என் மலர்
நீங்கள் தேடியது "tag 201658"
- சோழவந்தானில் பட்டிமன்றம் நடைபெற்றது.
- மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பது அன்றைய பாடல்களா? இன்றைய பாடல்களா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சி ஓட்டல் காபி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கடைவீதியில் கழுவேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குகசீலன் ரூபன் நடுவராக இருந்து இன்னிசை பட்டிமன்றம் நடத்தினார். மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பது அன்றைய பாடல்களா? இன்றைய பாடல்களா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது. தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க நிர்வாகி ஜவகர்லால் வரவேற்றார்.
முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன் ,துணைத் தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ், செந்தில்வேல், குருசாமி, சிவா ஆகியோர் பேசினர். துணைத் தலைவர் சந்திரமோகன் நன்றி கூறினார்.
- நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, இறையான்குடி, ஓட்டத்த ட்டை, நீடூர், தண்ணீலபாடி, உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வயல்களை சீரமைத்தல், நாற்று விடுதல், உழவு பணி, நாற்றுப்பறித்தல். நடவு பணி மற்றும் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய பெண் தொழிலாளர்கள் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி உற்சாகமாக களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






