search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி"

    • சாதாரண கூட்டத்தில் 40 தீர்மானங்களும் அவசரக் கூட்டத்தில் 44 தீர்மானங்களும் மன்ற விவாதத்துக்கு வைக்கப்பட்டது.
    • ரூ. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணிகளுக்கு முறைப்படி டெண்டர் விட்டு மன்ற அனுமதி பெற வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை நகர்மன்ற கூட்டம் அலுவலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.முன்னதாக புதிதாக பதவி ஏற்ற நகராட்சி ஆணையாளருக்கு மன்றத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அத்துடன் மாவட்ட திட்டக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட 28-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ராமதாஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து நகர் மன்ற தலைவர் மத்தீன் உரையாற்றினார். இதையடுத்து சாதாரண கூட்டத்தில் 40 தீர்மானங்களும் அவசரக் கூட்டத்தில் 44 தீர்மானங்களும் மன்ற விவாதத்துக்கு வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மானங்கள் மீது விவாதம் தொடங்கியது. அப்போது நகர் மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

    குப்பை அள்ளும் வாகனங்கள் அதிக செலவில் வழங்கப்பட்டு உள்ளது.நமது ஊருக்கு உகந்த வாகனமாக இல்லை.அதற்கு பதிலாக 33 வார்டுகளில் பணிகள் மேற்கொள்வதற்கு அந்த பணத்தை பிரித்துக் கொடுத்து இருக்கலாம்.இதனால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி அடைந்திருக்கும்.அதே போன்று அண்ணா கலையரங்கம் கலைஞர் பூங்கா அமைக்க வேண்டும்.இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன் அடைவார்கள் என்று நகரச்செயலாளரும் 33 வது வார்டு உறுப்பினருமான சி.வேலுச்சாமி பேசினார்.

    இனி வருகின்ற காலங்களில் சந்தை ஏலம் புதிதாக விட வேண்டும்.அதிக அளவில் ஏலம் எடுப்பதற்கு ஆட்கள் உள்ளனர். அதை தவிர்த்து ஏலத்தை குறைவான அளவில் விடுவதால் இழப்பு ஏற்படுகிறது. ரூ. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணிகளுக்கு முறைப்படி டெண்டர் விட்டு மன்ற அனுமதி பெற வேண்டும். மேலும் 15 வருடங்களுக்கு மேற்பட்ட வணிக ரீதியான நகராட்சி வாகனங்களை உடைப்பதற்கு முன்னதாக அதன் ஆர்.சி., ரத்து செய்யப்பட வேண்டும். இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது நகராட்சி சார்பில் இழப்பீடு கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.மக்கள் வரி பணமும் மிச்சப்படுத்தப்படும். இதே போன்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நகர மன்ற உறுப்பினர்கள் பேசினர்.அதற்கு தீர்வு காணப்படும் என்று மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ்லியோன், நகர் மன்ற உறுப்பினர்கள் வின்சென்ட் ஜோசப், ஷாஜா தீ பர்வீன், ஆறுச்சாமி உள்ளிட்ட அலுவலக அதிகாரிகள் ,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • குண்டும், குழியுமான சாலையை சீரமைக்ககோரி நடந்தது
    • போராட்டத்தில் குழித்துறை நகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட் பட்ட 4-வது வார்டு இடைவளாகம் காலனி சாலை, இடவிளாகம்-சி.எஸ்.ஐ. சபை சாலை, மிட்டல், வள்ளி கோடு, அம்பலத்துவிளை ஆகிய சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி.பிரிவு மாநில துணை தலைவர் ஜோஸ்லால் தலைமையில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் குழித்துறை நகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    பூந்தமல்லி:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவேற்காடு நகராட்சியில் மக்களின் பங்களிப்போடு நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    என் குப்பை எனது பொறுப்பு (கழிவுகளை பிரித்தல்), நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்கு, மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியினை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்பது ஆகியவை குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்திட்டத்தின் படி சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசு பொருட்களை நகர் மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகர் மன்ற உறுப்பினர் இளங்கோவன், மேற்பார்வையாளர்கள், பரப்பு ரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
    • குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சி 27-வது வார்டு பகுதியில் உள்ள குண்டூர் ஏரி ரூ.3 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது. 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஏரிக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை முறையாக செலுத்தி 53 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சவுந்தர் ராஜன் முன்னிலை வகித்தார் கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க.கவுன்சிலர்கள் பானுப்பிரியா, சிந்தியா சுரேஷ், பவித்ரா சிவராஜன் சரிதாகுமார் ஆகியோர் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், ஆணையர் சவுந்தர்ராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.கவு ன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் நகராட்சி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    • நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுகிறது.
    • தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணிகள் சற்று தாமதமாக நடைபெறுகிறது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சி சாதாரணக்கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் பழையகோட்டை சாலை, கரூர் சாலை, திருப்பூர் சாலை, வாய்க்கால்மேடு, மூர்த்திரெட்டிபாளையம், குதிரைப்பள்ளம்சாலை, அகிலாண்டபுரம், கோட்டைமேடு, கார்த்திகைநகர், பாரதியார் வீதி, காந்திநகர், உடையார்காலனி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதால் அதனை சரி செய்யும் பணியை மேற்கொள்வது, குடிநீர் மின் மோட்டார் இயங்காமல் பழுது ஏற்பட்டு குடிநீர் வினியோகம் தடைபடுவதால் அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கலந்து கொண்ட நகராட்சி கவுன்சிலர்கள் வார்டு பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் போது அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் குடிநீர் விடுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், வீதி. வீதியாக பிரித்து விடவேண்டும் எனவும், வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சரியாக எடுக்க வருவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணிகள் சற்று தாமதமாக நடைபெறுவதால், தூய்மை பணி ஆட்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தெரிவித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
    • 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் ரோடுகளில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஸ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ,தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன் "ரோடு ஸ்வீப்பிங்" எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என கூறினர்.

