search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடல்"

    • மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.
    • செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!

    நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

    துர்க்கா தேவி

    ஓம் துர்க்காயை நம

    ஓம் மகா காள்யை நம

    ஓம் மங்களாயை நம

    ஓம் அம்பிகாயை நம

    ஓம் ஈஸ்வர்யை நம

    ஓம் சிவாயை நம

    ஓம் க்ஷமாயை நம

    ஓம் கௌமார்யை நம

    ஓம் உமாயை நம

    ஓம் மகாகௌர்யை நம

    ஓம் வைஷ்ணவ்யை நம

    ஓம் தயாயை நம

    ஓம் ஸ்கந்த மாத்ரே நம

    ஓம் ஜகன் மாத்ரே நம

    ஓம் மகிஷ மர்தின்யை நம

    ஓம் சிம்ஹ வாஹின்யை நம

    ஓம் மாகேஸ்வர்யை நம

    ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

    லெட்சுமி ஸ்ரீதேவி

    ஓம் மகாலக்ஷ்ம்யை நம

    ஓம் வரலெக்ஷ்ம்யை நம

    ஓம் இந்த்ராயை நம

    ஓம் சந்த்ரவதனாயை நம

    ஓம் சுந்தர்யை நம

    ஓம் சுபாயை நம

    ஓம் ரமாயை நம

    ஓம் ப்ரபாயை நம

    ஓம் பத்மாயை நம

    ஓம் பத்மப்ரியாயை நம

    ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம

    ஓம் சர்வ மங்களாயை நம

    ஓம் பீதாம்பரதாரிண்யை நம

    ஓம் அம்ருதாயை நம

    ஓம் ஹரிண்யை நம

    ஓம் ஹேமமாலின்யை நம

    ஓம் சுபப்ரதாயை நம

    ஓம் நாராயணப் பிரியாயை நம

    சரஸ்வதி தேவி

    ஓம் சரஸ்வத்யை நம

    ஓம் சாவித்ர்யை நம

    ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம

    ஓம் ஸ்வேதா நநாயை நம

    ஓம் ஸ§ரவந்திதாயை நம

    ஓம் வரப்ரதாயை நம

    ஓம் வாக்தேவ்யை நம

    ஓம் விமலாயை நம

    ஓம் வித்யாயை நம

    ஓம் ஹம்ஸ வாகனாயை நம

    ஓம் மகா பலாயை நம

    ஓம் புஸ்தகப்ருதே நம

    ஓம் பாஷா ரூபிண்யை நம

    ஓம் அக்ஷர ரூபிண்யை நம

    ஓம் கலாதராயை நம

    ஓம் சித்ரகந்தாயை நம

    ஓம் பாரத்யை நம

    ஓம் ஞானமுத்ராயை நம

    நவராத்திரி ஸ்லோகம்

    கிராவஹர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ

    ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!

    துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா

    மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

    பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும்,

    லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து

    உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு

    அம்பாள் (துர்க்கை)

    காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

    காசி விசாலாட்சி கருணாம்பிகையே!

    தருணம் இதுவே தயை புரிவாயம்மா!

    பொன் பொருள் எல்லாம்

    வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!

    ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்

    என் அன்னை நீயே அம்மா!

    மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!

    மங்கலத் தாயே நீ வருவாயே!

    என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!

    எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!

    பயிர்களில் உள்ள பசுமையில்

    கண்டேன் பரமேஸ்வரி உனையே!

    சரண் உனை அடைந்தேன்

    சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!

    அரண் எனக் காப்பாய்

    அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!

    லட்சுமி

    செல்வத் திருமகளே! மோகனவல்லியே!

    எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!

    எண் கரங்களில் சங்கு சக்கரம்

    வில்லும் அம்பும் தாமரை

    மின்னும் கரங்களில் நிறைகுடம்

    தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!

    வரத முத்திரை காட்டியே

    பொருள் வழங்கும் அன்னையே!

    சிரத்தினில் மணி மகுடம்

    தாங்கிடும் சிந்தாமணியே!

    பல வரம் வழங்கிடும் ரமாமணியே!

    வரதராஜ சிகாமணியே!

    தாயே! தனலட்சுமியே!

    சகல வளமும் தந்திடுவாய்

    சரஸ்வதி

    கலைவாணி நின் கருணை தேன்மழையே

    விளையாடும் என் நாவில் செந்தமிழே

    அலங்கார தேவதையே வனிதாமணி

    இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!

    மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்

    அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்

    ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்

    சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!

    வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்

    வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்

    வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

    நவராத்திரி பாடல்

    மங்கள ரூபிணி மதியளி சூலினி மன்மத பாணியளே

    சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே

    கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி

    கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்

    தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்

    மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே

    பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே

    எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்

    கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்

    பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே

    கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே

    சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே

    பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்

    கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்

    சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்

    படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.

    • அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.
    • சிவாச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேசுவரர் கோவிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக (வரலாற்று) திருவிழா நடைபெற்றது.

    வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலில் ரிக் யஜூர் சாம அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும் பின்னர் கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்ற தாகவும் பின்பு இங்கு வந்த திருநாவுக்கரச சுவாமிகளும், திருஞானசம்பந்த சுவாமிகளும் தேவார பதிகம் பாடி கதவு திறந்ததாக வரலாறு.

    அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.

    இந்த ஐதீக திருவிழா ஆண்டு தோறும் மாசிமக பெருவிழாவில் தமிழ் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைப்பெற்று வருகிறது.

    இதையெட்டி இந்த ஆண்டு நடைபெற்ற ஐதீக வரலாற்று திருவிழாவில் மகரதோரண வாயிலில் அப்பர் சம்மந்தர் எழுந்தருளினர்.

    பின்பு ஓதுவார் மூர்த்திகள் பரஞ்சோதி ஓதுவார் அப்பராகவும் ஓதுவார் வடுகநாததேசிகர் திருஞான சம்பந்தராகவும் உருவகப்படுத்தப்பட்டு தேவார தமிழ் பதிகம் பாடினர். ராஜேந்திரன் ஓதுவார் திருவிழாவின் வரலாறு பற்றி விளக்கி பேசினார்.

    அப்போது கோவில் கதவு வண்ண மலர்களால் அலகரிக்கப்பட்டு, கபாட பூஜை எனப்படும் திருக்கதவுக்கு சிவராஜா சிவச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்ப ட்டது.

    இந்நிகழ்ச்சியில்; வேதாரண்யம் விளக்கழகு என்பதற்குகேற்ப வேதாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதி முழுவதும் சரவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு அப்பர் சம்மந்தர் வீதியுலா காட்சியும் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் யாழ்பாணம் வரனிஆதினம் செவ்வந்தநாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் அறிவழகன், குருகுலம் அறங்காவலர்கள் கயிலைமணி வேதரெத்தினம் கேடிலியப்பன் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வேதபாராயணன் ஓதப்பட்டது.

    • நாகை மாவட்டத்தை பற்றிய பாடல் மக்களை வெகுவாய் கவர்ந்தது.
    • மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலாக வெளியிடப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக நாகை செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், ஓய்வு நேரங்களில் சமூக விழிப்புணர்வு பாடல்கள் பாடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதிலும், இவர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல், பொதுசுகாதாரத்துறை விழிப்புணர்வு பாடல், நாகை மாவட்டத்தை பற்றிய பாடல் மக்களை வெகுவாய் கவர்ந்தது.

    இந்நிலையில், மாவட்டம் சார்பில் நடைபெற்ற வாக்காளர் தின விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நாகை செல்வன் பாடிய பாடல் நாகை மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலாக வெளியிடப்பட்டது. அப்போது சமூக விழிப்புணர்வு பாடல் பாடி வருவதற்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் ரொக்க பரிசை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பாராட்டினார்.

    • கேது பகவானுக்கு உரிய பாடல் இது.
    • தினமும் இந்த பாடலை பாடினால் சோதனைகள் அகன்று சாதனைகளை நிகழ்த்த இயலும்.

    கேதுவிற்குரிய கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபடுவதன் மூலம் சோதனைகள் அகன்று சாதனைகளை நிகழ்த்த இயலும்.

    ஞானம் வழங்கும் நல்லதோர் கேதுவே!

    காணும் தொழில்களில் கனதனம் தருவாய்!

    அல்லியில் சிகப்பும், அழகு வைடூர்யமும்

    உள்ளம் மகிழ உந்தனுக் களிப்பார்!

    கொள்ளாம் தான்யம் குணமுடன் வழங்கினால்

    எல்லா நலங்களும் ஏற்றிடச் செய்வாய்!

    வல்லமை பெற்றிட வாழ்வில் சுகம்பெற

    நல்லவன் கேது நலமெலாம் தருக!

    • ஆலய மணிகள் ஒலிக்க, உன்னதங்களிலே ஓசானா பாடல் பாடப்பட்ட போது இயேசுநாதர்பிறந்தார்.
    • அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி வழங்கினார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பேராலயம் பூண்டி மாதா பேராலயம். பூலோகம் போற்றும் புதுமைமாதா என்று பக்தர்களால் அழைக்கப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் இயேசுநாதர் பிறந்தது குறிக்கும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

    கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.கிறிஸ்துமஸ் விழா நள்ளிரவு சிறப்பு திருப்பலி 11.45 மணிக்குதொடங்கியது. பேராலய மேடையில் பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் சிறப்பு திருப்பலியில் பங்கு கொண்டனர்.

