search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா"

    • ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதி.
    • மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 81,72,163 ஆக அதிகரிப்பு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (டிசம்பர் 25) மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இன்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 28 பேரில் ஒருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்படவில்லை. புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையுடன், அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 72 ஆயிரத்து 163 ஆக அதிகரித்து இருக்கிறது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

    "மாநிலத்தில் இதுவரை 153 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 142 பேர் வீட்டில் இருந்தபடி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். 11 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மட்டும் ஐ.சி.யு.-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்," என்று சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

    • மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர்.
    • வன்னி மரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவது வழக்கம்.

    மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமி தினத்தன்று வழிபடுவதோடு, அதன் இலைகளையும் பறிப்பர்.

    அங்கு வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர்.

    இளைஞர்கள் இந்நாளில் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து ஆசியைப் பெறுவார்கள்.

    பெரியவர்களும் ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெற வேண்டும் என்ற அடிப்படையில்

    அந்த இலைகளை கொடுத்து "இதை தங்கமாக நினைத்து பெற்றுக் கொள்ளுங்கள்" என சொல்லி ஆசீர்வதிப்பர்.

    மகாராஷ்டிரா மாநில கோவில்களில் வன்னி மரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவது வழக்கம்.

    • மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
    • அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். இவருடன், 9 மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

    இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.

    எங்களின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இதில் திருப்தி அடைகிறோம். தற்போதைய அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.

    வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
    • பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்வார்.

    மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் வழங்கினார்.

    9 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார்.

    ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    துணை முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் அஜித் பவார் பகிர்ந்து கொள்கிறார்.

    • வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.
    • தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் உலாஸ் நகரில் நடைபெற்ற வினோதமான சம்பவத்தில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் குளித்து கொண்டு செல்வது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ தானே நகரத்தில் உள்ள உல்காஸ் நகரின் 17-வது பிரிவு பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.

    அந்த பெண் தன் முன்னால் ஒரு வாளியை வைத்திருந்தார். மற்ற பயணிகள் பார்த்து கொண்டிருக்கும் போது அந்த ஆண் மீதும், தன் மீதும் அந்த பெண் தண்ணீரை ஊற்றி குளிப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே வீடியோ வைரலானதால் தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.

    • சத்ரபதி சிவாஜியை ஆளுநர் குறைத்து மதிப்பிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
    • வேறு எந்த பெரிய மனிதருடனும் சிவாஜியை ஒப்பிட முடியாது என எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்தார்

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, சத்ரபதி சிவாஜியை பற்றி பேசியது சர்ச்சையானது. மகாராஷ்டிர மாநிலத்தின் அடையாளமான மன்னர் சத்ரபதி சிவாஜி அந்த காலத்து அடையாளச் சின்னம் என்றும், நிதின் கட்காரி நவீன காலத்து அடையாளச் சின்னம் என்றும் கூறினார்.

    "நாம் பள்ளியில் படிக்கும் போது, ஆசிரியர் நமக்கு பிடித்த தலைவர் மற்றும் ஹீரோ பற்றி கேட்பார். சிலர் சுபாஷ் சந்திரபோஸ், நேரு, காந்தி என்று சொல்வார்கள். ஆனால் இங்கு யாராவது உங்களிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை, மகாராஷ்டிராவில் நீங்கள் அவர்களைக் காணலாம். சிவாஜி பழைய காலத்து அடையாளச் சின்னம், நான் புதிய சகாப்தம் பற்றி பேசுகிறேன். டாக்டர் அம்பேத்கர் முதல் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் அத்தகைய அடையாளச் சின்னத்தை காணலாம்" என்றார் ஆளுநர்.

    சத்ரபதி சிவாஜியை பழைய அடையாளச் சின்னம் என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குறிப்பிட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, "சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியங்களுக்கு ஒருபோதும் வயது ஆகாது. அவரை உலகில் வேறு எந்த பெரிய மனிதருடனும் ஒப்பிட முடியாது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பாஜக தலைவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், மாநிலத்தின் வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி தெரியாத ஒருவரை (ஆளுநர்) வேறு எங்காவது அனுப்புங்கள்" என்று வலியுறுத்தினார்.

    ஆளுநரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து மத்திய மந்திரி நிதின் கட்கரி, கூட்டணி கட்சியை சமாதானம் செய்யும் வகையில் தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறும்போது, சத்ரபதி சிவாஜி மகாராஜா எங்களுக்கு கடவுளை போன்றவர். பெற்றோருக்கும் மேலாக நாங்கள் அவருக்கு மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம், என்றார்.

    • மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • 2 ஆண்டுகளாக அம்ருதா பட்னாவிஸ் பற்றி கீழ்த்தரமான முறையில் அவதூறு கருத்துக்கள் பகிர்ந்துள்ளார்

    மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வருகிறார். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ்.இவரை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்தது. மேலும் அவர் குறித்து மிகவும் மோசமான வார்த்தைகளாலும் கருத்துக்கள் பகிரப்பட்டது.

    இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஸ்ம்ருமிதி பன்சால் என்ற பெண் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனர். அப்போது ஸ்ம்ருமிதி பன்சால் 53 போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக அம்ருதா பட்னாவிஸ் பற்றி கீழ்த்தரமான முறையில் அவதூறு கருத்துக்கள் பகிர்ந்து வந்தததும், 13 போலி இ-மெயில் கணக்கு தொடங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எதற்காக அந்த பெண் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நாளை வரை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    • மகாராஷ்டிராவில் 20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
    • 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5 மி.மீட்டர் மழை பதிவானது. வெள்ளப்பெருக்கால் அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.

    20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பாக விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில பேரீடர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 14ந் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு மரம் மற்றும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




    • அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு, பால்தாக்கரே பெயரை பயன்படுத்த உத்தவ் தாக்கரே எதிர்ப்பு.
    • தடை கோரி, தேர்தலை ஆணையத்திடம் முறையீடு செய்ய சிவசேனா முடிவு.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நீடிக்கும் நிலையில், ஆதரவு அதிருப்தி எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில்  தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள மகாராஷ்டிரா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா பாலாசாஹேப் என்ற பெயரில் புதிய அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது குறித்து பேசிய அதிருப்தி எம்எல்ஏ தீபக் வசந்த் கேசர், தங்கள் முகாமில் இருந்து யாரும் சிவசேனாவை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றார். மேலும் வேறு எந்த கட்சியிலும் இணையும் திட்டமில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.  தங்கள் அணிக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளதாகவும், தங்கள் அணித் தலைவராக ஏக்நாத் ஷிண்டே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு, சிவசேனா மற்றும் அதன் நிறுவனர் பால்தாக்ரேவின் பாலாசாஹேப் என்ற பெயரை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில்,கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பால்தாக்கரேவும், சிவசேனாவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும், சிவசேனாவைத் தவிர, அவரது பெயரை யாரும் பயன்படுத்த முடியாது என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு சிவசேனா மற்றும் பால்தாக்கரே பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்ககோரி, தேர்தல் ஆணையத்திடம் முறையிட, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார்.

    இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க வதோதராவில் மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிசை, ஏக்நாத் ஷிண்டே சந்தித்ததாகவும், அவர்களது சந்திப்பு நடைபெற்ற போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வதோதராவில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சியில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனா தொண்டர்களை விடுவிக்க தான் போராடுவதாகவும், இந்த போராட்டம் சிவசேனாக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் குறும்பு செய்த 5 வயது குழந்தையை மெழுகுவர்த்தியால் சூடு வைத்தது தொடர்பாக தாய் மற்றும் அத்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Childburned #MotherAuntbooked
    தானே:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டம்  ரோட்பலி கிராமத்தில், 5 வயது குழந்தையின் சேட்டையால் ஆத்திரமடைந்த தாய் அனிதா யாதவ் மற்றும் அத்தை ரிங்கி யாதவ், எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியினை கொண்டு குழந்தையின் உடலில் சூடு வைத்துள்ளனர். இதனால் குழந்தையின் உடல் முழுதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கடந்த புதன்கிழமை அன்று குழந்தையின் தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். வீட்டில் குழந்தை சொன்னதைக் கேட்காமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த அனிதா மற்றும் ரிங்கி இருவரும் சேர்ந்து குழந்தைக்கு சூடு வைத்ததாக புகார் மனுவில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தாய் அனிதா மற்றும் அத்தை ரிங்கி மீது குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இருவரும் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து தொடந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #Childburned #MotherAuntbooked

    மகாராஷ்டிராவின் பால்கர் ரெயில்வே நிலைய காத்திருப்பு அறையில் கர்ப்பிணி பெண் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார். #PalgharRailwayStation #Twins
    மும்பை:

    மகாரஷ்டிரா மாநிலத்தின் டஹானு நகர் நோக்கி சாயா சவ்ரா என்ற நிறைமாத கர்ப்பிணி தனது கணவர் மற்றும் மாமியாருடன் புறநகர் ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.

    ரெயில் பால்கர் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது சவ்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, பால்கர் ரெயில் நிலையத்தில் சவ்ரா இறக்கப்பட்டார். அங்குள்ள காத்திருப்பு அறையில் அவர் தங்க வைக்கப்பட்டார். உடனடியாக வரவழைக்கப்பட்ட உள்ளூர் மருத்துவர்கள் உதவியுட சவ்ரா அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

    அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள், தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து, சவ்ரா உள்ளூர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். #PalgharRailwayStation #Twins
    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆன்லைன் விற்பனை மூலம் வீடுகளுக்கே நேரடியாக மதுபானங்களை வினியோகம் செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. #alcoholsellbyonline
    மும்பை :

    மகாராஷ்டிராவில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிகளவு விபத்துகள் நடக்கின்றன. பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க ஆன்லைனில் மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய அனுமதி அளிக்க மராட்டிய அரசு திட்டமிட்டு உள்ளது.

    இது குறித்து மாநில கலால் வரித்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், ‘பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விரும்புகிறோம். மதுபானங்கள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டால் அது மதுகுடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றார். எனினும் அவர் இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து கூற மறுத்துவிட்டார்.

    இது குறித்து கலால் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து மாநிலத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் அரசுக்கு ரூ.15 ஆயிரத்து 343 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி குறைப்பினாலும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஆன்-லைனில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்தால் அதிக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #alcoholsellbyonline
    ×