search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்
    X

    குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்

    • நகர சபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பெண்கள் செல்வதற்கு அச்சமாக உள்ளதாக புகார்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரமன்ற அவசரக் கூட்டம் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி, சுகாதார அலுவலர் மொய்தீன், நகரமைப்பு வளர் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் துவங்கியவுடன் நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் பேசுகையில்:-

    நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி தனது வார்டில் உள்ள சித்திவிநாயகர் கோவில் தெருவில் சாலை மற்றும் வடிகால் வசதிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்ய பொதுமக்கள் பங்களிப்பாக 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து தந்துள்ளார் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் இதேபோல் நகரமன்ற உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பங்களிப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    உறுப்பினர் ராணி குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே எம் ஜி ஆர், ஜெயலலிதா, அண்ணா சிலைகள் உள்ளன.

    அதன் பின்புறம் 2 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், பெண்கள் செல்வதற்கு மிகவும் அச்சமாக உள்ளது இந்த கடையை மாற்றவேண்டும் வலியுறுத்தினார்.

    உறுப்பினர் ஆட்டோ மோகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேதாஜி சவுக் அருகே உள்ள டாஸ்மாக் கடையும் அகற்ற வேண்டும் ஒரு வழி பாதையாக உள்ள அங்கு டாஸ்மாக்கடை இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என கூறினார்.

    அப்போது உறுப்பினர்கள் பலர் எழுந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை அருகே காலை முதலே மது விற்பனை செய்கிறார்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது இந்த டாஸ்மாக் கடை விற்பனை தவிர மற்ற நேரங்களிலும் அங்கே மதுபானங்கள் விற்கப்படுகிறது, குடியாத்தம் நகரில் அதிகளவு கஞ்சா விற்பனை உள்ளது இதனையும் நகர போலீசார் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டினர்.

    உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் கலெக்டர் ஆய்வுக்கு வந்தபோது நானும் உடன் சென்றிருந்தேன் அப்போதே இரண்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது இருப்பினும் அந்த மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் கூட்டத்திற்கு கலந்து கொள்ளாத கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து சீல் வைக்க வேண்டும் இறைச்சி கழிவுகளை எக்காரணம் கொண்டு பொதுவெளியில் கால்வாயிலோ கொட்ட அனுமதிக்க கூடாது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் கூறிய பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×