search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர்"

    • சிவகாசி தண்ணீர் சப்ளை நிறுவனத்தில் வேலை பார்த்த டிரைவர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரின் மர்மச்சாவு தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள் ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் சத்தியபிரியன் (வயது 17).

    இவர் சிவகாசியில் இயங்கி வரும் தனியார் தண் ணீர் சப்ளை நிறுவனத்தில் வேலை டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் தனது பெற்றோரிடம் கூறி விட்டு வேலைக்கு சென்ற சத்தியபிரியன் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு லாரியில் தண்ணீர் சப்ளை செய்வதற் காக சென்றார். மீண்டும் திரும்பிய நிலையில் திடீரென்று மயங்கி கீேழ விழுந்தார். உடனடியாக அங்கிருந்த–வர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ஏற்கனவே சத்தியபிரியன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து அவரது தந்தை வெயிலப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி சிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரை வரின் மர்மச்சாவு தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகராஜ் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை பாட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 32)டிரைவர். இவர் தனது உறவினருடன் அதே பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த திண்டிவனம் ரேசனைப் பகுதியை சேர்ந்த ராசு திடீரென நாகராஜை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இதில் நாகராஜ் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின் ேபரில் ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • . இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது
    • அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டதால்

    நாகர்கோவில் : பறக்கை அருகே உள்ள மதுசூதனபுரத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின் சாமுவேல் (வயது 50), லாரி டிரைவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டதால் மனைவி சொரூபராணி கணவரிடம் கோபித்துக்கொண்டு அவருடைய தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த ஜெஸ்டின் சாமுவேல் கடந்த 21-ந்தேதி தனது வீட்டின் அருகே விஷ மருந்து சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி சொரூபராணி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர், மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள எச்சநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சண்முகத்தாய். இவரது மகன் கதிரேசன் (24), டிரைவர். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், தான் சாகப்போவதாகவும் அடிக்கடி தாயிடம் கூறிவந்தார். சம்பவத்தன்று வெளியே செல்வதற்காக தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சண்முகத்தாய் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது கதிரேசன் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    சிவகாசி அரசிகொல்லன் தெருவை சேர்ந்தவர் விமலாதேவி.இவரது மகள் கவுசிகா. அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தோழிக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக கடைக்கு செல்ல வேண்டும் என கவுசிகா தாயிடம் கூறியுள்ளார். அப்போது அருகில் உள்ள கடையில் மளிகை பொருள் வாங்கி வருமாறு கவுசிகாவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் கவுசிகா கோபித்துக் கொண்டு மறுத்துவிட்டார். இதனால் விமலாதேவி கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் உள்அறையில் கவுசிகா தூக்கில் தொங்கியபடி இருந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்கம் பக்கத்தினர் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • யாராவது அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகை பக்கம் கோட்ட சாதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா.

    இவரது மகன் பாலாஜி (வயது 35). டிரைவரான இவருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவியும், விஷ்னு,ஜோதி மூர்த்தி என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவியும் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் பாலாஜி தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பாலாஜி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீடு வெளிப்புறம் பூட்டிருந்த நிலையில், உறவினர்கள் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாலாஜி பாதி அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனே பாலாஜியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை வேறு யாராவது அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • இளம்பெண் வாடகை காரை முன்பதிவு செய்தார். முன்பதிவு செய்த சில நிமிடங்களிலேயே அவரது குழந்தை அழ ஆரம்பித்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 32 வயது மதிப்புள்ள ஒரு இளம்பெண் 6 வயது சிறுமி மற்றும் 9 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது மகளின் பள்ளிக்கு சென்றுள்ளார்.

    அங்கு பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் அவர் தனது வீட்டிற்கு புறப்பட முயன்றார். அப்போது அந்த இளம்பெண் வாடகை காரை முன்பதிவு செய்தார். முன்பதிவு செய்த சில நிமிடங்களிலேயே அவரது குழந்தை அழ ஆரம்பித்தது. அப்போது ஒரு ஆட்டோவை அழைத்து புறப்பட தயாரானார்.

    அந்த நேரத்தில் வாடகை கார் டிரைவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு தான் 5 கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டி வந்து விட்டதாகவும், விரைவில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுவேன் என்று கூறி உள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் சில நிமிடங்கள் காத்திருந்தார். ஆனாலும் கார் வரவில்லை.

    இதையடுத்து அவர் தனது குழந்தைகளுடன் வாடகை ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் வாடகை கார் டிரைவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு வந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் அந்த இளம்பெண் கார் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

    முன்பதிவு செய்த காரை ரத்து செய்ததால் ஆத்திரம் அடைந்த கார் டிரைவர் அந்த இளம்பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • 1½ வயது மகளுடன் புதுக்கடையில் உள்ள மாமனார் லாரன்ஸ் வீட்டில் வசித்து வந்தார்.
    • புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிள்ளியூர் :

    படந்தாலுமூடு அருகே உள்ள கள்ளிக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 35). டெம்போ டிரைவர். இவரது மனைவி சுஜிமோள், கடந்த மாதம் 2-ந் தேதி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். இதனால் ரெதீஷ், தனது 1½ வயது மகளுடன் புதுக்கடையில் உள்ள மாமனார் லாரன்ஸ் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த 23-ம் தேதி புதிய செங்கல் சூளைக்கு வேலைக்கு போவதாக ரெதீஷ் கூறி சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.இது தொடர்பாக லாரன்ஸ் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டெம்போ டிரைவர் பிடிபட்ட நிலையில் அதில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்
    • தப்பி ஓடியவர்கள் கண்ணனூர் பகுதியை சேர்ந்த அஜித், கைதகுழி பகுதியை சேர்ந்த விஜி என்றும் தெரிய வந்தது

    தக்கலை :

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருவிதாங்கோடு கைத குழி பகுதியில் சென்ற போது, வேகமாக ஒரு டெம்போ வந்தது. அதனை நிறுத்தும்படி போலீசார் கூறினர். ஆனால் அந்த டெம்போ நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து போலீசார் விரட்டிச் சென்று மடக்கினர்.