    .சரியாக 12 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க, உன்னதங்களிலே ஓசானா பாடல் பாடப்பட்ட போது இயேசுநாதர்பிறந்தார் என்பதை அறிவிக்கும் விதமாக பேராலயஅதிபர் சாம்சன் குழந்தை இயேசு சுரூபத்தை உயர்த்தி காண்பித்தார். அதன் பின்னர் குழந்தை இயேசு சுரூபத்தை துணை அதிபர் பெற்று அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை இயேசு சுரூபத்தை வைத்து புனிதம் செய்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இயேசுநாதரின் சிறப்புகளையும் இயேசுநாதர் பிறப்பால் உலகம் பெற்ற நன்மைகளையும் பேராலய அதிபர் சாம்சன் திருப்பலியின் போது எடுத்துக் கூறி அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

    இன்று கிறிஸ்துமஸ் திருப்பலிகள் காலை, மதியம், மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது. இன்று நாள் முழுவதும் பூண்டி மாதா பேராலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து மாதாவை தரிசித்து அருள் தந்தையரிடம் ஆசி பெற்று சென்றனர். விழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் பேராலய நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பாடல் பாடியுள்ளார்.
    • பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    வேதாரண்யம்:

    பொதுசுகாதார த்துறை நூற்றாண்டு நிறைவ டைவதை தமிழகம் முழுவதும் அத் துறையினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில்தலை ஞாயிறு ஆரம்பசுகாதார நிலையத்தில்வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக பணியாற்றும் நாகை செல்வன் சமீபத்தில் ரஜினி நடித்த முரட்டுகாளை படத்தில் வரும் பொதுவாக எம் மனசு தங்கம் பாடல் வரிகளை மாற்றி அமைத்து பொது சுகாதாரத் துறையின் சேவைகளையும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம் பற்றியும் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார் .

    அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்பாடலை சிறப்பாக பாடியத்தற்காக நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை செல்வனை பாராட்டினார்.

    • குருவின் சந்நிதியில் மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம்.
    • குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.

    குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும். குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:

    "வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!

    உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!

    நிலையாய் தந்திட நேரினில் வருக!''

    "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!

    இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!

    உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!

    செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

    வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

    என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்''.

    • நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, இறையான்குடி, ஓட்டத்த ட்டை, நீடூர், தண்ணீலபாடி, உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக வயல்களை சீரமைத்தல், நாற்று விடுதல், உழவு பணி, நாற்றுப்பறித்தல். நடவு பணி மற்றும் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய பெண் தொழிலாளர்கள் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி உற்சாகமாக களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சோழவந்தானில் பட்டிமன்றம் நடைபெற்றது.
    • மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பது அன்றைய பாடல்களா? இன்றைய பாடல்களா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சி ஓட்டல் காபி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

    அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கடைவீதியில் கழுவேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குகசீலன் ரூபன் நடுவராக இருந்து இன்னிசை பட்டிமன்றம் நடத்தினார். மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பது அன்றைய பாடல்களா? இன்றைய பாடல்களா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது. தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க நிர்வாகி ஜவகர்லால் வரவேற்றார்.

    முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன் ,துணைத் தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ், செந்தில்வேல், குருசாமி, சிவா ஆகியோர் பேசினர். துணைத் தலைவர் சந்திரமோகன் நன்றி கூறினார்.

    ‘உன்னைக் காணாது’ என்ற பாடலை பாடி அனைவரையும் கவர்ந்து டிரெண்டிங் ஆன கூலித்தொழிலாளி ராகேஷ் உன்னி கமல்ஹாசனை சந்தித்து அவர் முன்னிலையிலும் பாடி அசத்தியுள்ளார். #ShankarMahadevan #RakeshUnni #Kamalhaasan

    விஸ்வரூபம் படத்தில் ஜிப்ரான் இசையில் பாடகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து கமல் பாடியிருந்த ‘உன்னைக் காணாது’ என்ற பாடலை தோட்டத்தில் அமர்ந்து கொண்டு சாதாரணமாக ஒருவர் பாடும் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலானது. 

    வைரலான இந்த வீடியோ ‌ஷங்கர் மகாதேவன் கவனத்துக்கும் சென்றுள்ளது. அதனைத் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ‌ஷங்கர் மகாதேவன் “இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது. கலாச்சாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது. யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இது குறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம்” என்று பதிவிட்டிருந்தார்.

    அந்த காந்தக்குரலோன் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த ராகேஷ் உன்னி என்பது தெரியவந்தது. ரப்பர் தோட்டத்தில் கூலித்தொழில் செய்யும் உன்னி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பாடலை பாடியதாக கூறியுள்ளார். இந்நிலையில், ராகேஷ் உன்னி மக்கள் நீதி மய்யம் தலௌவர் கமல்ஹாசனை இன்று சந்தித்துள்ளார்.

    அவர் முன்னிலையிலும் தனது குரல் வித்தையை ராகேஷ் உன்னி காட்ட, கமல்ஹாசன் நெகிழ்ந்து போனார். #Vishwaroopam #ShankarMahadevan  

    கமல்ஹாசன் முன்னிலையில் தனது திறமையை ராகேஷ் உன்னி வெளிப்படுத்திய காட்சியை காண..
    ×