற்ற நேரங்களிலும் அங்கே மதுபானங்கள் விற்கப்படுகிறது, குடியாத்தம் நகரில் அதிகளவு கஞ்சா விற்பனை உள்ளது இதனையும் நகர போலீசார் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டினர்.

    உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் கலெக்டர் ஆய்வுக்கு வந்தபோது நானும் உடன் சென்றிருந்தேன் அப்போதே இரண்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது இருப்பினும் அந்த மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் கூட்டத்திற்கு கலந்து கொள்ளாத கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து சீல் வைக்க வேண்டும் இறைச்சி கழிவுகளை எக்காரணம் கொண்டு பொதுவெளியில் கால்வாயிலோ கொட்ட அனுமதிக்க கூடாது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் கூறிய பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • டாஸ்மாக் கடைகள் நாளை மறுநாள் மூடப்படுகிறது.
    • மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்தும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும், என்று மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×