search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைஞாயிறு சுகாதார ஆய்வாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கல்
    X

    நாகை செல்வனுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் ரொக்கப்பரிசு வழங்கினார்.

    தலைஞாயிறு சுகாதார ஆய்வாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கல்

    • நாகை மாவட்டத்தை பற்றிய பாடல் மக்களை வெகுவாய் கவர்ந்தது.
    • மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலாக வெளியிடப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக நாகை செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், ஓய்வு நேரங்களில் சமூக விழிப்புணர்வு பாடல்கள் பாடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதிலும், இவர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல், பொதுசுகாதாரத்துறை விழிப்புணர்வு பாடல், நாகை மாவட்டத்தை பற்றிய பாடல் மக்களை வெகுவாய் கவர்ந்தது.

    இந்நிலையில், மாவட்டம் சார்பில் நடைபெற்ற வாக்காளர் தின விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நாகை செல்வன் பாடிய பாடல் நாகை மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலாக வெளியிடப்பட்டது. அப்போது சமூக விழிப்புணர்வு பாடல் பாடி வருவதற்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் ரொக்க பரிசை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பாராட்டினார்.

    Next Story
    ×