    டெம்போ டிரைவர் பிடிபட்ட நிலையில் அதில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அந்த டெம்போவில் செம்மண் கடத்துவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து டிரைவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஷாஜன் என தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் கண்ணனூர் பகுதியை சேர்ந்த அஜித், கைதகுழி பகுதியை சேர்ந்த விஜி என்றும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர்.
    • மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    நெல்லையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவராக தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த பெத்தநாடார்பட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கார்மேகம் (வயது 47) என்பவர் பணியில் இருந்தார். கண் டக்டராக வண்ணமுத்துக் குமரன் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தார்.

    இந்த பேருந்து ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பஸ்சை ஓரங்கட்டி நிறுத்திய அவர் தொடர்ந்து இயக்க முடியாமல் தவித்தார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து கண்டக்டர் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். சற்று தெளிவான நிலையில் இருந்த டிரைவர் கார்மேகன் தொடர்ந்து பஸ்சை இயக்கியவாறு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் வந்து சேர்ந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டிக்கெட் எடுத்திருந்த பயணிகள் மட்டும் வேறு பஸ்சில் ஏற்றிவிடப்பட்டனர்.

    பின்னர் டிரைவர் கார் மேகத்தை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு கண்டக்டர் வண்ணமுத்துக்குமரன் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இது பற்றிய தகவல் அவரது மனைவி ராதாபுஷ்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். இதற்கிடையே நேற்று இரவு சிகிச்சை பலனின்றி டிரைவர் கார் மேகம் பரிதாபமாக இறந் தார். உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தைரியமாக பஸ்சை ஓட்டி வந்து பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்ட டிரைவர் சிகிச்சையின்போது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இறந்த டிரைவருக்கு கார்த்திக் என்ற மகனும், மோனிகா என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து டிரைவரின் மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ம்பவத்தன்று எட்வின் ஜோர்ஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தியுள்ளார்.
    • பல இடத்தில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்

    களியக்காவிளை :

    குழித்துறை பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜோர்ஜ் (வயது 60). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல இடத்தில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.சம்பவத்தன்று எட்வின் ஜோர்ஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தியுள்ளார்.

    சிறிது நேரத்தில் மனைவி வீட்டுக்கு வந்த போது அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் காணப் பட்டார். இதனை பார்த்து மனைவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தி னர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் எட்வின் ஜோர்ஜை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை எட்வின் ஜோர்ஜ் சிகிச்சை பலனின்றி உயிழிழந்தார். மேலும் இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் தவிப்பு
    • வேனை பறிமுதல் செய்து மதுபோதையில் இருந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை

    வடவள்ளி,

    கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக வேன் வசதி உள்ளது. இந்த நிலையில் 12 மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் பள்ளிக்கூடத்துக்கு புறப் பட்டு வந்தது.

    அப்போது டிரைவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

    எனவே அவர் வடவள்ளி குருசாமி நகர் பகுதியில் நடுரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு ஸ்டியரிங் மீது உட்கார்ந்த நிலையில் தூங்கினார். எனவே வேனுக்குள் இருந்த மாணவ- மாணவிகள் எப்படி பள்ளிக்கு செல்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். இந்த நிலையில்அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாற்று வேன் ஏற்பாடு செய்யப்பட்டு, 12 குழந்தைகளும் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட னர்.

    இதற்கிடையே மது போதையில் வாகனம் ஓட்டி வாகனத்தை நடுரோ ட்டில் நிறுத்திவிட்டு தூங்கிய வேன் டிரைவர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் வடவள்ளி போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வேனை பறிமுதல் செய்து, அதனை மதுபோதையில் ஓட்டி டிரைவர் செந்திலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
    • பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஒரு அரசு பஸ் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றது.

    பஸ்சை டிரைவர் சனல்குமார் இயக்கினார். கண்டக்டராக தனசேகரன் இருந்தார். அந்த பஸ் இரவில் தூத்துக்குடியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது பஸ்சில் 2 வாலிபர்கள் ஏறினார்கள். அவர்கள் இருவரும் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தனர். இருவரையும் பஸ்சுக்குள் வருமாறு கண்டக்டர் தனசேகரன் கூறினார்.

    ஆனால் அவர்கள் இருவரும் பஸ்சுக்குள் வருவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வாலிபர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.

    புதுக்கோட்டை பகுதியில் அந்த பஸ் வந்தபோது வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து வழி மறித்தனர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர்கள் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் பஸ்சின் கண்ணாடியையும் கல்வீசி உடைத்தனர்.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி கீழே இறங்கினார்கள். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    படுகாயம் அடைந்த டிரைவர் சனல்குமார், கண்டக்டர் தனசேகரன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் பஸ்சில் இருந்த பயணிகளை போலீசார் மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இது குறித்து டிரைவர் சனல்குமார் தூத்துக்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை கைப்பற்றி விசாரணை நடக்கிறது.

    டிரைவர், கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் முகம் வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த வாலிபர்கள் யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வாலிபர்கள் குடிபோதையில் டிரைவர், கண்டக்டரை தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. வாலிபர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×