search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயாரிப்பு"

    • பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    சென்னை:

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டுக்காக வந்து உள்ளனர்.

    அதில் 450-க்கும் மேற் பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

    நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற மாநாட்டில் முதல் நாளிலேயே ரூ.5½ லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், டி.வி.எஸ். வின் பாஸ்ட் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழிலை தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    மேலும் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக காலணி தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, போக்குவரத்து விமான உதிரி பாகங்கள், ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை தளவாடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு எலக்ட்ரானிக்ஸ், வேளாண் உணவு, பொறியியல் மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அமர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில் வல்லுநர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    இன்று 2-ம் நாள் மாநாட்டில் பெரிய தொழில் அதிபர்கள் மட்டுமின்றி சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட் பகுதிகளில் தொழில் நடத்தும் குறு-சிறு தொழில் அதிபர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வருகை தந்துள்ளனர்.

    இதற்காக குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் மின் வாகனம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், ஜவுளி வாகன உற்பத்தி, வீட்டு உபயோகப் பொருட்கள், விண்வெளி தொழில் நுட்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.

    இதில் 20 நிறுவனங்கள் தமிழக அரசால் முதலீட்டு உதவி செய்யப்பட்டதாகும். மேலும் 10 நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுபவையாகும். இதை முதலீட்டாளர்களும், பொது மக்களும் பார்வையிட்டனர்.

    முதலீட்டாளர்கள் முன்னிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி விளக்கங்களை கூறினார்கள். இதற்கான அமர்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறு-சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஆகியோர் முன்னிலையில் இன்றும் தொழில் அதிபர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

    இன்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்து நிறைவு பேருரை நிகழ்த்துகிறார். அப்போது அவரது முன்னிலையில் மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்போது எத்தனை லட்சம் கோடிக்கு முதலீடுகள் வரப் பெற்றுள்ளன என்ற தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
    • பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும்.

    உடுமலை:

    தமிழா்களின் பாரம்பரியம்,பண்பாட்டை வெளிப்படுத்தும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது அரிசி, வெல்லம், நெய் சேர்த்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் படைத்து கொண்டாடுவது தமிழா்களின் மரபாகும்.

    முன்னோர்கள் காலத்தில் இருந்தே புதிய பானையில் பொங்கலிடுவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண்பானைகள் தயாரிக்கும் பணி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    மண் பானையில் செய்யப்படும் பொங்கல் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்பதால் மண்பானைகளும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால் மண்பானை உற்பத்தி செய்வதில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான கரும்பு, பச்சரிசி, சக்கரை உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி வருகின்றது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும். இதனால் மண்பானை தொழில் மேம்படும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது.
    • காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன், அட்டவணை இன துணை திட்டத்தின் கீழ், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெய்சங்கர் தலைமையில், அட்டவணை இன மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது. இம்முகாம் நேற்று நிறைவு பெற்றது.

    3 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களான காளான் சூப் பவுடர், காளான் ஜாம், காளான் ஊறுகாய், காளான் பாயாசம், சிறுதானிய காளான் பிஸ்கட், சிறுதானிய காளான் கேக் போன்றவை செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் காளான் அறுவடைக்குப் பின் பதப்படுத்துதல், உலர்ந்த காளான் மற்றும் காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியினை வேளாண் அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் திவ்யா தொகுத்து வழங்கினார்.

    • தமிழக கைத்தறி துறையின் கீழ் செயல்படும் சேலம் தங்கம் பட்டு மாளிகை ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
    • அமைச்சர் நேரு முன்னிலை வகித்து நவீனப்படுத்தப்பட்ட விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழக கைத்தறி துறையின் கீழ் செயல்படும் சேலம் தங்கம் பட்டு மாளிகை ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அமைச்சர் நேரு முன்னிலை வகித்து நவீனப்படுத்தப்பட்ட விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார், கைத்தறி துறை கமிஷனர் விவேகா னந்தன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் தொகுதி எம்.பி. பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    கோ ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை ரூ.2.35 கோடி மதிப்பில் புதுப்பொழிவுடன் நவீனப் படுத்தப்பட்டுள்ளது.

