search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருதமலை"

    • முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
    • கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    வடவள்ளி:

    மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.

    இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.

    இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

    கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து வலைதளத்தில் பரப்பினர்
    • சாதாரண பக்தர்களுக்கு ஒரு நியாயம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு நியாயமா? என கேள்வி

    வடவள்ளி,

    மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் தற்போது சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கந்த சஷ்டி விழா தொடங்கியதை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு பின் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. நேற்று சூரசம்ஹாரம் மற்றும் இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இந்த 2 முக்கிய விழாக்களிலும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் மலைப்பாதை வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் கலெக்டர் கிராந்திகுமார் பாடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரும் 2 நாட்கள் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதித்தார். இதனால் பக்தர்கள் கோவில் பஸ்களிலும், நடைபாதை வழியாகவும் சென்றனர்.

    இன்று காலை நடை பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் சென்றனர். முதியவர்கள் பலர் மிகவும் சிரமப்பட்டு மலையை அடைந்தனர். அங்கு சென்று பார்த்த பக்தர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவில் வளாகத்தில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் நின்றன.

    அந்த கார்களை பார்த்த தும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை மட்டும் கால்நடையாக மலையேறச் செய்து விட்டு அவர்களை மட்டும் எப்படி காரில் வர அனுமதித்தனர் என ஆதங்கப்பட்டனர். சாதாரண பக்தர்களுக்கு ஒரு நியாயம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அங்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததை தங்கள் செல்போனில் படமும் பிடித்து வலைத ளத்தில் பரப்பினர்.

    இதுமட்டுமல்லாமல் திருக்கல்யாண நிகழ்ச்சி யின் முன்வரிசையிலோ, அருகிலோ சாதாரண பக்தர்களால் செல்ல முடிய வில்லை. அவரவர்களுக்கு வேண்டியவர்களை முன்வரிசையில் அமரச் செய்து இருந்தனர். சாதாரண பக்தர்கள் வெகு தொலையில் நின்றபடியே சாமியை தரிசித்து விட்டுச் சென்றனர்.

    இதனால் இனி வரும் காலங்களிலாவது அதிகாரிகள் அனைவரையும் சமமாக பாவித்து தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக மலை அடிவாரத்தில் உள்ள டோல்கேட் ஊழியர்களிடம் கேட்டபோது தங்களுக்கு 86 வாகனங்களை மலைப்பாதையில் அனுமதிக்க பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மருதமலை ஒரு மருந்து மலையாக இருந்தது என்றும் சில கதைகள் உண்டு.
    • கொங்கு நாட்டில் ஒரு கூறாகிய ஆறை நாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது.

    1. மருதமலை-கோவை நகரத்திற்கு வடமேற்கு எல்லையாக அமைந்துள்ளது.

    இதைச்சுற்றிலும் காடுகளே அமைந்துள்ளது.

    2. கொங்கு மண்டலம் ஆதிகாலத்தில் இருபத்து நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

    அதில் கொங்கு நாட்டில் ஒரு கூறாகிய ஆறை நாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது.

    3. மருதமலை மிகப் பழம்பெருமையுள்ளது என்பதற்கு நிறைய ஆதாரங்களும், கல்வெட்டுக்கள், புராணங்கள் ஆகியவையும் சான்றாக உள்ளது.

    4. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு மருதமலையான், மருதாசலம், மருதன் போன்ற பெயர்கள் கோவை மாவட்டத்தில் அதிலும் மருதமலை அமைந்துள்ள அடிவாரப்பகுதி நாடாகிய ஆறை நாட்டில் வழங்கி வந்திருக்கிறது.

    5. கச்சியப்ப முனிவரால் கூறப்பட்ட மருதமலைக்கும் இன்றைக்கு நாம் பார்க்கும் மருதமலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

    அதனுடைய வளமும் உயர்வும் இன்று சிதைந்து விட்டது.

