search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜா எம்.எல்.ஏ."

    • அச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.
    • மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல இலந்தை குளம், மூவிருந்தாளி, அச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.

    இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொது மக்களுக்கு நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ராஜா எம்.எல்.ஏ. அரசின் மூலம் வழங்கப் படும் உதவிகள் அனைத்தும் விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய படும் என தெரிவித்தார். அதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள் வெற்றி விஜயன், பெரியதுரை, மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், அச்சம்பட்டி ஊராட்சி தலைவர் அல்லி துரை சண்முகதாய், மூவிருந்தாளி ஊராட்சி தலைவர் வெள்ள பாண்டியன், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் வீமராஜ், மாவட்ட பொறி யாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன், மூவிருந்தாளி கிளை செயலாளர் ஜோசப், மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. மாணவர் அணி கருத்தரங்கில் பங்கேற்க தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.
    • சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த ஆ.ராசா எம்.பி.க்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி கருத்தரங்கில் பங்கேற்க தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த ஆ.ராசா எம்.பி.க்கு தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்த ஆ.ராசா எம்.பி.க்கு வீரவாள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூ.எஸ்.டி. சீனிவாசன், பரம குரு, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துச் செல்வி, மாநில மருத்துவர் அணி துணை செய லாளர் செண்பகவிநாயகம், மாவட்ட அவை தலைவர் பத்மநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், தேவதாஸ், சாகுல் ஹமீது, மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, ஒன்றிய செய லாளர்கள் லாலாசங்கர பாண்டியன், பொன்.முத்தையா பாண்டியன், கடற்கரை, பூசைப்பாண்டி யன், சேர்மதுரை, வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன்,

    மதிமாரிமுத்து, நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பேரூர் செயலாளர்கள் குரு, ருபி பாலசுப்ரமணியம், மாரி முத்து, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் முகேஷ் உதயகுமார், வக்கீல் பிச்சையா, கே.எஸ்.எஸ். மாரியப்பன், கிப்ட்சன், சிவசங்கரி, அப்பாஸ் அலி, விஜயா சவுந்தரபாண்டியன், மாடசாமி, பிரேம்குமார்,

    பசுபதி பாண்டியன், நாகூர்கனி, மணிகண்டன், சரவணன், சேதுராமன், அமிதாப், சாமுவேல், அழகு துரை மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பா ளர்கள் கார்த்திக், சரவணன் அன்சாரி, ராஜ், மணிகண்டன் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்க வேண்டும்.
    • அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    அவரது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சங்கரன்கோவிலில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் முழு நேர உணவு வழங்குதல், வாசுதேவநல்லூரில் உள்ள சிறப்பு இல்லத்தில் முழு நேர உணவு வழங்குதல், வடக்கு மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் மற்றும் குழந்தைகள் காப்பு பெட்டகம் வழங்குதல்,

    வடக்கு மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு சீருடை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.

    மேலும் பிறந்தநாள் அன்று ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இளைஞர் அணி சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியின் பங்கு குறித்து தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணியினர் அந்தந்த பகுதிகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
    • கையெழுத்து இயக்கத்தை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    மாணவ-மாணவிகளின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    தென்காசி வடக்கு மாவட்ட சிறுபான்மை உரிமை நல அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான ஆயுதம் கையெழுத்திட்ட அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட அமைப்பா ளர் நாகூர் கனி, மாவட்ட தலைவர் மரியலூஸ் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நீட் எதிர்ப்பு கையெழுத்து பெற்ற 1,000 அட்டைகளை சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் வழங்கினர்.

    தொடர்ந்து தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்டம் சார்பாக கையெழுத்து இயக்கத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் பத்ம நாபன், நகர செயலாளர் பிரகாஷ், சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட துணைத் தலைவர் ஞானையா எழிலன், மாவட்ட துணை அமைப்பா ளர்கள் பாதுஷா, அப்துல் காதர், திவான் அலி, பாண்டித்துரை, மைதீன் கனி, அப்துல் ஜாபர், மாவட்ட விளையாட்டு மேம் பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் தொ.மு.ச. மகாராஜன், கேபிள் கணேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 36 கிராம சேனைத்தலைவர் பள்ளியில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான தங்கவேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் 36 கிராம சேனைத்தலைவர் பள்ளியில் பூத் எண் 16-ல் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடைபெற்றது. அதனை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    அப்போது சங்கரன்கோவில் நகர பூத் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான தங்கவேலு, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், வார்டு செயலாளர் கோமதிநாயகம், பூத் பொறுப்பாளர்கள் சங்கரமகாலிங்கம், மாரியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ராஜா எம்.எல்.ஏ. ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன், ஆசிரியர் சாமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு பனவடலி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஏசுதாஸ், கூட்டுறவு சங்க தனி அலுவலர் செல்வகணேஷ் மற்றும் சுரேஷ் பனவடலிசத்திரம் கூட்டுறவு சங்க செயலாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன், ஆசிரியர் சாமியா, ராசா, வெளியப்பன், கருப்பசாமி, ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வட்டார வளமையத்தின் சார்பில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    மேலும், முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நடைபயிற்சி உபகரணங்கள் (வாக்கர்), தேசிய அடையாள அட்டை போன்ற நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துசெல்வி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்தராஜ் பாக்கியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் நோக்க உரை ஆற்றினார். கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தெய்வபிரியா வாழ்த்தி பேசினார். முகாமில் மனநல மருத்துவர் தேவிபிரபா கல்யாணி, காது மூக்கு தொண்டை மருத்துவர் ஜெயலட்சுமி, கண் மருத்துவர் முகமது அப்துல்லா, எலும்பு முறிவு மருத்துவர் விஸ்வநாத் பிரதாப்சிங் ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர்.

