search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன எந்திரம்"

    • நவீன எந்திரம் மூலம் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 60-க்கும் மேற்பட்ட ஊழியர் கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2,345 மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை பேருந்து பாலம் அமைக்கப் பட்டுள்ளது.

    கடலின் அழகை ரசித்த வாறு தின மும் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணி கள் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பயணித்து அனுபவித்து வருகிறார்கள்.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாம்பன் பேருந்து பாலம் பரமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் பாம்பன் பேருந்து பாலத்திற்கு ரசா யன வர்ணம் பூசுவது, இரு புறம் உள்ள நடைமேடை இணைப்புகள் சீரமைப்பு, சேதமடைந்த தடுப்பு சுவர் கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

    இதில் புயல், மழை மற்றும் இயற்கை இடர்பாடு கள் தவிர்த்து மற்ற நாட்க ளில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. தற்போது செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண் டும் என்பதால் நவீன எந்தி ரம் மூலம் ரசாயன வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதில், 60-க்கும் மேற்பட்ட ஊழியர் கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
    • 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் ரோடுகளில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஸ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ,தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன் "ரோடு ஸ்வீப்பிங்" எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என கூறினர்.

    • 80 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
    • 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் 80 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் சாலைகளில் உள்ள குப்பை, கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஷ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறு சுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன், ரோடு ஸ்வீப்பிங் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என்றனர் .

    • மாநகராட்சியில் 60 வார்டுகளில் லட்சக்கணக்கான குடியிருப்புகள், தொழிற்சாலை, வர்த்தக கட்டடங்கள் உள்ளன.
    • பிரதான ரோடுகள், முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை திட்டம் ஆகியன உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் லட்சக்கணக்கான குடியிருப்புகள், தொழிற்சாலை, வர்த்தக கட்டடங்கள் உள்ளன. பிரதான ரோடுகள், முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை திட்டம் ஆகியன உள்ளன. இருப்பினும் நீண்ட காலம் முன்னர் அமைந்த குடியிருப்புகளில் உரிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது. பிரதான ரோடுகள், ெரயில்வே பாலங்கள் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி அவதி ஏற்படுவதும், நீண்ட காலமாக தூர் வாராமல் உரிய பராமரிப்பில்லாத கால்வாய்களில் மழை நாட்களில் மழை நீர் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வதும் வாடிக்கையாக உள்ளது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தேங்கி கிடந்த மண் மற்றும் திடக்கழிவுகள் அகற்றிய நிலையில், கழிவு நீர் முறையாக கடந்து செல்ல வழி ஏற்பட்டுள்ளது.

    நகரின் மையமாக உள்ள நொய்யல் ஆறு மற்றும் இதில் சேரும் கிளை ஓடை, பள்ளம் மற்றும் வாய்க்கால்கள் நீர் வடிப் பகுதியாக உள்ளன. இவற்றின் கரைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக மழையின் போது மழை நீர் முறையாக செல்லாமல் அருகேயுள்ள குடியிருப்புகள், கட்டடங்களில் புகுவதும், ரோட்டில் சென்று பாய்வதும் பெரும் அவதியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது நீர் பாயத் தடையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த காலங்கள் போல் மழை பாதிப்புகள் ஏற்படாத வகையில், மாநகராட்சி நிர்வாகம் தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    நகரைக் கடந்து செல்லும் ஏறத்தாழ 7 கி.மீ., நீளமுள்ள நொய்யல் ஆறு தூர் வாரும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளது. இதில் வந்து சேரும் ஓடைகள், நல்லாறு, பள்ளம், வாய்க்கால் அனைத்தும் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதில் பொக்லைன் வாகனங்கள், செயின் டோசர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணி முழுமையடையும் நிலையில் உள்ளது.

    நகரில் பெரும் சவாலாக இருந்து வரும் கழிவு நீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி துரிதமாக நடக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிரந்தர கான்கிரீட் மூடிய நிலையில் உள்ளதால் அவற்றில் திடக்கழிவு அகற்றும் பணிக்கு முன்னுரிமை அளித்து பணி நடக்கிறது. இதில் நவீன ஸ்லிட்டிங் எந்திரங்கள்,ரீசைக்ளர் எந்திரம் ஒன்றும் சோதனை அடிப்படையில் களம் இறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 9 டன் எடையுள்ள திடக்கழிவு அகற்றப்பட்டுள்ளது.

    மழையின் போது அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளாக 2,4,7,8,47 மற்றும் 58 ஆகிய வார்டுகளில் மொத்தம் 29 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்றும் வகையில் ஜெனரேட்டர் வசதியுடன் பம்பிங் மோட்டார் தயார் நிலையில் உள்ளது. இது தவிர 8 ஜெட் ராடு வாகனங்கள், 5 ஸ்லிட்டிங் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 4 ஆட்டோக்களில் இது போல் பம்பிங் மோட்டார் அமைப்புடன் தயாராக உள்ளது. வேறு பகுதிகளில் தேவை ஏற்பட்டால் அவை அங்கு சென்று பயன்படுத்தப்படும். வார்டுவாரியாக மாநகராட்சி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

    சுகாதாரப் பிரிவைப் பொறுத்தவரை வார்டு வாரியாக காய்ச்சல் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. உரிய மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் பகுதி வாரியாக 3 நாளுக்கு ஒருமுறை சென்று கொசு மருந்து தெளித்தல், கொசுப்புழு ஒழித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடப்பு பருவ மழையின் பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், ஏதும் இருப்பின் அதை எதிர்கொள்ளும் வகையிலும் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நீர் தேங்காத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.மைய அலுவலகத்தை, 155304 என்ற டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் இருப்பின் புகார் தெரிவிக்கலாம் என்றார். 

    • 50 நிறுவனங்களை ஒருங்கிணைத்து அப்பேரல் கிளஸ்டர் என்கிற பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.
    • வெளிநாடுகளிலிருந்து அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    திருப்பூர் :

    திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை ரகங்களை அவற்றில் இடம் பெறும் பிரின்டிங், மதிப்பு கூட்டுகிறது. இத்தகைய பிரின்டிங் துறையை வளர்ச்சி பெறச்செய்வதற்காக 50 நிறுவனங்களை ஒருங்கிணைத்து அப்பேரல் கிளஸ்டர் என்கிற பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது தொழில் பாதுகாப்புக்குழு.

    பழவஞ்சிபாளையத்தில் ரூ. 16.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஜூலை மாதம் கிளாஸ் பிரின்ட், கியூரிங் எந்திரங்கள் வந்திறங்கின.இரண்டாம் கட்டமாக துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ரவுண்ட் கரோசல் பிரின்டிங் எந்திரங்கள் திருப்பூருக்கு வந்து சேர்ந்தன.

    பர்ன் அவுட், ஹீட் டிரான்ஸ்பர், 3டி பிரின்ட், ஷிம்மர், ரேடியம் பிரன்ட், எம்போசிங், லெதர் கோட்டிங், டை அண்டு டை, பிளாட்ச் உட்பட 27 வகை பிரின்டிங் செய்யமுடியும். பிரின்டிங் நிறுவனங்களின் திறன்மிக்க தொழிலாளரை பணி அமர்த்துவதற்காக பொது பயன்பாட்டு மையத்தில் பயிற்சி மையம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தற்போது வந்துள்ள ரவுண்ட் கிரோசல் எந்திரம் தொழிலாளர்களுக்கு பிரின்டிங் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட உள்ளதாக தொழில் பாதுகாப்புக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.விரைவில் பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த எந்திரம் சோதனை ஓட்டத்தை துவக்க உள்ளது.

    ×