search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "figurine"

    • நேர்த்திக்கடன் செலுத்த உருவ பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 2 குடும்பங்கள் வாழையடி வாழையாக இந்த தொழிலை செய்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    புகழ்பெற்ற சோழ வந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. 17 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள கிரா மங்களில் உள்ளவர்களும், வெளியூரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக உருவ பொம்மைகள் நேர்த்திக்கடனாக இந்த கோவிலுக்கு செலுத்து வார்கள்.

    இதற்காக சோழவந்தான் அருகில் உள்ள முள்ளி பள்ளத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் உருவ பொம்மை கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பொம்மை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பிச்சை (வயது 68) என்பவர் கூறியதாவது:-

    பொம்மைகள் தயாரிக்க முதலில் கரம்பை அல்லது வண்டல் மண் எடுத்து அதனை சலித்து எடுப்போம். அதனுடன் நீர் சேர்த்து வைக்கோல் சாந்து அல்லது உமி சேர்த்து உருவ பொம்மைகள் அச்சில் வார்க்கப்பட்டு பொம்மை களை தயாரிப்போம். அதன் பின்னர் 4 அல்லது 5 நாட்கள் நிழலிலும், அதன்பின் 2 நாள் வெயிலும் காய வைப்போம். இவ்வாறு ெசய்வதால் பொம்மைகளில் விரிசல் ஏற்படாது.

    இதன்பின் சமதளத்தில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உறி மட்டைகள் அல்லது தேங்காய் மட்டைகள் வைத்து குறைந்தபட்சம் 4 மணி நேரம் வேக வைக்கப்படும். இந்த பொம்மைகள் சுட்டபின் கலர் வர்ணங்கள் தீட்டப்படும். எங்கள் குடும்பம் உள்பட இன்னும் 2 குடும்பங்கள் வாழையடி வாழையாக இந்த தொழிலை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
    • இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர், மார்ச்.24-

    பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் காரணமாக மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வக்கீல் கலையரசன் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கடலூர் காமராஜர் சிலை அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.       

     இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றி கோஷம் எழுப்பினார்.  இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி மோடி உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த புது நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உருவ பொம்மையை அங்கிருந்து அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர். இதில் ஓ.பி.சி.அணி ராமராஜ், மீனவரணி கடல் கார்த்திகேயன், ஆட்டோ வேலு, விக்கி, ஆறுமுகம் உள்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • வேதாரண்யத்தில் அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.
    • தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் ராஜாஜிபூங்கா எதிரே முன்னாள் நகர துணை செயலாளர் வீரராசு ,நகர அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் சதீஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    ×