    6. விஷ்ணு முதல் இந்திராதி தேவர்களும் ஒரு காலத்திலே மருதமலைக்கு வந்து முருகனிடம் வரம் வேண்டி காத்திருந்தார்கள் என்பதற்கான கதையும் புராணச்சான்றும் இருக்கிறது.

    7. தவயோகிகளும், ஞானிகளும், தவத்திற்காகவும்-சாகாத ஜீவ சக்தி பெற்ற கல்ப மூலிகைகளுக்காகவும் மருதமலையில் வந்து தங்கியிருந்தனர்.

    8. காமதேனு வந்து உலாவி பசியாற மேய்ந்து மருத மரத்து அடியிலே இருந்து மருத தீர்த்தம் பருகியிருக்கிறது.

    9. மருதமலை பல்வேறு தீர்த்த மகிமை கொண்டது. மருத தீர்த்தம், அர்ச்சுன தீர்த்தம், கந்த தீர்த்தம், அனுமன் தீர்த்தம் சரவணப் பொய்கை ஆகியவைகள் மருதமலையிலே இருந்ததற்கான சான்றுகள் இருக்கிறது.

    10. சரவணப்பொய்கையென்பது மருதமலை முருகன் சந்நிதியில் நேர் மேற்கு இரண்டு மைல் தூரம் நடந்தால் இன்றும் இருக்கிறது.

    11. அனுமன் தீர்த்தம் என்பது முருகப் பெருமான் கோவிலில் இருந்து வடமேற்கே மூன்று மைல் தூரம் சென்று உச்சிப் பிள்ளையார் கோவிலின் கீழ் சரிவில் உள்ளது.

    12. மருதமலையில் தீர்த்தங்கள் மட்டுமின்றி ஆங்காங்கே நிறைய ஊற்றுகளும் இருந்திருக்கின்றன.

    இப்பொழுது இருக்கிற இடும்பன் கோவிலின் நேர் தெற்கே வக்கன் ஊற்று ஒன்று இருந்திருக்கிறது.

    இன்னும் பெயர் தெரியாத ஊற்றுக்கள் ஆங்காங்கே இருந்திருக்கிறது.

    13. மருதமலையில் சாகாத மூலிகைகளும் கல்ப விருட்சங்களும் வளர்ந்து சஞ்சீவிகளின் காற்றுப் பட்டு அதில் உள்ள தீர்த்தங்களும் அமிர்தம் பொருந்தியதாகவும், உடல் பிணி மனப் பிணி கர்மப்பிணி இவைகளைத் தீர்ப்பதாகவும் இருந்தது.

    14. இரவிலே மின்னலெனப் பிரகாசித்து இரவை ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்த ஜோதி விருட்சங்களும் அடர்ந்த இருளிளே பொன்னிறமாக ஒளிரும் ஜோதிப்புற்களும், நாகநந்தா, நாகதாளி போன்றவைகளும் மருதமலையில் ஒரு காலத்தில் செழித்து வளர்ந்து கிடந்தன.

    நாகதாளியின் கனிகள் பாம்புபோல படமெடுத்த வண்ணம் காய்த்து, கனிந்து நீண்டிருப்பதைக்கண்டு மயிலினங்கள் நாகப்பாம்புக் குட்டிகள் படமெடுத்து நிற்கிற தென்று நினைத்து ஓடிவந்து கொத்துமாம்.

    15. மருதமலை ஒரு மருந்து மலையாக இருந்தது என்றும் சில கதைகள் உண்டு.

    உடல் நோயைத் தீர்ப்பதற்கான தீர்த்த வளமும், மூலிகை வளமும் தன்னகத்தே கொண்டிருந்தது.

