search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நகராட்சி கூட்டம்
    X

    உடுமலை நகராட்சி கூட்டம் தலைவர் மத்தீன் தலைமையில் நடைபெற்ற காட்சி.

    உடுமலை நகராட்சி கூட்டம்

    • சாதாரண கூட்டத்தில் 40 தீர்மானங்களும் அவசரக் கூட்டத்தில் 44 தீர்மானங்களும் மன்ற விவாதத்துக்கு வைக்கப்பட்டது.
    • ரூ. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணிகளுக்கு முறைப்படி டெண்டர் விட்டு மன்ற அனுமதி பெற வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை நகர்மன்ற கூட்டம் அலுவலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.முன்னதாக புதிதாக பதவி ஏற்ற நகராட்சி ஆணையாளருக்கு மன்றத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அத்துடன் மாவட்ட திட்டக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட 28-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ராமதாஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து நகர் மன்ற தலைவர் மத்தீன் உரையாற்றினார். இதையடுத்து சாதாரண கூட்டத்தில் 40 தீர்மானங்களும் அவசரக் கூட்டத்தில் 44 தீர்மானங்களும் மன்ற விவாதத்துக்கு வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மானங்கள் மீது விவாதம் தொடங்கியது. அப்போது நகர் மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

    குப்பை அள்ளும் வாகனங்கள் அதிக செலவில் வழங்கப்பட்டு உள்ளது.நமது ஊருக்கு உகந்த வாகனமாக இல்லை.அதற்கு பதிலாக 33 வார்டுகளில் பணிகள் மேற்கொள்வதற்கு அந்த பணத்தை பிரித்துக் கொடுத்து இருக்கலாம்.இதனால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி அடைந்திருக்கும்.அதே போன்று அண்ணா கலையரங்கம் கலைஞர் பூங்கா அமைக்க வேண்டும்.இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன் அடைவார்கள் என்று நகரச்செயலாளரும் 33 வது வார்டு உறுப்பினருமான சி.வேலுச்சாமி பேசினார்.

    இனி வருகின்ற காலங்களில் சந்தை ஏலம் புதிதாக விட வேண்டும்.அதிக அளவில் ஏலம் எடுப்பதற்கு ஆட்கள் உள்ளனர். அதை தவிர்த்து ஏலத்தை குறைவான அளவில் விடுவதால் இழப்பு ஏற்படுகிறது. ரூ. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணிகளுக்கு முறைப்படி டெண்டர் விட்டு மன்ற அனுமதி பெற வேண்டும். மேலும் 15 வருடங்களுக்கு மேற்பட்ட வணிக ரீதியான நகராட்சி வாகனங்களை உடைப்பதற்கு முன்னதாக அதன் ஆர்.சி., ரத்து செய்யப்பட வேண்டும். இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது நகராட்சி சார்பில் இழப்பீடு கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.மக்கள் வரி பணமும் மிச்சப்படுத்தப்படும். இதே போன்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நகர மன்ற உறுப்பினர்கள் பேசினர்.அதற்கு தீர்வு காணப்படும் என்று மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ்லியோன், நகர் மன்ற உறுப்பினர்கள் வின்சென்ட் ஜோசப், ஷாஜா தீ பர்வீன், ஆறுச்சாமி உள்ளிட்ட அலுவலக அதிகாரிகள் ,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×