    இதுபோல் இந்தியா முழுவதும் 154 ஷோரூம்கள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 105 ஷோரூம்கள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு 7.61 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்தது. தொடர்ந்து முதல்- அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் 2022-ம் ஆண்டு ரூ.9.45 கோடி லாபம் ஈட்டினோம். ரூ.10 கோடி செலவில் ஷோரூம்கள் சீரமைக்கப்பட்டன. தற்போது லாபம் ரூ. 22 கோடியாக உயர்ந்துள்ளது.

    வரவேற்பு

    தங்கம் பட்டு மாளிகை 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.6 கோடியே 59 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தற்போது அது ரூ.12 கோடியாக இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதற்காக 500 ரக சேலைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சில்க் சேலைகள், காட்டன் சேலைகள் கோட்டோ சேலைகள், ஷாப் சேலைகள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    கோ ஆப்டெக்ஸ்-ல் கெமிக்கல் இல்லாத ஆர்கானிக் பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நீங்கள் டிசைன் போட்டு ஒரு ஆர்டர் கொடுத்தால் அதற்கு ஏற்றவாறு உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. 86 விற்பனை நிலையங்களில் ஆன்லைன் மூலம் ரூ.1½ கோடி மதிப்பில் விற்பனை நடைபெற்றுள்ளது.

    நடவடிக்கை

    சில்வர் தங்கம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் நீங்கள் எங்கு ஜவுளி வாங்கினாலும் அதை அந்த மெஷினில் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். அதில் தரம் குறைவாக இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. போலி பட்டு சேலை தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டியில் சொசைட்டி இல்லாமல் இருந்தது. தற்போது சொசைட்டி தொடங்கப்பட்டு மலைவாழ் மக்களுக்கு பயிற்சி கொடுத்து துணிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 12 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது
    • விசர்ஜனம் செய்யும் போது அரை மணி நேரத்தில் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும்.

    பல்லடம்

    விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 18 ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம்புதூரில் கடந்த 12 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து விநாயகர் சிலைகள் தயாரிப்பு குழுவினர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு 400 சிலைகள் தயாரித்தோம். இந்த ஆண்டுக்கான சிலைகள் தயாரிப்பு பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது.இங்கு இது வரை 150சிலைகள் மட்டுமே வடிவமைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம்.3 அடி முதல் 16 அடி வரையிலான சிலைகள் ரூ.3500 முதல் ரூ.34 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் கிழங்கு மாவு, பேப்பர் தூள் மூலம் தயாரித்து வாட்டர் பெயிண்டிங் அடித்துள்ளோம். விசர்ஜனம் செய்யும் போது அரை மணி நேரத்தில் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும்.

    மேலும் மூலப் பொருட்கள் விலை உயர்வு,தொழிலாளர்களின் சம்பள உயர்வு போன்றவற்றால் விநாயகர் சிலைகள் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • 2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன.
    • நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

    கோவை:

    நாட்டின் சுதந்திர தினம் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாட்டின், பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை டவுன்ஹாலில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இங்கு கதர், வெல்வெட், மைக்ரோ துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கதர் துணிகளாலான தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.

    மைக்ரோ துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் குறைந்த பட்சம் ரூ. 30 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் அளவுகளுக்கு ஏற்றார்போல் ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    இது குறித்து தேசியக் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் கூறியதாவது:-

    சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்பாகவே கொடிகள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவிடுவோம். இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இல்லாததால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகளுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன.

    நாங்கள் மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்து இருகூர், அரசூர், மேட்டுப்பாளையம், குறிச்சி, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டெய்லர்களுக்கு அவற்றை பிரித்து வழங்குகிறோம். அவர்கள் அளவுக் கேற்ப அதைத் தைத்து எங்களிடம் திருப்பி தருவர். நாங்கள் அந்தக் கொடிகளில் 1 அங்குலம் முதல் 42 அங்குலம் வரை கொடியின் அளவுக்கேற்ப அசோக சக்கரத்தை, ஸ்கீரின்பிரிண்டிங் செய்து கொடிகளை தயாரிக்கிறோம்.

    கொரானா சமயத்தில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 25 ஆயிரம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்யப்படவில்லை. 2021 முதல் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு தலா 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் வருகின்றன. இதனால் டெய்லர்கள், சரக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் என 2 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேசியக் கொடி மட்டுமின்றி கட்சி கொடிகளின் ஆர்ட ர்களும் அதிக அளவில் வருவதால், கொடி தயா ரிப்பு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணிகள் கிடைக்கின்றன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சுதந்திர தினத்துக்கு தேசியக் கொடி மட்டுமின்றி, மூவர்ணத்தில் பேட்ஜ், தொப்பி, சால்வை, பலூன், குடை, மோதிரம் உள்ளிட்ட பொருள்களையும் விற்பனைக்கு வைத்து ள்ளோம். இவற்றுக்கு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது என்றார்.

