மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்ட சோப்பு விற்பனை- கலெக்டர் தொடங்கி வைத்தார்

கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழு குளியல் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.சந்தனம், கற்றாழை, வேப்பிலை, ரோஜா என நான்கு வகையான குளியல் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
விற்பனையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
விற்பனையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு ஒன்றியம் ஆழியவாய்க்கால் கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் தயாரிக்க ப்பட்ட சோப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ஆழியவாய்க்கால் 24 பெண்கள் கொண்ட கதிரவன் மற்றும் மலர் மகளிர் சுய உதவி குழுவினர்கள் மூலம் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான மகளிர் சுய உதவி குழுவினர் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் உள்ளிட்ட தொழில்கள் மட்டும் மேற்கொண்டு வரும் நிலையில் கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழு குளியல் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மகளிர் உதவி குழுவினர் ஆறு இயந்திரங்கள் கொண்டு தாவரங்கள் மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட மூலப்பொருட்கள் மூலம் சந்தனம், கற்றாழை, வேப்பிலை, ரோஜா என நான்கு வகையான குளியல் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் மாதத்துக்கு ஒரு லட்சம் சோப்புகள் தயாரிப்பதற்கானதிறன் கொண்டது .

பொதுமக்களி டம் இந்த சோப்பிற்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழு தலைவர்கள் சீதாலட்சுமி, ஒன்றிய குழு தலைவர் பார்வதி சிவசங்கர், சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com