    தகுதியான குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்கள் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், காது கேட்கும் கருவி, ஸ்மார்ட் கார்ட், ரெயில் பாஸ், பஸ் பாஸ், மாதாந்திர உதவி தொகை, பெற்றோர்களுக்கு தையல் எந்திரம், வீல் சேர், கேலிபர், ட்ரை சைக்கிள் போன்ற உபகரணங்கள் வழங்குவதற்கு தகுதியான குழந்தைகள் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி, தகவல் தொழில்நுட்ப அணி ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பாசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • தேவர் சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் உருவ சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணி சாமி, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் மருதப்பன், மாவட்ட மருத்துவர் அணி மணிகண்டன், நல்லசிவம், கார்த்திக், வீரமணி, தங்கராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் மருது பாண்டியன், துணை செயலாளர் முனியாண்டி, முத்தையா, வீரமணி, வார்டு கவுன்சிலர்கள் ரத்தினராஜ், முத்துலட்சுமி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவர்கள் கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ராஜா எம்.எல்.ஏ.விடம் வலியுறுத்தினர்.
    • மக்களுக்கு மருத்துவ சிகிச்சை எந்த வித குறையும் இல்லாமல் நடக்க வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சுகாதார வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் இங்கு கழிவு நீர் கால்வாய் வசதி, ஜெனரேட்டர் எந்திரம் மழையில் நனையாமல் இருக்க செட் அமைத்து தர வேண்டும், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு ராஜா எம்.எல்.ஏ. அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும், மேலும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை எந்த வித குறையும் இல்லாமல் நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது தலைமை மருத்துவர் கிருஷ்ணவேணி மருத்துவர்கள் வேலம்மாள், பெப்சீர், நகராட்சி கமிஷனர் சபா நாயகம், சுகாதார ஆய்வாளர் மாரிசாமி, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், ஜெயகுமார், வீரா, சங்கர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • திருவேங்கடம் தாலுகாவில் பட்டா இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டி 2 நாள் முகாம் நடந்தது.
    • ஏழை, எளிய மக்களுக்கும் பட்டா கிடைக்க செய்யும் படி ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு திருவேங்கடம் தாலுகாவில் பட்டா இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டி 2 நாள் முகாம் நடந்தது. முகாமில் மலையாங்குளம் அரபாத் நகரில் மனைகள் வாங்கியுள்ள இஸ்லாமிய மக்கள் 300 பேருக்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். மனு வழங்கிய அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் பட்டா கிடைக்க செய்யும் படி அரபாத் நகர் வளர்ச்சி குழுவினர் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட ராஜா எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ் அலி, அரபாத் நகர் வளர்ச்சி குழுவை சேர்ந்த அப்துல்ரசாக், சபியுல்லா ஜாபர், அப்துல் ரஹ்மான்இல்லியாஸ், காஜாமைதீன்செய்யது அலி மற்றும் தி.மு.க. 20-வார்டு பிரதிநிதி ஹசன் இப்ராஹிம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மின்சார ரெயிலின் டிரைவருக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. , தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    செங்கோட்டை- நெல்லை இடையே முழு நேர மின்சார என்ஜின் கொண்ட ரெயில் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இந்த ரெயிலுக்கு தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவரும், தென்காசி ரெயில் பயணிகள் நல சங்க தலைவருமான வெங்கடேஷ்வரன் தலைமையில் தென்காசி ரெயில் நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    அப்போது மின்சார ரெயிலின் டிரைவருக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்து ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. , தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா, தென்காசி நகர் மன்ற துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா, தென்காசி நகர ம.தி.மு.க. செயலாளர் கார்த்திக், ரெயில் பணிகள் நல சங்கத் துணைச் செயலாளர் ஆனந்தபவன் காதர் மைதீன், தென்காசி நகர தி.மு.க. நிர்வாகிகள் அ.சேக்பரித், மைதீன், சன் ராஜா மற்றும் வக்கீல்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
    • பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார்.

    மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் பெரியதுரை முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, கிளை செயலாளர் எஸ்.பி. முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீரகுமார், ஒன்றிய பிரதிநிதி சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குட்டிராஜ், ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் மனோஜ்குமார், சின்னத்துரை, செந்தூர் பாண்டியன், வல்லரசு, யேசுதாஸ், மகேந்திரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒன்றிய நிர்வாகி கள், கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×