    16. மருதமலை தல விருட்சமான மருத மரத்தின் அடியிலே ஊற்றெடுக்கும் தீர்த்தத்திற்கு உடல் பிணி தீர்க்கும் சக்தியும் இதில் மூழ்கி எழுவோருக்கு உடல் சோர்வு நீங்கி சித்த சுத்தியும், நினைத்த காரியங்களை சித்திக்க வைக்கும் சக்தியும் இருந்ததால் மருத தீர்த்தம் மருதாசலம் மருதாசல மூர்த்தி என்றெல்லாம் பெயர் பெற்றது.

    17. மருதமலையில் பல இடங்களில் சோலைகள் உள்ளன. இங்கு குறிஞ்சி செடிகளும், சிறியா நங்கை, பெரியா நங்கை செடிகளும், ஊதுபாலை, நத்தைச் சூரி, முப்பிரண்டை, கல் தாமரை போன்ற அற்புத மூலிகைகளை இன்றும் காணலாம்.

    18. மருதமலை மீது வீற்றிருக்கும் முருகக் கடவுளை தரிசிக்க எண்ணூற்று முப்பத்தேழு படிகளை நாம் கடந்து செல்ல வேண்டும்.

    19. முருக தரிசனத்திற்காக நாம் பஸ்சை விட்டு இறங்கியதும் நேரே முருகனின் சந்நிதிக்குச் செல்லும் முன் வள்ளியம்மன் திண்டு என்கிற வள்ளியம்மன் ஆலயத்திற்குச் சென்று முருகனுடைய நாயகியான வள்ளியம்மனை வழிபட்டு செல்ல வேண்டியது அவசியம்.

    20. பாம்பட்டிச் சித்தர் என்பவர் சித்தர்களில் முக்கியமானவர்.

    மருதமலை வளமும் பெயரும் நிலைக்க இவர் சமாதி கொண்டது ஒரு காரணமாகும்.

    இவர் சன்னதிக்கு இன்றும் நாள்தோறும் ஒரு பெரும் வயது முதிர்ந்த பாம்பு வந்து பாலும் பழமும் சாப்பிட்டு செல்கிறது.

    இக்கோவிலை வழிபடுபவர்கள் சித்தசுத்தி மன அமைதி எதிலும் பூரணத்துவம் பெறுகின்றனர்.

    பில்லி சூனியம், ஏவல் இவைகளால் கவலைப் படுவோர் இவரிடம் முறையிட்டுக் கொண்டால் இவைகளில் இருந்து நிரந்தர விடை காண முடியும்.

