search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஸ்வரூபம்"

    ‘உன்னைக் காணாது’ என்ற பாடலை பாடி அனைவரையும் கவர்ந்து டிரெண்டிங் ஆன கூலித்தொழிலாளி ராகேஷ் உன்னி கமல்ஹாசனை சந்தித்து அவர் முன்னிலையிலும் பாடி அசத்தியுள்ளார். #ShankarMahadevan #RakeshUnni #Kamalhaasan

    விஸ்வரூபம் படத்தில் ஜிப்ரான் இசையில் பாடகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து கமல் பாடியிருந்த ‘உன்னைக் காணாது’ என்ற பாடலை தோட்டத்தில் அமர்ந்து கொண்டு சாதாரணமாக ஒருவர் பாடும் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலானது. 

    வைரலான இந்த வீடியோ ‌ஷங்கர் மகாதேவன் கவனத்துக்கும் சென்றுள்ளது. அதனைத் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ‌ஷங்கர் மகாதேவன் “இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது. கலாச்சாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது. யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இது குறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம்” என்று பதிவிட்டிருந்தார்.

    அந்த காந்தக்குரலோன் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த ராகேஷ் உன்னி என்பது தெரியவந்தது. ரப்பர் தோட்டத்தில் கூலித்தொழில் செய்யும் உன்னி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பாடலை பாடியதாக கூறியுள்ளார். இந்நிலையில், ராகேஷ் உன்னி மக்கள் நீதி மய்யம் தலௌவர் கமல்ஹாசனை இன்று சந்தித்துள்ளார்.

    அவர் முன்னிலையிலும் தனது குரல் வித்தையை ராகேஷ் உன்னி காட்ட, கமல்ஹாசன் நெகிழ்ந்து போனார். #Vishwaroopam #ShankarMahadevan  

    கமல்ஹாசன் முன்னிலையில் தனது திறமையை ராகேஷ் உன்னி வெளிப்படுத்திய காட்சியை காண..
    ×