search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
    • 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.

    முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, நவராத்திரி விழாவைப் புதுமையான முறையில் தமிழக மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளது. தமிழ்நாடு எங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர். 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.



    பொதுமக்கள் கலந்துகொள்ள திருவிளக்கு பூஜை, சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் என பல்வேறு நிகழ்வுகள் மூலம் அசத்தியுள்ளது விஜய் டிவி.


    தமிழ் நாட்டில், காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடினர். இவர்களுடன் ஸ்டார் விஜய் முன்னணி பிரபலங்கள் பலரும் இவ்விழாவினில் பங்கேற்றனர்.

    • குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று நவராத்திரி நிறைவு விழாவையொட்டி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளையும் சில்லறை நாணயங்களையும் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    • கொலு படிகளை ஒற்றைப்படையில் தான் வைக்க வேண்டும்.
    • கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது.

    நவராத்திரி என்றால் கொலு பொம்மை தான் முதலில் நமது நினைவிற்கு வரும். கொலுப் படிகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் வைக்க வேண்டும். எனவே கொலு படிகள் அமைக்கும் போது 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். கொலு படிகள் அமைக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும்.

    கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது. மேலே உள்ள படியில் இறைவனின் பொம்மைகளை வைப்பார்கள். ஆதற்கு கீழே ரிஷிகள் முனிகள் சித்தர்கள் போன்ற பொம்மைகள், அதற்கு கீழே மனிதர்கள், பின் விலங்குகள்,பறவைகள், போன்றவற்றை வைப்பார்கள். அதாவது கொலு படிகளில் கீழிருந்து ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, ஐந்தறிவு, ஆறறிவு, ரிஷிகள், தெய்வங்கள் என்ற வரிசையில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலுப் படிகளின் நடுவில் கலசம் வைப்பார்கள்.

    நவராத்திரி கொலுப் படியில் இருக்கும் கலசத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம், அட்சதை மற்றும் பூக்கள் மற்றும் வஸ்திரம் சார்த்தி பூஜித்தி வருவார்கள். மாலையில் தினமும் சுண்டல் செய்து நிவேதனம் செய்து வீட்டில் கொலு பார்க்க வருபவர்களுக்கு வழங்க வேண்டும். பத்து நாட்கள் முடிந்த பிறகு கலசத்தில் வைத்த தேங்காயை வைத்து இனிப்பு பண்டங்களைச் செய்யலாம்.

    ஒரு சிலர் வீட்டில் பத்து நாட்களும் விளக்கு எரிய வைப்பார்கள். இதற்கு அகண்ட தீபம் என்று பொருள். இதில் மூன்று வித எண்ணெய் நல்லெண்ணெய், நெய் இலுப்பெண்ணெய்)அல்லது ஐந்து வித எண்ணெய் கலந்து தீபம் ஏற்றலாம்.

    கொலுப்படி மற்றும் பொம்மைகள் வைக்க இயலாதவர்கள் எளிமையாக வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் படத்தை வைத்து அதற்கு முறையாக பூஜைகள், நைவேத்தியங்கள் படைத்து எளிய முறையில் வழிபடலாம்.

    நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் காலை மாலை என இரண்டு வேளை பூஜை செய்ய வேண்டும். அம்மன் பற்றிய பாடல்களை பாடுவார்கள். வீட்டிற்கு அக்கம் பக்கம், தெரிந்தவர்கள் மற்றும் விருந்தினர்களை அழைத்தது வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழம், தட்சினை சுண்டல், மற்றும் நீங்கள் விரும்பினால் ஏதாவது பரிசுப்பொருட்கள அல்லது ரவிக்கை போன்றவற்றை அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கேற்ப கொடுக்கலாம்.

    சிறு குழந்தைகள் வந்தால் அவர்கள் வயதிற்கேற்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இந்த ஒன்பது நாட்களுள் ஏதாவது ஒரு நாள் ஒரு கன்னிப் பெண்ணை அழைத்து உணவளித்து வெற்றிலை, பாக்கு உடை எடுத்து அளிக்கலாம். இதனை செய்வது மிகவும் சிறப்பு.

    இத்தகைய சிறப்புமிக்க்க நவராத்திரி பண்டிகையையொட்டி சென்னை வடபழனியை சேர்ந்த பிரேமலதா-அரவிந்தன் தம்பதி லண்டனில் உள்ள தனது வீட்டில் கொலு வைத்துள்ளனர்.