    • பசும்பால் நீண்ட ஆயுள் தரும்
    • பஞ்சாமிருதம் தீர்க்காயுள், வெற்றி தரும்

    1.நன்னீர்தூய்ப்பிக்கும்

    2.நல்லெண்ணை நலம் தரும்

    3.பச்சரிசிமாகடன் தீரும் பாபநாசம்

    4.மஞ்சள் தூள் நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசு வசியம்

    5.திருமஞ்சனத்தூள் நோய் தீர்க்கும்

    6.பஞ்சகவ்யம் தீதழிக்கும் ஆன்ம சுத்தி

    7.பசும்பால்நீண்ட ஆயுள் தரும்

    8.பசுந்தயிர்மகப்பேறு வாய்க்கும்

    9.பஞ்சாமிருதம் தீர்க்காயுள், வெற்றி தரும்

    10.தேன் சுகம், சங்கீத விருத்தி

    11.நெய் சுகவாழ்வு, மோட்சம்

    12.சர்க்கரைஎதிரியை ஜெயிக்கும்

    13.இளநீர் நல் சந்ததியளிக்கும்

    14.கருப்பஞ்சாறு ஆரோக்கியமளிக்கும்

    15.நார்த்தம்பழம் சந்ததி வாய்க்கும்

    16.சாத்துக்குடி துயர் துடைக்கும்

    17.எலுமிச்சை யமபய நாசம், நட்புடை சுற்றம்

    -18.திராட்சைதிட சரீரம் அளிக்கும்

    19.வாழைப்பழம் பயிர் செழிக்கும்

    20.மாம்பழம்செல்வம், வெற்றி தரும்

    21.பலாப்பழம்மங்களம் தரும் யோக சித்தி

    22.மாதுளைபகை நீக்கும், கோபம் தவிர்க்கும்

    23.தேங்காய் துருவல்அரசுரிமை

    24.திருநீறு சகல நன்மையும் தரும்

    25.அன்னம் விளை நிலங்கள் நன்மை தரும்

    26.சந்தனம் அகம், சுவர்க்க போகம் தரும்

    27.பன்னீர் சருமம் காக்கும்

    28.கும்பஜலம்பிறவிப்பயன் அளிக்கும்

    29.சந்தாபிஷேகம் நலம் எல்லாம் அளிக்கும்

    30.ஸ்வர்ணம் (அ) ரத்னாபிஷேகம் சகல சவுபாக்கியமும் கிட்டும்.

    • இடும்பன் கோவிலுக்கு நேர் தெற்கில் கொஞ்ச தூரத்தில் வக்கன் ஊற்று ஒன்று உள்ளது.
    • பக்தர்கள் பயபக்தியுடன் இச்சுவட்டை பூஜிக்கின்றனர்.

    வக்கன் ஊற்று

    இடும்பன் கோவிலுக்கு நேர் தெற்கில் கொஞ்ச தூரத்தில் வக்கன் ஊற்று ஒன்று உள்ளது.

    அது ஒரு காலத்தில் பிரபல தீர்த்தமாக இருந்தது.

    தற்பொழுது வறட்சியால் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

    குதிரைக் குளம்பு

    இடும்பன் கோவிலைத் தாண்டியதும் குதிரைக் குளம்பு என்கிற அருட்சின்னம் மண்டபத்துடன் வெகுரம்மியமாக இருக்கிறது.

    பக்தர்கள் பயபக்தியுடன் இச்சுவட்டை பூஜிக்கின்றனர்.

    ஒரு உயரிய குத்துப்பாறையில் இயற்கையாகவே ஒரு குதிரையின் கால் குளம்படிச் சுவடு பதிந்துள்ளது.

    முருகன் நீலமேகப் புரவியிலே தன் படைகளுடன் சூரர்களை வெல்ல புறப்படும் போதோ அல்லது வென்று திரும்பி வந்தபோதோ,

    முருகனின் சீற்றம் மிக்க குதிரையின் குளம்பு அழுந்தியது என்றும் முருகன் தன் உண்டியலைத் திருடிய திருடர்களைத் துரத்திச் சென்ற போது

    படிந்த குதிரைக்குளம்பு என்றும் சொல்கிறார்கள்.

    • இந்த மேடையில் அமர்ந்து குறி சொன்னால் பலிக்கும்.
    • தெளிவில்லாத மனதில் தெளிவு பிறக்கும்.

    பதினெட்டாம் படியைக்கடந்து சென்றால் இளைப்பாறும் வசதிக்காகப் பல மண்டபங்கள் இருக்கிறது.

    புளியமரத்து மேடையும் அதில் ஒன்று.

    இந்த மேடையில் அமர்ந்து குறிசொன்னால் பலிக்கும்.

    தெளிவில்லாத மனதில் தெளிவு பிறக்கும்.

    முடிவு ஆகாத பிரச்சினையை இங்கே கொண்டு வந்து அமரவைத்து பேசினால்,

    முடிவு ஆகிவிடும் என்று கர்ண பரம்பரையாக வழங்கி வருகின்றதை சில பெரியவர்களின் வாய்மொழியாக அறியலாம்.

    இடும்பன் கோவில்

    இதையடுத்து இடும்பன் கோவில் அமைந்துள்ளது.

    இடும்பனிடம் முறையிட்டு கை கால்கள் குடைச்சல், வாத வியாதிகள், பாதவியாதிகள், தீராத வியாதிகள், குழந்தைப்பிணி ஆகியவைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.