    இதுகுறித்து நிறுவன உரிமையாளர் பாலா கூறியதாவது:-

    நாங்கள் தயாரிக்கும் தேசியக் கொடிகள் கோவை மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

    2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன. கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு மொத்தமாக 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் பெறப்பட்டன.

    நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

    பெறப்பட்ட ஆர்டர்க ளின் பேரில் தேசியக் கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆர்டர்கள் அதிக அளவில் பெறப்பட்டு வருவதால் இந்த ஆண்டும் 1 லட்சம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து ள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேர்த்திக்கடன் செலுத்த உருவ பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 2 குடும்பங்கள் வாழையடி வாழையாக இந்த தொழிலை செய்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    புகழ்பெற்ற சோழ வந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. 17 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள கிரா மங்களில் உள்ளவர்களும், வெளியூரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக உருவ பொம்மைகள் நேர்த்திக்கடனாக இந்த கோவிலுக்கு செலுத்து வார்கள்.

    இதற்காக சோழவந்தான் அருகில் உள்ள முள்ளி பள்ளத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் உருவ பொம்மை கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பொம்மை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பிச்சை (வயது 68) என்பவர் கூறியதாவது:-

    பொம்மைகள் தயாரிக்க முதலில் கரம்பை அல்லது வண்டல் மண் எடுத்து அதனை சலித்து எடுப்போம். அதனுடன் நீர் சேர்த்து வைக்கோல் சாந்து அல்லது உமி சேர்த்து உருவ பொம்மைகள் அச்சில் வார்க்கப்பட்டு பொம்மை களை தயாரிப்போம். அதன் பின்னர் 4 அல்லது 5 நாட்கள் நிழலிலும், அதன்பின் 2 நாள் வெயிலும் காய வைப்போம். இவ்வாறு ெசய்வதால் பொம்மைகளில் விரிசல் ஏற்படாது.

    இதன்பின் சமதளத்தில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உறி மட்டைகள் அல்லது தேங்காய் மட்டைகள் வைத்து குறைந்தபட்சம் 4 மணி நேரம் வேக வைக்கப்படும். இந்த பொம்மைகள் சுட்டபின் கலர் வர்ணங்கள் தீட்டப்படும். எங்கள் குடும்பம் உள்பட இன்னும் 2 குடும்பங்கள் வாழையடி வாழையாக இந்த தொழிலை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழு குளியல் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சந்தனம், கற்றாழை, வேப்பிலை, ரோஜா என நான்கு வகையான குளியல் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு ஒன்றியம் ஆழியவாய்க்கால் கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் தயாரிக்க ப்பட்ட சோப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    ஆழியவாய்க்கால் 24 பெண்கள் கொண்ட கதிரவன் மற்றும் மலர் மகளிர் சுய உதவி குழுவினர்கள் மூலம் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெரும்பாலான மகளிர் சுய உதவி குழுவினர் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் உள்ளிட்ட தொழில்கள் மட்டும் மேற்கொண்டு வரும் நிலையில் கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழு குளியல் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த மகளிர் உதவி குழுவினர் ஆறு இயந்திரங்கள் கொண்டு தாவரங்கள் மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட மூலப்பொருட்கள் மூலம் சந்தனம், கற்றாழை, வேப்பிலை, ரோஜா என நான்கு வகையான குளியல் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் மாதத்துக்கு ஒரு லட்சம் சோப்புகள் தயாரிப்பதற்கானதிறன் கொண்டது .

    பொதுமக்களி டம் இந்த சோப்பிற்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழு தலைவர்கள் சீதாலட்சுமி, ஒன்றிய குழு தலைவர் பார்வதி சிவசங்கர், சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் தயாரிக்க வேண்டும்.
    • ஓட்டல்களில் வெளியே சமையல் செய்ய கூடாது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள சில ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் திறந்த வெளிகளில் உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து மாநக ராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் ஓட்டல் உரிமையாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். திறந்த வெளி களில் உணவுப் பொருட்கள் தயாரிக்க கூடாது. சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் தயாரிக்க வேண்டும்.

    ஓட்டல்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்பது உட்பட 12 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு இதை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தவும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதற்காக அவர்களுக்கு 21 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டது.

