search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleanliness worker"

    • பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    பூந்தமல்லி:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவேற்காடு நகராட்சியில் மக்களின் பங்களிப்போடு நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    என் குப்பை எனது பொறுப்பு (கழிவுகளை பிரித்தல்), நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்கு, மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியினை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்பது ஆகியவை குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்திட்டத்தின் படி சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசு பொருட்களை நகர் மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகர் மன்ற உறுப்பினர் இளங்கோவன், மேற்பார்வையாளர்கள், பரப்பு ரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகிறார்கள்.
    • வரும் 26-ந் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் தினமும் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 1200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தினக்கூலியாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் 500-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதை கைவிட வேண்டும். அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

    குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.725 ஏப்ரல் முதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கம் சார்பில் ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

    கடந்த 7-ந் தேதி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பின்னர் கடந்த 7-ந் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 12-ந் தேதி 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் மாநகராட்சி சார்பில் யாரும் பங்கேற்க வில்லை. இதையடுத்து வரும் 26-ந் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை முதலே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, செயலாளர் மணியன், சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சுப்பு, சங்கச்செயலாளர் மாணிக்கம், எல்.பி.எப். செயலாளர் கிருஷ்ணன், ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை மாரியப்பன், சுய உதவிக் குழு பணியாளர் சங்கம் லெனின் கதிரவன் உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றுள்ளனர்.

    இதில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கி உள்ளன.

    மாநகராட்சி பகுதியில் தினமும் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இன்று தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஒரு சில நிரந்தர பணியாளர்கள் மட்டும் குப்பைகளை அள்ளி சென்றனர். இதனால் மாநகர் பகுதியில் 150 டன் குப்பைகள் தேங்கியுள்ளன.

    ×