    காரணம் முருகனின் பூரண அருள் இடும்பனுக்கு உண்டு.

    • முருகனின் திருவுருவத்தில் லயித்து அந்த முருகனின் சுந்தர வடிவத்தை பார்த்துப் பூரிக்கலாம்.
    • இந்த மூன்று கல்லும் மூன்று திருடர்கள். திருடர்களை முருகன் கல்லாக சபித்திருக்கிறார்.

    பஞ்ச விருட்சத்தை வணங்கி விட்டு கொடி கம்பத்தை தரிசித்து முருகனின் தரிசனத்திற்காக சன்னிதிக்கு செல்ல வேண்டும்.

    முருகனின் திருவுருவத்தில் லயித்து அந்த முருகனின் சுந்தர வடிவத்தை பார்த்துப் பூரிக்கலாம்.

    கொங்கு நாட்டில் இந்த மருதமலை முருகனைத்தவிர வேறு எந்த முருக தரிசனமும் இந்த வசீகரத் தன்மையைக் கொடுக்க முடியாது என்றே கூறலாம்.

    கள்வர் கல்சிலை

    பதினெட்டு படியிலிருந்து நேர் வட கிழக்காக உயரே பார்த்தால் மூன்று கல் வடகிழக்கே மலைச்சாரலில் மாறுபட்ட நிறத்துடன் தெரியும்.

    இந்த மூன்று கல்லும் மூன்று திருடர்கள். திருடர்களை முருகன் கல்லாக சபித்திருக்கிறார்.

    முன்னொரு காலத்தில் மருதமலை முருகனுக்கு ஆலயம் அமைத்துத் திருவிழா நடைபெறும் காலத்தில்

    முருகனுக்கு உண்டியலில் பொன்னும் பொருளும் காணிக்கைகளாக விழுந்து கோவிலில் பூஜைக்காக

    வெண்கல, வெள்ளி சாமான்கள் சேர்ந்திருந்ததைப் பார்த்த மூவர் நள்ளிரவில் முருகனின் உண்டியலை உடைத்தும்

    பூஜை சாமான்களையும் திருடிக்கொண்டும் வடப்புற மலைச்சரிவு வழியாக சென்றனர்.

    அவர்களின் முன் முருகன் குதிரையின் மீது அமர்ந்தபடி வேடனைப்போல் சென்று அவர்களை கல்லாக்கி விட்டார்.

    • இது ஐந்து மரங்கள் சேர்ந்த பஞ்ச விருட்ச கூட்டாகும்.
    • இந்த பஞ்ச விருட்சத்தை வழிபடுவோருக்கு ஆயுள் நீடிக்கும், பாவமும் வினையும் அற்றுவிடும்.

    இந்த அரசமரத்து மேடையில் உள்ள மரம் பிரமாண்டமானது.

    இதை பஞ்சபூத விருட்சம் எனலாம்.

    இது ஐந்து மரங்கள் சேர்ந்த பஞ்ச விருட்ச கூட்டாகும்.

    இதில் அரசு ஆல், வேம்பு, வக்கணை, நுணா ஆகியவைகள் ஒன்றாக சேர்ந்துள்ளன.

    இந்த மரத்தின் கீழ் விநாயகப்பெருமான் மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் அருகில் நாக பிரதிஷ்டையுடனும் அமர்ந்திருக்கிறார்.

    இந்த பஞ்ச விருட்சத்தை ஐந்து முறை சுற்றி யானை முகத்தனை ஐந்து கரத்தனை வழிபடுவோருக்கு

    பஞ்சபூதமும் சுத்தி பெற்று தேகம் திடமாக ஆரோக்கியமாகி ஆயுள் நீடிக்கும்.

    பாவமும் வினையும் அற்றுவிடும் என்ற ஐதீகம் உண்டு.

