search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதி"

    • அவன் வேண்டுகோளை ஏற்று அவனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.
    • மயில், வேல், சேவல், கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும்.

    பகைவனுக்கு அருளிய கந்தன்

    உண்மையில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. சூரன் முருகனை சரணாகதி அடைந்தான்.

    அவன் வேண்டுகோளை ஏற்று அவனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.

    தானே அவைகளை கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டு அவனை தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார்.

    இப்படி பகைவனுக்கும் அருளியது கந்தன் கருணை எனப்படுகிறது.

    இப்படி சேவற்கொடியோன் ஆன மயில்வாகனனை வணங்கும்போது பகவானுடைய மயில், வேல், சேவல், கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும்.

    • அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.
    • இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    சஷ்டி திதியில் சூரபத்மனை அழித்த முருகப் பெருமான்

    இங்கிருந்து முருகப் பெருமான் வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி நல்ல அறிவுரைகளைக் கூறச் சொன்னார்.

    ஆனால் வீரவாகுவின் பேச்சினை சூரபத்மன் கேட்கவில்லை.

    அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

    முருகப் பெருமானின் பூதசேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகம் மற்றும் தம்பியான சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப்பெருமானிடம் போரிட்டு மடிந்தனர்.

    கடைசியாக திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெறச் செய்தார்.

    இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    • அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.
    • அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

    சூரபத்மனை அழிக்க சென்ற கந்தன்

    சிவபெருமான் முருகனுக்கு அசுரனுடன் போர் செய்ய சேனைத் தளபதியாக வீரவாகுவையும், மற்ற சிவகணங்களையும் சிருஷ்டித்தார்.

    அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.

    சகல சக்திகளுடனும், பரிவாரங்களுடனும் முருகன் அசுரரர்களை அழிக்க புறப்பட்டுச் சென்றார்.

    முதலில் சூரபத்மனின் சகோதரர்களான கஜமுகாசுரன், சிம்மமுகாசுரன், அவன் மகன் பத்மகேசரி ஆகியோரை அழித்தார்.

    பின்னர் தன் படைகளுடன் திருச்செந்தூர் வந்து அங்கு விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டார்.

    வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.

    • ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.
    • அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

    நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமான்

    சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்ற ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோமுகத்தையும் கொண்டு திகழ்ந்தார்.

    அப்போது ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.

    அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் விழச் செய்தார்.

    கங்கையாலும் அதைத் தாங்க முடியாததால் அக்னி பவான் அதைத் தானே எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார்.

    அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.

    பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்கவே ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் தோன்றினார்.

    அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

    • அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.
    • வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

    முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்

    ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்.

    அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.

    சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்.

    உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிபடர்வது ஒருமுகம்.

    வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.

    வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

    • முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.
    • நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    தமிழ் கடவுள் முருக பெருமான்

    முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.

    தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும்,

    அகர முதலிய எழுத்துகள் பன்னிரண்டும் தோள்காளாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகன் சிவந்த மேனியும், அபயவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும்,திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளி தேவி வலது பக்கத்திலும்,

    நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமேதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்களாயின.

    • மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும்.
    • முருகப் பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு சிறக்கும்.

    குன்று தோறாடும் குமரன்

    மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும்.

    இக்குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக "குன்று தோறாடும் குமரன்" என்று முருகனை வழிபடுகிறோம்.

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு.

    முருகப் பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.

    எப்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முருகனை நினைத்தால் ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.

    • ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும்.
    • முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

    மும்மூர்த்திகளை வணங்கிய பலன் தரும் முருகன் வழிபாடு

    தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப் பெருமான், அழகு, வீரம், ஞானம் ஒருங்கே அமையப் பெற்றவர் முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.

    சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப்பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார்.

    முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

    இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திருவருள்.

    ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும். வினைகளும், பயமும் நீங்கும்.

    • அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசனமுறை யாகும்
    • அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.

    அய்யப்ப உருவ தத்துவம்

    அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசன முறையாகும்.

    இரண்டு குதிகால்களின் மீது உடலின் அடிப்பாகத்தை அழுத்தி, உட்பாரம் வயிற்றுடன் குதிகால்களில் தூக்க முன்புறம் சாய்ந்த நிலை.

    இந்நிலையில் உடல் வில் போல் ஆடும் தன்மையுடையது.

    குதி கால்களின் அழுத்தம் தொடைமூலம் வயிறு பாகத்தை உந்த, உந்திக்கமலம் அழுத்தப்பட்டு உட்சுவாசம் புறசுவாசம் மற்றும் பிராணயாம முயற்சியினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தி சுலபத்தில் மேல் நோக்கி எழுப்ப உதவுகிறது.

    இந்த சக்தி ஆறு ஆதாரங்களில் பாய்ந்து பிரம்மரந்திரம் எனப்படும் சகஸ்ரதள கமலத்தை எட்டி ஜோதி மயத்தில் கலந்து நிற்கும் நிலையைக் காட்டுகிறது. இதுவே பிரணவ ஸ்வரூபம் ஆகும்.

    அம்பிகையின் பத்து வித்யைகளில் ஒருவளான திரிபுரபைரவி இம்மாதிரி யோக நிலையில்தான் அமர்ந்திருக்கிறாள்.

    ஆந்திராவிலுள்ள ஹேமாவதி என்ற இடத்திலும் இம்மாதிரி அமர்ந்துள்ள யோக தட்சணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

    அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.

    இந்த சின் முத்திரையை "அறிவடையாளம்" என்பர்.

    இறைவனை உணர்த்துவது பெரு விரல், ஆவியை உணர்த்துவது சுட்டு விரல் வினையை உணர்த்துவது நடுவிரல், மாயை உணர்த்துவது அணி விரல், மலத்தனை உணர்த்துவது சிறு விரல்,

    பெருவிரலும் சுட்டு விரலும் சேருவது ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியத்தை உணர்த்துகிறது.

    மற்றொரு கை காட்டும் தத்துவம் ஓம்காரமாகிய அகார, உகார, மகார வடிவினன் நான் என்னைச் சரணடைந்தவர்களை தூங்காமல் தூங்கி சுகம் பெறும் ஆத்மபோத நிரந்தர நிலையை அளிக்க இத்தவத்திருக்கோலத்தில் இருக்கிறேன்.

    அந்த நிலை அடைய என் பாதார விந்தத்தை நாடுங்கள் என்று தன் இடக்கையால் தன் திருப்பாதங்களை அய்யப்பன் சுட்டிக் காட்டுகிறார்.

    அய்யப்பன் கால்களை இணைக்கும் பட்டை சிவ, விஷ்ணு ஐக்கியத்தைக் காட்டுவதாகும்.

    • 23 இடங்களில் இருந்து புறப்பட்டு நாகர். அண்ணா விளையாட்டு அரங்கம் வந்தது
    • இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26-ந்தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகத்தொண்டு நிறுவனங்களான திருப்புமுனை போதை நோய் நலப்பணி, போதை நோய் பணிக்குழு, புது வாழ்வு மையம் ஆகியவை இணைந்து கன்னியாகுமரி, குளச்சல், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட 23 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பங்கேற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர்கள், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதியை ஏற்றி தொடர் ஓட்ட வீரர்களிடம் வழங்கினார்கள்.

    பின்னர் இந்த ஜோதி ஓட்டம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், போலீஸ் டி.எஸ்.பி.ராஜா, குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குனர் அருட்பணியாளர் நெல்சன், ஜோதி ஓட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிறில், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவர் ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஜோதி ஓட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மேயர் மகேஷ் ஆகியோர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடினர். இதில் பள்ளி-கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர். காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டம் விவேகானந்தபுரம், கொட்டாரம், பொற்றையடி, ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டாறு, மீனாட்சிபுரம் மணிமேடை சந்திப்பு வழியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. அங்கு உலக போதை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.