     அதேபோன்று சென்னை தி.நகர் தண்டபாணி தெருவை சேர்ந்த சங்கர்-லட்சுமி தம்பதியினர் நவராத்திரி பண்டிகையை யொட்டி தங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளார்கள்.

    • துர்கா தேவியை மையமாக வைத்து பாடுபொருளாக இசைக்கப்படுவது கர்பா பாடல்கள்.
    • குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் ஒரே நாளில் மாரடைப்பால் இறந்துள்ளனர்.

    அகமதாபாத்:

    நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

    இந்நிலையில், குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 10 பேரும் இள வயது மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பரோடாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல், அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபரும் கர்பா நடனமாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். இதேபோல், மேலும் 8 உயிரிழப்புகள் குஜராத்தில் பதிவாகியுள்ளன.

    நவராத்திரி தொடங்கி முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்துள்ளன.

    இதையடுத்து, கர்பா நடனம் நடக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் இள வயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

    • ஓதுவார்களின்அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.
    • வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படு கிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருவிழாவான நேற்று அம்மனுக்கு நெல்லை சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலையில் ஆன்மீக உரையும், இரவு பரதநாட்டி யமும் நடந்தது. அதன் பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட யானை முன் சென்றது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்ட பத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின்அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பி ரகார மண்ட பத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளிக்காமதேனு வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவ டைந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தள வாய்சுந்தரம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. 7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் சிறப்பு அன்ன தானம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும், ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் 8 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • மாரியம்மன் கோவிலில் நவராத்திரி
    • ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது

    முசிறி

    முசிறி கள்ளர் தெரு மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் பால், தயிர், பன்னீர், மஞ்சள், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டன . மயிலாடுதுறை நாத பிரம்மம் கௌரி ஆறுமுகத்தின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி கணேசன், வக்கீல் செந்தில் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றதை நினைவு கூறும் ஜி-20 கொலு அமைக்கப்பட்டிருந்தது.
    • பக்தி பாடல்களைப் பாடியும் கடவுள் ஸ்லோகங்களை இசைத்தும் மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.

    திருப்பூர்:

    பெண் தெய்வங்களைக் கொண்டாடும் விழாவான நவராத்திரி பண்டிகை திருப்பூர் கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறையில் கொலுப் படிக்கட்டுகளை அமைத்து அவற்றில் பல்வேறு கடவுள் மற்றும் அவதார புருஷர்களின் பொம்மைகளை வைத்து, பக்தி பாடல்களைப் பாடியும் கடவுள் ஸ்லோகங்களை இசைத்தும் மாணவர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் ஒவ்வொரு வகுப்பும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கொலுப்படிக்கட்டுகளை அமைத்திருந்தனர்.

    குறிப்பாக இந்த ஆண்டு இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றதை நினைவு கூறும் ஜி-20 கொலு, ஷேக்ஸ்பியரின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட வாழ்வின் ஏழு படிநிலைகள், இந்தியப் பேரரசர்களின் சாம்ராஜ்யம், விளையாட்டுத் துறையில் இந்தியாவின் பெருமைகள் தொடர்பான கொலு ஆகியவை காண்போரை வெகுவாக கவர்ந்தன.

    விழாவில் கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியின் தலைவர் மோகன் கே. கார்த்திக், பள்ளியின் இயக்குநர் ரமேஷ், நிர்வாக இயக்குநர் ஐஸ்வர்யா நிக்கில், செயலாளர் நிவேதிகா மற்றும் பள்ளியின் முதல்வர் தீபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.
    • நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.

    நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.

    உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.

    தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே,

    அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.

    நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி

    சிவசக்தியாக ஐக்கிய ரூபிணியாக அர்த்த நாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.

    இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.

    முதல் மூன்று நாட்கள் மகேஸ்வரி கவுமாரி, வராஹி என துர்காதேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும்,

    நிறைவுறும் மூன்று தினங்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குவது நல்லது.

    இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை

    பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்ட வரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.


    • ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி
    • வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி

    அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி

    செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி

    ஆட்சிகொள் அரசரும் அழியாய் போற்றி

    காட்சிசேர் புலவர்பால் கனிவோய் போற்றி

    இல்லக விளக்கம் இறைவி போற்றி

    நல்லக மாந்தரை நயப்பாய் போற்றி

    ஈரமார் நெஞ்சினார் இடந்தோய் போற்றி

    ஆரமார் தொடையால் அணிவோய் போற்றி

    உலகியல் நடத்தும் ஒருத்தி போற்றி

    அலகில் உயர்க்கிறி வளிப்போய் போற்றி

    ஊனமில் வெள்ளை உருவினாய் போற்றி

    கானக் குயில்மொழிக் கன்னியே போற்றி

    எண்ணிலாப் புகழுடை எந்தாய் போற்றி

    பண்ணியல் தமிழின் பாவாய் போற்றி

    ஏழுல குந்தொழும் இறைவி போற்றி

    சூழநல் அன்பரின் துணைத்தாய் போற்றி

    ஐதுசேர் வெண்கலை ஆடையாய் போற்றி

    மைதீர் முத்து மாலையாய் போற்றி

    ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி

    வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி

    ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி

    போதுசேர் அருட்கண் பொற்கோடி போற்றி

    ஒளவைமூ தாட்டியாய் ஆனாய் போற்றி

    கௌவையே இல்லாக் கலைமகள் போற்றி

    கல்விக் கரசே கலைக்கடல் போற்றி

    நல்விற் புருவ நங்காய் போற்றி

    செங்கையில் புத்தகம் சேர்த்தோய் போற்றி

    அங்கையில் படிகம் அடக்கியோய் போற்றி

    சமை குண்டிகைக்கைத் தாயே போற்றி

    அமைவுகொள் ஞான அருட்கையாய் போற்றி

    அஞ்சலென் றருள்தரும் அன்னே போற்றி

    மடமறு நான்முகன் வாழ்வே போற்றி

    திடமுறு செந்தமிழ்த் தெளிவே போற்றி

    கண்கண்ட தெய்வக் கண்மணி போற்றி

    பண்கண்ட பாவிற் படர்ந்தனை போற்றி

    தந்தையும் தாயுமாய்த் தழைப்போய் போற்றி

    மைந்தரோ டொக்கலாய் வளர்வோய் போற்றி

    நல்லோர் சொற்படி நடப்போய் போற்றி

    பல்லோர் பரவும் பனுவலோய் போற்றி

    மன்னரும் வணங்க வைப்போய் போற்றி

    உன்னரும் பெருமை உடையோய் போற்றி

    யாவர்க்கும் இசைந்த யாயே போற்றி

    பாவும் பொருளுமாய்ப் படர்வோய் போற்றி

    பூரப் பரிவரு பொற்கொடி போற்றி

    வார நெஞ்சினர் வழித்துணை போற்றி

    சிலம்பொலிச் சிற்றடித் திருவருள் போற்றி

    நலஉமை இடக்கணாம் நாயகி போற்றி

    வள்ளைக் கொடிச் செவி மானே போற்றி

    பிள்ளை மொழித் தமிழ்ப் பிராட்டி போற்றி

    அழகின் உருவ அணங்கே போற்றி

    பழகு தமிழின் பண்ணே போற்றி

    இளமை குன்றா ஏந்திழாய் போற்றி

    வளமை குளிர்மை மன்னினாய் போற்றி

    அறனும் பொருளும் அருள்வோய் போற்றி

    வறனறு இன்பம் மலிந்தோய் போற்றி

    சொன்ன கலைகளின் தொடர்பே போற்றி

    மன்னிய முத்தின் வயங்குவாய் போற்றி

    கம்பர்க் கருளிய கருத்தே போற்றி

    நம்பினோர்க் கின்பருள் நல்லோய் போற்றி

    காண்டகும் எண்ணெண் கலையாய் போற்றி