    இந்தக் கெடு முடிந்த நிலையில் இன்று மாநகர பகுதியில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். வடசேரி பஸ் நிலையத்தில் சுகாதார ஆய்வாளர்கள் ஜான், ராஜேஷ் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது திறந்த வெளிகளில் புரோட்டா, தோசை தயாரிக்கும் கற்கள் போடப்பட்டு உணவு பொருட்கள் தயார் செய்து வந்தது தெரியவந்தது.

    மேலும் அடுப்புகள் வெளியே அமைத்து உணவு பண்டங்கள் தயார் செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து அந்த கடைகளில் இருந்த பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 4 கடைகளில் இருந்து புரோட்டா கற்கள் மற்றும் அடுப்பு போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு தலா ரூ‌.ஆயிரம் அபராதமும் விதிக்க ப்பட்டது. 4 கடைகளுக்கும் ரூ‌.4ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனை நாகர்கோவில் மாநகரம் முழுவதும் தொடர்ந்து நடை பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மேயர் மகேஷ் கூறுகையில், ஓட்டல் உரிமையாளர்களை அழைத்து ஏற்கனவே பேசி இருந்தோம். அவர்களுக்கு 21 நாட்கள் காலக்கடு விதிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இனிவரும் காலங்களில் ஓட்டல்களில் வெளியே சமையல் செய்ய கூடாது. தரமான வகையில் பொது மக்களுக்கு உணவு பொருட்களை வழங்க வேண்டும். இல்லாத ஹோட்டல் உரிமையாளர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளோம் என்றார்.

    • சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
    • கிழங்கு மாவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    தமிழகத்தில் வருகிற 31ந் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, இந்து அமைப்புகள் சாா்பில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையாக கொண்டாடப்பட்ட நிலையில், நிகழாண்டு வெகுவிமரிசையாக கொண்டாட இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அதே வேளையில், போதிய அளவில் சிலைகள் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகரைச் சோ்ந்த சிலை விற்பனையாளரும், இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவருமான கே.பாலாஜி கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிலை விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் தயாராகும் சிலைகளைப் பெற்று இங்கு வா்ணங்கள் பூசி விற்பனை செய்கிறோம். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், கிழங்கு மாவு, பேப்பா் தூள், வாட்டா் கலா் பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அண்மைக் காலமாக கிழங்கு மாவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. வழக்கமாக நவம்பா் மாதம் சிலை தயாரிப்பு பணி துவங்கி ஆகஸ்ட் மாதத்தில் பணி நிறைவடையும். மாவு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இம்முறை ஜனவரி மாதத்துக்குப் பின்பே சிலை தயாரிப்புப்பணி துவங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி 5 அடிக்கு உள்பட்ட சிலைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி விழா எதிா்பாா்த்த அளவு கொண்டாடப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னா் தற்போது சிறப்பாக கொண்டாட இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. சிலை தயாரிப்பு குறைந்துள்ளதால் எதிா்பாா்க்கும் அளவு சிலைகள் கிடைப்பது சந்தேகமே. வழக்கமாக 400க்கும் அதிகமான சிலைகள் விற்பனைக்கு வரும். இந்த முறை விநாயகா் சதுா்த்திக்கு குறைவான நாட்களே இருப்பதால் 150 சிலைகள் மட்டுமே வந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்கத்தால் சிலைகள் விற்பனையின்றி கிடங்குகளில் தேக்கமடைந்திருந்தன. தற்போது அந்த சிலைகள் அனைத்தும் விற்பனையாகி விட்டன.

    இதில் 3 அடி சிலை ரூ.2,500க்கும், 5 அடி சிலை ரூ.5,0000க்கும், 8 அடி சிலை ரூ.10,000க்கும் விற்பனை செய்து வருகிறோம். விலைவாசி மற்றும் சிலை உற்பத்தி செலவு அதிகரித்த போதிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்திருப்பதால் சிலைகளின் விலையை உயா்த்தாமல் பொதுநலன் கருதி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.