    குளச்சல் காணிக்கை அன்னை மருத்துவமனை புதுவாழ்வு இல்லம் சார்பில், அண்ணாசிலை சந்திப்பில் இருந்து ஜோதி ஓட்டம் புறப்பட்டது. புதுவாழ்வு இல்ல பணியாளர் கிறிஸ்டி வரவேற்று பேசினார். குளச்சல் மீன்துறை ஆய்வாளர் கனிசெல்வம் வாழ்த்துரை வழங்கினார். புதுவாழ்வு இல்ல இயக்குனர் அருட்சகோதரி, ஜோதியில் தீபம் ஏற்றினார்.

    நகர்மன்ற தலைவர் நசீர் கொடியசைத்து ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அருட்சகோதரிகள், புதுவாழ்வு இல்ல மக்கள், பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். ஜோதி ஓட்டம், திங்கள்நகர், இரணியல், பரசேரி, சுங்கான்கடை, பார்வதிபுரம் வழியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் சென்றடைந்தது.

    ஆரல்வாய்மொழி முத்துநகர் பகுதியில் இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டத்தை தனி துணை கலெக்டர் திருப்பதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தோவாளை தாலுகா தாசில்தார் வினை தீர்த்தான் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஜோதி ஓட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர். முத்து நகர், தோவாளை, வெள்ளமடம், வடசேரி வழியாக இந்த ஜோதி ஓட்டம், அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது.

    போதை ஓழிப்பு குழுநாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்த போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில், குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் போதை ஒழிப்பு தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் போதை குறித்.து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் போதையை ஒழிக்க முடியும்.

    குமரி மாவட்டம் போதையில்லா மாவட்டமாக மாற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே போதை பொருட்கள் பயன்படுத்து வோருக்கு பல்வேறு அறிவுரைகளை கூற வேண்டும். அவர்களை நல்வழிப்படுத்துவது நமது கடமையாகும். போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் அவரது ரகசியங்கள் பாதுகாக்கப்படும். விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், விளையாட்டு அதிகாரி ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறந்த தன்னார்வலர்களுக்கு பரிசுகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

    • விழாவில் இன்று சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது.
    • அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி அருகே உள்ள கருப்பூரில் அய்யனார் மாவடி கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    விழாவில் இன்று சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனத்தின் சார்பில் 6 அடி உயர மெகா அகர்பத்தியில் கருப்பூர் கிராம மக்கள் முன்னிலையில் ஜோதி ஏற்றப்பட்டது.

    அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் சைக்கிள் பியூர் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ராமமூர்த்தி, பகுதி மேலாளர் சரவணன் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சி.ஐ.டி.யு. மாநில மாநாட்டையொட்டி நடந்தது
    • மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யூ. தமிழ் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில்இன்றுகாலைதொடங்கியது. இந்த மாநாடு வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை யொட்டி நேற்று மாலை 4 மணிக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தியாகி களின் நினைவு சுடர்கள் சங்கமம் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு, கலை விழா நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடைபெற்றது.

    இந்தநிகழ்ச்சிக்கு மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ஜெலஸ்டின் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஜடா ஹெலன் வரவேற்று பேசினார். குமரி மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப் பட்ட 100 தியாகிகளின் நினைவு சுடர்கள் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சௌந்தர ராஜன் உள்பட முக்கிய மான தலைவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை யொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    வரவேற்புக்குழு கௌரவ ஆலோசகர் அமிர்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் க கனகராஜ், செல்ல சுவாமி, முன்னாள் எம்.பி. பெலார்மின், முன்னாள் எம். எல். ஏ. லிமாரோஸ், மற்றும் நிர்வாகிகள் அகமது உசேன், தாமஸ் பிராங்கோ, நாகராஜன், தங்க மோகன், சிங்காரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×