    • இங்குதான் மருதாசலபதியான முருகனின் ஆதி ஸ்தலம் அமைந்துள்ளது.
    • நடுப்புறம் முருகன் இருபுறமும் வெள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.

    படிக்கட்டுக்களை (837 படிகளை) ஏறி முடிந்ததும் மேற்புறம் அமைந்துள்ள மூலஸ்தானத்தை காணலாம்.

    இதுதான் பூர்வீகக்கோவில்.

    இங்குதான் மருதாசலபதியான முருகனின் ஆதி ஸ்தலம் அமைந்துள்ளது.

    ஆதிகாலத்தில் சூரர்களால் துன்பப்பட்ட தேவர்கள் சிவனாரின் வேண்டுதலுக்கு இணங்கி

    இங்கே வந்து சூரசம்ஹாரத்திற்காக முருகன் எழுந்தருளப் பிரார்த்தித்த இடம் இதுவே.

    இந்த மூலஸ்தானத்தில் மூன்று கல் ரூபமாக மூர்த்தி அமைந்துள்ளது.

    நடுப்புறம் முருகன் இருபுறமும் வெள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.

    இதைத்தான் ஆதியில் வணங்கினார்கள்.

    • இவ்விநாயகர் தானாகத் தோன்றியவர். சிற்பியால் உளிபட்டுச் செய்யப்பட்டதல்ல.
    • சில ஐயப்பன் பக்தர்கள் இந்த படிகளில் வந்து பூஜை செய்கிறார்கள்.

    மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் முதலில் நடைபாதையில் உள்ள, தான் தோன்றி விநாயகரை வழிபட வேண்டும்.

    இவ்விநாயகர் தானாகத் தோன்றியவர்.

    சிற்பியால் உளிபட்டு செய்யப்பட்டதல்ல.

    சுயம்புவாக ஒரு பாறையிலே விநாயகரின் லட்சணம் பொருந்தும்படியாக தன்னை தோன்றச் செய்து பக்தர்களை தன்பால் ஈர்த்து தனக்கு ஒரு கோவிலை கட்டிக்டகொண்டவர்.

    பதினெட்டாம்படி

    விநாயகர் தரிசனத்திற்குப்பின் நாம் தரிசிக்க வேண்டியது (18ம் படி) பதினெட்டாம்படி இந்த பதினெட்டாம் படிக்கும் முருகனுக்கும் நெருங்கிய சொந்தம் இருக்கிறது.

    சில ஐயப்பன் பக்தர்கள் இந்த படிகளில் வந்து பூஜை செய்கிறார்கள்.

    சபரிமலைக்குச் செல்ல முடியாத அன்பர்கள் இந்த பதினெட்டுப் படிகளை தரிசித்து பயன் அடைகிறார்கள்.

    இந்த படிகளிலே கற்பூர தீப வழிபாடு செய்பவர்கள் கடக்க முடியாத தடைகளை கடப்பார்கள் என்பது ஐதீகம்.

    • திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.
    • ஏராளமானவர்கள் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்றுள்ளனர்.

    திருப்புகழ் பாடினால் திருமணம்

    திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.

    இதில் "விறல் மாரனைந்து" எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும்.

    திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.

    சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ

    விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த

    மிகவானி லிருந்து வெயில் காய

    மிதவாடை வந்து தழல்போல வொன்ற

    வினைமாதர் தந்தம் வசை கூற

    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட

    கொடி தான துன்ப மயில்தீர

    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

    குறை தீர வந்து குறுகாயோ

    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து

    வழிபாடு தந்த மதியாளா

    மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச

    வடிவேலெ றிந்த அதிதீரா

    அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு

    மடியாரி டைஞ்சல் களைவோனே

    அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து

    அலைவாயு கந்த பெருமாளே!


    • ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.
    • குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.

    சஷ்டி விரத நியதிகள் II

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது.

    மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.

    விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

    ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்பப்பூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.

    உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும்.

    ×