    புதிய சிலைகள் ஆா்டா் கொடுக்கவும், பெரிய சிலைகள் கேட்டும் பலா் வருகின்றனா். நாட்கள் இல்லாததால் புதிய ஆா்டா் எடுக்கவில்லை. பெரிய சிலைகள் இல்லாததால் சின்ன சிலைகளுக்கு முன்தொகை கொடுத்துச் செல்கின்றனா். விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் சிலை தயாரிப்பை மட்டும் நம்பி 20 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சிலை தயாரிப்புத் தொழில் பாதிப்படைந்தது. சிலை தயாரிப்பாளா்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாததால் இந்த ஆண்டு சிலை தயாரிப்புக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கவில்லை. இதனாலும் சிலை தயாரிப்புப் பணி தாமதமாகியுள்ளது. சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பலா் விவசாயம் உள்ளிட்ட பிற தொழில்களுக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டனா்.

    விநாயகா் சிலை தயாரிப்புக்குத் தேவையான குச்சி கிழங்கு மாவு தட்டுப்பாடின்றி கிடைக்கவும், சிலை தயாரிப்பை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    • பல்வேறு வகைகளில் மறுசுழற்சி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
    • ஆடை ரகங்களின் மதிப்பு மென்மேலும் உயரும்.

    திருப்பூர்:

    சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கைகொடுக்கும்வகையில், உலகளாவிய நாட்டு வர்த்தகர்கள் தங்கள் ஷோரூம்களில், மறுசுழற்சி ஆயத்த ஆடை ரகங்கள் விற்பனையை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர்.ஆடை தயாரிப்பில் வீணாகும் கழிவு துணியை மீண்டும் பஞ்சாக மாற்றியும், பிளாஸ்டிக் பாட்டில்களை சிதைத்து என பல்வேறு வகைகளில் மறுசுழற்சி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

    தமிழக நூற்பாலைகள், கடந்த மே மாதம் வரை 18 மாதங்கள் தொடர்ந்து ஒசைரி நூல் விலையை உயர்த்தி வந்தன.உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, நிதி நெருக்கடி, வர்த்தகர்களிடம் ஆடைகளுக்கு போதிய விலை உயர்வு பெறமுடியாமை உள்ளிட்ட காரணங்களால் திருப்பூரில் பல நிறுவனங்கள் மறு சுழற்சி ஆடை தயாரிப்பில் புதிதாக அடியெடுத்துவைத்துள்ளன.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-

    கட்டிங் வேஸ்ட்ஐ சிதைத்து, பஞ்சாக மாற்றி அதனுடன் 50 சதவீதம் பாலியெஸ்டர் இழை கலந்து ஓ.இ., மில்களில், மறுசுழற்சி நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த நூலில், குளிர் கால ஆயத்த ஆடை ரகங்கள் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சாயமேற்றிய துணியே சிதைத்து பஞ்சாக மாற்றப்படுகிறது.அதனால், மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் சாயமேற்றுதல் தவிர்க்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.மறுசுழற்சி நூலிழை ரகங்கள் விலை குறைவாக உள்ளதால் ஆடை தயாரிப்பு செலவினம் சீராகவே உள்ளது. கடந்தாண்டு நிர்ணயித்த அதே விலைக்கே இந்தாண்டும் ஆடை விலையை நிர்ணயிக்கமுடிவதால், வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றுவதும் எளிதாகிறது.

    குறிப்பிட்ட நிறங்களில் மட்டுமே ஆடை தயாரிக்க முடியும் என்பதுதான் மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் உள்ள குறையாக பார்க்கப்படுகிறது.ஆனாலும் எதிர்காலத்தில் சர்வதேச அளவில் மறுசுழற்சி ஆடை ரகங்களின் மதிப்பு மென்மேலும் உயரும் என்பதில் சந்தேகமில்லை. பிரான்டட் நிறுவனங்கள், மறுசுழற்சி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் தரச்சான்று பெற்றிருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.
    • அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை: –

    சென்னிமலை பகுதியில் நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் தினசரி வசூல் விட்டு அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை அருகே மணிமலைகரடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றும் நபர் கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.

    அதை தொடர்ந்து சென்னிமலை ஒன்றிய பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்களை குறிவைத்து நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்று கடன் கொடுத்து தினசரி வசூல், மீட்டர் வட்டி, தின வட்டி என அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    இந்த ரகசிய தகவல் கசிய தொடங்கியதால் சென்னிமலை பகுதியில் கந்து வட்டி கும்பல் அலறிதுடித்து வருகின்றனர்.

    தற்போது பணம் பெற்ற நபர்களிடம் மிரட்டும் தோனியை விட்டு பம்பி பணிந்து கடன் தொகையினை வசூலித்து வருகின்றனர்.

    ×