என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sanjay Gaikwad"
- சத்ரபதி சிவாஜியை ஆளுநர் குறைத்து மதிப்பிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
- வேறு எந்த பெரிய மனிதருடனும் சிவாஜியை ஒப்பிட முடியாது என எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்தார்
மும்பை:
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, சத்ரபதி சிவாஜியை பற்றி பேசியது சர்ச்சையானது. மகாராஷ்டிர மாநிலத்தின் அடையாளமான மன்னர் சத்ரபதி சிவாஜி அந்த காலத்து அடையாளச் சின்னம் என்றும், நிதின் கட்காரி நவீன காலத்து அடையாளச் சின்னம் என்றும் கூறினார்.
"நாம் பள்ளியில் படிக்கும் போது, ஆசிரியர் நமக்கு பிடித்த தலைவர் மற்றும் ஹீரோ பற்றி கேட்பார். சிலர் சுபாஷ் சந்திரபோஸ், நேரு, காந்தி என்று சொல்வார்கள். ஆனால் இங்கு யாராவது உங்களிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை, மகாராஷ்டிராவில் நீங்கள் அவர்களைக் காணலாம். சிவாஜி பழைய காலத்து அடையாளச் சின்னம், நான் புதிய சகாப்தம் பற்றி பேசுகிறேன். டாக்டர் அம்பேத்கர் முதல் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் அத்தகைய அடையாளச் சின்னத்தை காணலாம்" என்றார் ஆளுநர்.
சத்ரபதி சிவாஜியை பழைய அடையாளச் சின்னம் என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குறிப்பிட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியங்களுக்கு ஒருபோதும் வயது ஆகாது. அவரை உலகில் வேறு எந்த பெரிய மனிதருடனும் ஒப்பிட முடியாது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பாஜக தலைவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், மாநிலத்தின் வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி தெரியாத ஒருவரை (ஆளுநர்) வேறு எங்காவது அனுப்புங்கள்" என்று வலியுறுத்தினார்.
ஆளுநரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து மத்திய மந்திரி நிதின் கட்கரி, கூட்டணி கட்சியை சமாதானம் செய்யும் வகையில் தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறும்போது, சத்ரபதி சிவாஜி மகாராஜா எங்களுக்கு கடவுளை போன்றவர். பெற்றோருக்கும் மேலாக நாங்கள் அவருக்கு மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம், என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்