    வேண்டா வெண்மையை விலக்குவோய் போற்றி

    கிட்டற் கரிய கிளிமோழி போற்றி

    வெட்ட வெளியாம் விமலை போற்றி

    கீர்த்தியார் வாணியாம் கேடிலாய் போற்றி

    ஆர்திதியார் அன்பரின் அகத்தாய் போற்றி

    குமர குருபரர்க் குதவினோய் போற்றி

    அமரரும் வணங்கும் அம்மே போற்றி

    கூர்மையும் சீர்மையும் கொண்டோய் போற்றி

    ஆர்வலர் ஏத்த அருள்வோய் போற்றி

    கெடலரும் பாவின் கிழத்தி போற்றி

    விடலரும் அறிவின் வித்தே போற்றி

    கேள்வி கல்விக் கிழமையோய் போற்றி

    ஆள்வினை அருளும் அமிழ்தே போற்றி

    கையகப் கழுநிர்க் கலைமகள் போற்றி

    பொய்தீர் அருங்கலைப் பொருளே போற்றி

    கொண்டற் கூந்தற் கொம்பே போற்றி

    வண்டமிழ் வடமொழி வளனே போற்றி

    கோதில் பலமொழிக் குருந்தே போற்றி

    போதில் உறையும் பொன்னே போற்றி

    சங்கொத் தொளிர்நிறத் தாளே போற்றி

    அங்கண் அருள்நிறை அம்மா போற்றி

    சாதலும் பிறத்தலும் தவிர்ந்தோய் போற்றி

    போதலும் இருத்தலும் போக்கினோய் போற்றி

    சினமும் செற்றமும் தீர்ந்தோய் போற்றி

    மனமும் கடந்த மறை பொருள் போற்றி

    சீரார் சிந்தா தேவியே போற்றி

    ஏரார் செழுங்கலை இன்பே போற்றி

    சுடரே விளக்கே தூயாய் போற்றி

    இடரே களையும் இயல்பினாய் போற்றி

    சூழும் தொண்டரின் தொடர்பே போற்றி

    ஏழுறும் இசையின் இசைவே போற்றி

    செவ்விய முத்தமிழ்த் திறனே போற்றி

    ஒளவியம் அறுக்கும் அரசி போற்றி

    சேவடிச் செல்வம் அளிப்போய் போற்றி

    பாவடிப் பயனே படைத்தருள் போற்றி

    சைவம் தாங்கும் தனிக்கொடி போற்றி

    மையெலாம் போக்கும் மருந்தே போற்றி

    சொல்லோடு பொருளின் சுவையருள் போற்றி

    அல்லொடு பகலுன் அடைக்கலம் போற்றி

    சோர்விலா அறிவின் தொடர்பே போற்றி

    தீர்விலா நுண்கலைத் திறனே போற்றி

    தமிழ்க்கலை தமிழ்ச்சுவை தந்தருள் போற்றி

    தமிழ்மந் திரமொழித் தண்பயன் போற்றி

    தாயே நின்னருள் தந்தாய் போற்றி

    தாயே நின் திருவடி தொழுதனம் போற்றி

    திருவுடன் கல்வித் திறனருள் போற்றி

    இரு நிலத் தின்பம் எமக்கருள் போற்றி

    • ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க் கருள்வாய் போற்றி
    • ஓம் திருப்புக ழுடையாய் போற்றி

    ஓம் திருவே போற்றி

    ஓம் திருவளர் தாயே போற்றி

    ஓம் திருமாலின் தேவி போற்றி

    ஓம் திருவெலாம் தருவாய் போற்றி

    ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி

    ஓம் திருப்புக ழுடையாய் போற்றி

    ஓம் திருஞான வல்லி போற்றி

    ஓம் திருவருட் செல்வி போற்றி

    ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி

    ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி

    ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி

    ஓம் தீப சோதியே போற்றி

    ஓம் தீதெல்லாம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் தூப சோதியே போற்றி

