search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மைக்கான மக்கள் இயக்கம்"

    • நிகழ்ச்சியின்போது நீர் நிலைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டையில் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் அறிவுறுத்தலின் பேரில் கமிஷனர் உத்தரவின்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் கூட்டு துப்புரவு பணி, நீர் நிலைகளை சுத்தம் செய்தல், கட்டிட இடிபாடு கழிவுகளை அகற்றுதல், அனுமதி இன்றி வைக்கபட்ட பேனர்கள், போஸ்டர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் தூய்மை இயக்க உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

    • ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.

    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் நகராட்சியில் கடந்த ஆண்டு ஜூன் 3-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    அதன்படி ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மறைமலைநகர் நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நகராட்சி முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டு துப்புரவு பணி நடந்து வருகிறது.

    திடக்கழிவுகளை பிரித்து சேகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசக சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 6 நீர்நிலைகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு சுமார் 1026 மரக்கன்றுகள் நடப்பட்டது. நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.

    கட்டிட இடிபாடுகள் 160 டன் அகற்றப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியில் அன்றாடம் திடக்கழிவுகளை உரிய முறையில் பிரித்தளித்த இல்லத்தரசிகள் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் மறைமலை நகராட்சி பகுதியில் இன்று சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்றது.

    நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணிகள் நிகழ்ச்சியில் பொது மக்கள், வணிக நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    • வாரந்தோறும் சனிக்கிழமை தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம், என் குப்பை - என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    • மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம், என் குப்பை - என் பொறுப்பு என்ற தலைப்பில் பல்வேறு வகையில் தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த இயக்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.

    முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட மற்றும் வட்டக்கல்வி அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதில் அறிவுறுத்தப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:-

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி ஏற்பு நடத்த வேண்டும். தூய்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது தொடர்பான தலைப்பு களில் போட்டிகள் நடத்த வேண்டும்.பள்ளி வளாகம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறத்தின் தூய்மை பாதுகாக்கும் வகையில் மாணவர்கள் செயல்பட அறிவுறுத்த வேண்டும். தூய்மை இயக்கம் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நடத்த மாநகராட்சி சுகாதார பிரிவினர் தயாராக உள்ளனர். கல்வி நிறுவனங்கள் அதைப் பயன்படுத்தி, மாணவர்கள் மத்தியில் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக கொண்டு சேர்க்க ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    ×