    • பொதுமக்களுக்கு குப்பையை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் முன்னிலையில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    முதல்-அமைச்சர் உத்தரவின் படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் முதல் ஓராண்டு காலமாக ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வாரங்களில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனம், வியாபாரிகள், சமுதாய அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள் போன்றவர்களை பெரும் அளவில் மக்கள் இயக்கமாக பங்கேற்க செய்து இதன் மூலம் நகரின் பொது இடங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி முன்னிலையில், தன்னார்வ லர்களுக்கு குப்பையை தரம் பிரித்தல் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் மூலம் நகரின் பெரும் பகுதிகளில் பொதுமக்களுக்கு குப்பையை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நகரின் பொது இடங்களில் பெருமளவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் அப்புறபடு த்தப்பட்டது. மகளிர்குழுக்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் முன்னிலையில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தொடர்ந்து மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை வீடு வீடாக அழைத்து சென்று பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வழங்குவது குறித்து ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சேர்மன் உமா மகேஸ்வரி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது. மேற்கண்ட பணிகளை நகராட்சி ஆணையர் சபா நாயகம் தலைமையில் சுகா தார அலுவலர் பாலச்சந்தர் மற்றும் சுகாதார ஆய்வா ளர்கள் மாரிசாமி, வெங்கட ராமன், மாரிமுத்து மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணி யாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.

    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் நகராட்சியில் கடந்த ஆண்டு ஜூன் 3-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    அதன்படி ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மறைமலைநகர் நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நகராட்சி முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டு துப்புரவு பணி நடந்து வருகிறது.

    திடக்கழிவுகளை பிரித்து சேகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசக சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 6 நீர்நிலைகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு சுமார் 1026 மரக்கன்றுகள் நடப்பட்டது. நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.

    கட்டிட இடிபாடுகள் 160 டன் அகற்றப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியில் அன்றாடம் திடக்கழிவுகளை உரிய முறையில் பிரித்தளித்த இல்லத்தரசிகள் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் மறைமலை நகராட்சி பகுதியில் இன்று சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்றது.

    நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணிகள் நிகழ்ச்சியில் பொது மக்கள், வணிக நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    • காஞ்சிபுரம் நகராட்சி பகுதி வளர்ச்சித் திட்டத்திற்காக 17 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
    • 17 கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு பணிகளை துவங்கி உள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர பகுதியின் விரிவாக்கத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளும் அடங்கியுள்ளன.

    இந்த விரிவாக்க பகுதியில் வளர்ச்சியை கொண்டு வர சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் பல்வேறு திட்டங்கள் உள்ளது.

    இந்த பகுதிகளில் அனைத்து துறை வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதற்கு சாலைகள், பாலங்கள், பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு வசதிகள், விளையாட்டு மைதானம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூ.32 கோடி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.35 கோடி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.25 கோடி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரூ. 8 கோடி என நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் செங்கல்பட்டு புதுநகர் வளர்ச்சிக்கான பகுதியானது 136.25 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட 60 கிராமங்களை உள்ளடக்கியதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முடிச்சூர் கிராமத்தின் அமுதம் நகர், நேமி நத்தம் நகர் மற்றும் வரதராஜ பெருமாள் நகர் பகுதிகளுக்கு மழை நீர் வடிகால் அமைக்க ரூ.4.20 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் நகரத்திற்கான விரிவான மேம்பாட்டுத் திட்டமும் இப்போது தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள வசதிகளை போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 17 கிராமங்கள் உட்பட 65 கிராமங்களை இணைத்து 2 செயற்கை கோள் நகரங்களை உருவாக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது .

    இதற்காக நகராட்சி துறை சார்பில் திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கான சென்னை பெருநகரப் பகுதிக்கான நகர மேம்பாட்டுத் திட்டம் வரைவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

    இது சம்பந்தமாக, முக்கிய பகுதியின் பாரம்பரியம் மற்றும் மறுமேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு விரிவான மேம்பாட்டுத் திட்டமும், என்.எச்-48 ஐ ஒட்டிய கிராமங்களை மையமாகக் கொண்ட புதிய நகர மேம்பாட்டுத் திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் நகராட்சி பகுதி வளர்ச்சித் திட்டத்திற்காக 17 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    அதன்படி, 36.14 சதுர கிலோ மீட்டர் அளவில் வையாவூர், கலையானூர், புத்தேரி, மெலம்பி, கிளம்பி, சித்தேரிமேடு, கோனேரிக் குப்பம், திம்மசமுத்தி ரம், அச்சுக்கட்டு, நெட்டேரி உள்ளிட்ட 17 கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு பணிகளை துவங்கி உள்ளது.

    • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.
    • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலெக்டர் பாலசுப்ரமணியம், எம்.எல்.ஏ க்கள் அய்யப்பன், சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்  இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சியில் கறையேறவிட்டகுப்பத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் திட்டம், வண்டிப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் பகுதியில் குளங்கள் அமைத்தல், கடற்கரை சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கும் பணிக்கான கட்டிடம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு நிர்ணயித்த காலத்திற்குள் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.  அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நகராட்சி நிர்வாக துறை) ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக துறை வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி,அய்யப்பன் எம்.எல். ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாநகராட்சி பொறியாளர் மகாதேவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஹேமலதா சுந்தரமூர்த்தி, பார்வதி, சக்திவேல், சசிகலா ஜெயசீலன், சாய்துனிஷா சலீம், விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சுதா அரங்கநாதன், ஆராமுது, கவிதா ரகு, பாலசுந்தர், செந்தில் குமாரி, மாநகர அவை தலைவர் பழனிவேல், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பகுதி துணை செயலாளர்கள் கார் வெங்கடேசன், ஜெயசீலன், லெனின் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    குமாரபாளையம் நகராட்சி கமிஷனருக்கு மிரட்டல் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது போலீசில் புகார் செய்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி கமிஷனராக விஜயகுமார் உள்ளார். இவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமாரபாளையம் நகராட்சியின் 30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி நகராட்சி அலுவலகத்திற்குள் எனது அறையில் அத்துமீறி உள்ளே நுழைந்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு அனுமதி வழங்குமாறு தெரிவித்தார்.

    அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததினால் தகாத வார்த்தைகளால் பேசியும், உன்னை என்ன செய்கிறேன் பார் என்றும் எனக்கு மிரட்டும் வகையில் பேசினார்.

    எனவே கவுன்சிலர் பாலசுப்ரமணி மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அ.தி.மு.க. கவுன்சிலர் மீது நகராட்சி கமிசனர் புகார் அளித்த சம்பவம் குமாரபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
    • பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி மற்றும் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    ஆய்வு குறித்து அவர் கூறியதாவது:-

    சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் சென்றடைய நகர்ப்புற பகுதிகளில் நிலையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும். மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கடமையாகும்.

    நகர்ப்புற வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ தகுதியான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அரசு தற்போது பல்வேறு கொள்கைகளை வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு உட்கட்டமைப்பு வளர்ச்சிகள் மேற்கொள்வது உள்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    காங்கயம் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியே 66 லட்சம் மதிப்பிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்தில் நடைபெற்று வரும் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகள், வெள்ளகோவில் நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 81 லட்சத்தில் நடைபெற்று வரும் வாரச்சந்தை மேம்படுத்தும் பணிகள், உப்புப்பாளையத்தில் ரூ.30 லட்சத்தில் குளம் சீரமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் பூங்கா அமைக்கும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் தாராபுரம் நகராட்சி, உடுமலை நகராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர்கள் மோகன்குமார் (வெள்ளகோவில்), வெங்கடேசன் (காங்கயம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×