    ஓம் துயரந்தீர்த் தருள்வாய் போற்றி

    ஓம் திருப்பாற் கடலாய் போற்றி

    ஓம் தருவழு தருள்வாய் போற்றி

    ஓம் அன்னையே அருளே போற்றி

    ஓம் அழகெலாம் உடையாய் போற்றி

    ஓம் அயன்பெறு தாயே போற்றி

    ஓம் அறுமுகன் மாமி போற்றி

    ஓம் அமரர்குல விளக்கே போற்றி

    ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி

    ஓம் அன்பருக் கினியாய் போற்றி

    ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி

    ஓம் ஆனந்த வல்லியே போற்றி

    ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி

    ஓம் ஆவிநல் வடிவே போற்றி

    ஓம் இச்சை கிரியை போற்றி

    ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி

    ஓம் இன்பப் பெருக்கே போற்றி

    ஓம் இகபர சுகமே போற்றி

    ஓம் ஈகையின் பொலிவே போற்றி

    ஓம் ஈறிலா அன்னை போற்றி

    ஓம் எண்குண வல்லி போற்றி

    ஓம் ஓங்கார சக்தி போற்றி

    ஓம் ஒளிமிகு தேவி போற்றி

    ஓம் கற்பக வல்லி போற்றி

    ஓம் காமரு தேவி போற்றி

    ஓம் கனக வல்லியே போற்றி

    ஓம் கருணாம்பிகையே போற்றி

    ஓம் குத்து விளக்கே போற்றி

    ஓம் குலமகள் தொழுவாய் போற்றி

    ஓம் மங்கல விளக்கே போற்றி

    ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி

    ஓம் தூங்காத விளக்கே போற்றி

    ஓம் தூயவர் தொழுவாய் போற்றி

    ஓம் பங்கச வல்லி போற்றி

    ஓம் பாவலர் பணிவாய் போற்றி

    ஓம் பொன்னி அம்மையே போற்றி

    ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி

    ஓம் நாரணன் நங்கையே போற்றி

    ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி

    ஓம் நவரத்தின மணியே போற்றி

    ஓம் நவநிதி நீயே போற்றி

    ஓம் அஷ்டலக்குமியே போற்றி

    ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி

    ஓம் ஆதிலட்சுமியே போற்றி

    ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி

    ஓம் கஜலட்சுமியே போற்றி

    ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி

    ஓம் தைரியலட்சுமியே போற்றி

    ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி

    ஓம் தனலட்சுமியே போற்றி

    ஓம் தனதானியம் தருவாய் போற்றி

    ஓம் விஜயலட்சுமியே போற்றி

    ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி

    ஓம் வரலட்சுமியே போற்றி

    ஓம் வரமெலாம் தருவாய் போற்றி

    ஓம் முத்துலட்சுமியே போற்றி

    ஓம் முத்தியை அருள்வாய் போற்றி

    ஓம் மூவேந்தர் தொழுவாய் போற்றி

    ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி

    ஓம் கண்ணேஎம் கருத்தே போற்றி

    ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி

    ஓம் விண்ணேஎம் விதியே போற்றி

    ஓம் விவேகம தருள்வாய் போற்றி

    ஓம் பொன்னேநன் மணியே போற்றி

    ஓம் போகம தருள்வாய் போற்றி

    ஓம் பூதேவி தாயே போற்றி

    ஓம் புகழெலாம் தருவாய் போற்றி

    ஓம் சீதேவி தாயே போற்றி

    ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி

    ஓம் மதிவதன வல்லி போற்றி

    ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி

    ஓம் நித்திய கல்யாணி போற்றி

    ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி

    ஓம் கமலக்கண்ணி போற்றி

    ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி

    ஓம் தாமரைத் தாளாய் போற்றி

    ஓம் தவநிலை அருள்வாய் போற்றி

    ஓம் கலைஞானச் செல்வி போற்றி

    ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி

    ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி

    ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி

    ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி

    ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி

    ஓம் வேதமல்லியே போற்றி

    ஓம் வேட்கை தணிப்பாய் போற்றி

    ஓம் பிறர்பொருள் கவர எண்ணாப் பெரியர்க் கருள்வாய் போற்றி

    ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி

    ஓம் அருண்இலக் குமியே போற்றி

    • ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
    • ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் அபிராமியே போற்றி

    ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி

    ஓம் அம்பிகையே போற்றி

    ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி

    ஓம் அன்பின் உருவே போற்றி

    ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி

    ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி

    ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஆற்றல் தருவாய் போற்றி

    ஓம் இமய வல்லியே போற்றி

    ஓம் இல்லறம் காப்பாய் போற்றி

    ஓம் இரு சுடர் ஒளியே போற்றி

    ஓம் இருளை நீக்குவாய் போற்றி

    ஓம் ஈசனின் பாதியே போற்றி

    ஓம் ஈஸ்வரியே போற்றி

    ஓம் உமையவளே போற்றி

    ஓம் உளைமான் கொண்டாய் போற்றி

    ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி

    ஓம் என் துணை இருப்பாய் போற்றி

    ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் எம்பிராட்டியே! போற்றி

    ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி

    ஓம் ஐமுகன் துணையே போற்றி

    ஓம் ஐயுறவு தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஒளிர்வு முகத்தவளே போற்றி

    ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் கங்காணியே போற்றி

    ஓம் காமாட்சியே போற்றி

    ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் கருணை ஊற்றே போற்றி

    ஓம் கற்பூர நாயகியே போற்றி

    ஓம் கற்பிற்கரசியே போற்றி

    ஓம் காம கலா ரூபிணியே போற்றி

    ஓம் கிரிசையே போற்றி

    ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி

    ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி

    ஓம் கூர்மதி தருவாய் போற்றி

    ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி

    ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி

    ஓம் குமரனின் தாயே! போற்றி

    ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி

    ஓம் கொற்றவையே! போற்றி

    ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி

    ஓம் கோமதியே! போற்றி

    ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி

    ஓம் சங்கரியே போற்றி

    ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி

    ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி

    ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி

    ஓம் சக்தி வடிவே! போற்றி

    ஓம் சாபம் களைவாய் போற்றி

    ஓம் சிம்ம வாகனமே! போற்றி

    ஓம் சீலம் தருவாய் போற்றி

    ஓம் சிறுநகை புரிபவளே போற்றி

    ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி

    ஓம் சுந்தர வடிவழகியே போற்றி

    ஓம் சுபீட்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் செங்கதிர் ஒளியே போற்றி

    ஓம் சேவடி பணிகிறேன் போற்றி

    ஓம் சோமியே! போற்றி

    ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி

    ஓம் தண்கதிர் முகத்தவனே போற்றி

    ஓம் தாயே! நீயே! போற்றி

    ஓம் திருவருள் புரிபவளே போற்றி

    ஓம் தீங்கினை ஒழிப்பாய் போற்றி

    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி

    ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி

    ஓம் திசையெட்டும் புகழ்கொண்டாய் போற்றி

    ஓம் தீரம் அளிப்பாய் போற்றி

    ஓம் துர்க்கையே! அம்மையே! போற்றி

    ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி

    ஓம் துணிவினைத் தருவாய் போற்றி

    ஓம் தூயமனம் தருவாய் போற்றி

    ஓம் நாராயணீயே! போற்றி

    ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி

    ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி

    ஓம் நீதியினைக் காப்பாய் போற்றி

    ஓம் பகவதியே! போற்றி

    ஓம் பவானியே போற்றி

    ஓம் பசுபதி நாயகியே போற்றி

    ஓம் பாக்கியம் தருவாய் போற்றி

    ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி

    ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி

    ஓம் புகழினை அளிப்பாய் போற்றி

    ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா! போற்றி

    ஓம் பொன் ஒளி முகத்தவளே போற்றி

    ஓம் போர் மடத்தை அளிப்பாய் போற்றி

    ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி

    ஓம் மாதங்கியே போற்றி

    ஓம் மலைமகளே போற்றி

    ஓம் மகமாயி தாயே போற்றி

    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

    ஓம் தவன் தங்கையே போற்றி

    ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி

    ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி

    ஓம் வேதவல்லியே! போற்றி

    ஓம் வையம் வாழ்விப்பாய்! போற்றி

    ஓம் ஜெயஜெய தேவியே! போற்றி

    ஓம் ஜெயங்கள் அளிப்பாய்! போற்றி

    ஓம் துர்க்கா தேவியே! போற்றி

    • ஓம் ஸ்ரீ நவராத்திரி நாயகிக்கு சுபமங்களம்
    • ஓம் ஸ்ரீநவசக்தி தேவிக்கு ஜெய்

    ஜோதி ஜோதி ஜோதி சுயம்

    ஜோதி ஜோதி ஜோதி பரம்

    ஜோதி ஜோதி ஜோதி அருள்

    ஜோதி ஜோதி ஜோதி சிவம்

    வாம ஜோதி! சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி

    மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி

    ஏமஜோதி யோக ஜோதி ஏறுஜோதி வீறு ஜோதி

    யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி

    ஆதி நீதி வேதனே! ஆடல் நீடு நாதனே!

    வாதி ஞான போதனே! வாழ்க! வாழ்க! வாழ்க! நாதனே!

    தென்னாடுடைய சிவனே போற்றி!

    எந்நாட்டவர்க்கும் இறைவி போற்றி!

    ஓம் ஆதி பராசக்தி ஜெய்

    ஓம் ஸ்ரீ நவராத்திரி நாயகிக்கு சுபமங்களம்

    கோவிந்தநாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா!

    ஓம் ஸ்ரீநவசக்தி தேவிக்கு ஜெய்

    ஓம் சக்தி ஆதிபராக்தியே சரணம்.

    ×