search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூட்டிய வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவர்- அடித்து கொலையா? போலீசார் விசாரணை
    X

    பூட்டிய வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவர்- அடித்து கொலையா? போலீசார் விசாரணை

    • அக்கம் பக்கத்தினர் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • யாராவது அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகை பக்கம் கோட்ட சாதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா.

    இவரது மகன் பாலாஜி (வயது 35). டிரைவரான இவருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவியும், விஷ்னு,ஜோதி மூர்த்தி என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவியும் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் பாலாஜி தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பாலாஜி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீடு வெளிப்புறம் பூட்டிருந்த நிலையில், உறவினர்கள் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாலாஜி பாதி அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனே பாலாஜியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை வேறு யாராவது அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×